ICC என்ற சர்வதேச நீதிமன்றத்தினால் கைது செய்யப்பட்டு ICC யின் கையில் உள்ள முன்னாள் பிலிப்பீன் சனாதிபதி Rodrigo Duterte, வயது 80, திங்கள் அங்கு இடம்பெற்ற இடைக்கால தேர்தலில் Davao என்ற நகரின் முதல்வராக வெற்றி பெறுகிறார்.
சீன சார்பு Duterte குடும்பத்துக்கு எதிராக அமெரிக்காவால் சனாதிபதியாக ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி மார்க்கோசின் மகன் Marcos Jr. அண்மையில் Duterte ஐ விமான நிலையம் ஒன்றில் வைத்து இரகசியமாக கைது செய்து நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்த கைது சட்டவிரோதமானது என்கிறது Duterte தரப்பு. Duterte சனாதிபதியாக இருந்த காலத்தில் போதை தடுப்பு நடவடிக்கைகளில் பலரை சட்டத்துக்கு அப்பால் கொலை செய்தார் என்பதே இவர் மீதான ICC யின் குற்றச்சாட்டாகும்.
தந்தை Duterte முதல்வராக வெல்லும் நகரிலேயே அவரின் அவரின் மகன் உதவி முதல்வராக வென்றுள்ளார். அதனால் தந்தை இல்லாத நிலையிலும் தந்தையின் சார்பில் மகன் ஆட்சி செய்யலாம்.
சுமார் 60% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் Duterte சுமார் 405,000 வாக்குகளை பெற்று உள்ளதாகவும், இரண்டாம் இடத்தில் உள்ளவர் 49,000 வாக்குகளை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Duterte யின் பிரதான போலீஸ் அதிகாரியாக இருந்த Ronald Rosa என்பவரும், Duterte யின் ஆலோசகராக இருந்த Christopher Go என்பவரும் கூடவே வெற்றி அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் பூட்டின், இஸ்ரேலின் நெத்தன்யாகு ஆகியோர் சுதந்திரமாக உலாவ, Duterte கைதில் இருப்பது ICC ஒரு பல்லில்லா ஏகாதிபத்திய நீதிமன்றம் என்பதை காட்டுகிறது.