Interpol மகேந்திரனுக்கு Red Notice

ArjunaMahendran

பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச போலீஸ் அமைப்பான Interpol இலங்கையின் முன்னாள் மத்திய வங்கி governor அர்ஜுன மகேந்திரனுக்கு (Arjuna Mahendran) எதிராக red notice விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி மகேந்திரனின் இருப்பிடம் அறிந்து, அவரை கைது செய்ய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.
மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி bond விற்பனை விடயத்தில் ஊழல் செய்திருந்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். இந்த ஊழல் 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் பிறந்த மகேந்திரன் ஒரு சிங்கப்பூர் குடியிருப்பாளர் ஆவார்.
.
மகேந்திரன் மீதான குற்றசாட்டுப்படி, மேற்படி bond குளறுபடி இலங்கைக்கு சுமார் $1 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் மகேந்திரன் தற்போது தலைமறைவாகி உள்ளார்.
.
மேற்படி விவகாரம் தொடர்பாக மகேந்திரனின் மருமகன் (son-in-law) Arjun Aloysius ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் Perpetual Treasuries Ltd என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆவார். இவருடன் Kasun Palisena என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
.
அப்போதைய நிதி அமைச்சர் Ravi Karunanayake மீதும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
.