அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையொப்பம்

SriLankaSouth

இன்று இலங்கை அரசும் சீன அரசும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. இலங்கை அரசு சார்பில் Sri Lanka Ports Authorityயும் சீனா சார்பில் China Merchants Ports Holdingsம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன.
.
நீண்டகால இழுபறிக்கு பின் முடிவுக்கு வந்த இந்த புதிய ஒப்பந்தப்படி சீனா வரும் 99 வருடங்களுக்கு இத்துறைமுகத்தின் 70% உரிமையை கொண்டிருக்கும். இலங்கை மிகுதி 30% உரிமையை கொண்டிருக்கும். அத்துடன் சீனா தலைமையில் இடம்பெறவுள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்கு மேலும் 15,000 ஏக்கர் (60 சதுர km) நிலம் வழங்கப்படும். இதற்கு சுமார் $600 மில்லியன் முதலீட்டையும் சீன செய்யும்.
.
இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கான சீனாவின் பெருமளவு கடன் சீனாவுக்கான சொத்து உரிமை ஆக்கப்பட்டு உள்ளது.
.
அதேவேளை இந்த ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கை சுமார் $1.1 பில்லியன் பெறும், இந்த பணம் இலங்கையின் ஏனைய கடன்களை அடைக்க உதவும்.
.
இந்த துறைமுகம் சீனாவின் one-belt-one-road திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த துறைமுகம் சீனாவின் படைகளால் பயன்படுத்தப்படும் என்று அச்சம் தெரிவித்து இருந்தன. அதனால் சீனா இந்த துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கைக்கும் இணங்கி உள்ளது.
.