இரண்டு சோமாலியா குண்டுகளுக்கு 276 பேர் பலி

Somalia

சனிக்கிழமை சோமாலியாவில் வெடிக்க வைக்கப்பட்ட இரண்டு truck குண்டுகளுக்கு குறைந்தது 276 பேர் பலியாகியும், 300 பேருக்கும் மேலானோர் காயப்பட்டும் உள்ளார். இரண்டு truck குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டாலும், முதலாவது குண்டுக்கே பலரும் பலியாகி உள்ளனர்.
.
Mogadishu என்ற சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற இந்த இரட்டை குண்டு தாக்குதல் Safari என்ற விடுதிக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் ஜனாதிபதி Mohamed Abdullahi Mohamed இந்த குண்டுகளுக்கு al-Shabab என்ற அல்கைடா ஆதரவு குழுவே காரணம் என்றுள்ளார். இவர் ஒரு சோமாலியா-அமெரிக்கா பிரசையும் ஆவார்.
.
செஞ்சிலுவை சங்கமும், Red Crescent சங்கமும் பலியானோரில் 5 பேர் தமது ஊழியர்கள் என்றுள்ளன.
.
2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும், சுமார் 22,000 African Union படையினரும் al-Shabab என்ற குழுவை அழிக்க பல முனைகளில் தாக்குதல்கள் செய்து வருகின்றனர்.

.