இலங்கையை நோக்கி வரும் அடுத்த தாழமுக்கம்

இலங்கையை நோக்கி வரும் அடுத்த தாழமுக்கம்

இலங்கையை நோக்கி அடுத்த தாழமுக்கம் வருகிறது. தற்போது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள இந்த தாழமுக்கம் ஓரிரு  தினங்களில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தரை தட்டலாம்.

இது தமிழ்நாட்டின் பகுதிகளையும் தாக்கும். இந்த மழை 3 அல்லது 4 தினங்களுக்கு நீடிக்கலாம்.

இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் காற்று வீச்சு சுமார் 55 km/h ஆக இருக்கும்.

மன்னார் வளைகுடா பகுதியிலும் இந்த சூறாவளி உக்கிரமாக இருக்கும். இங்கு கடலில் காற்று வீச்சு சுமார் 45 km/h ஆக இருக்கும்.

சென்னையில் உள்ள Regional Meteorological Centre அறிவித்தலின்படி இந்த புயல் ராமநாதபுரம் முதல் கடலூர் வரையான கரையோர பகுதிகளையும், புதுக்கோட்டை , தஞ்சாவூர் போன்ற உட்பகுதிகளையும் டிசம்பர் 19ம், 20ம் திகதிகளில் கடுமையாக தாக்கும்.