இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்கள் தொடரும் யுத்தம் 

இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்கள் தொடரும் யுத்தம் 

இஸ்ரேல் மிக நீண்ட காலமாக திட்டமிட்டு செய்த ஈரான் மீதான தாக்குதல் இஸ்ரேலின் கணிப்பை மீறி 4 தினங்களாக தொடர்கின்றது. அதனால் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீண்டும் இஸ்ரேலின் உதவிக்கு வரவேண்டிய நிலை ஏற்படலாம்.

ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலில் பலியானோர் தொகை 24 ஆக அதிகரித்துள்ளது மட்டுமன்றி ஈரான் தொடர்ந்தும் இஸ்ரேலை தாக்கி வருகிறது. ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பு முற்றாக தடுக்க முடியாது உள்ளது.

ஈரான் தரப்பில் 224 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் இரு தரப்பிலும் சொத்துக்களின், உடமைகளின் அழிவுகள் பலமாக அதிகரித்துள்ளன.

ஈரானின் Natanz அணுமின் உலையை இஸ்ரேல் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறினாலும் ஐ.நாவின் அணுமின் அமைப்பான IAEA Natanz நிலையம் மீதான தாக்குதல் மேற்பரப்பு பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தி உள்ளது என்கிறது. இந்த அணுமின் நிலையம் நிலத்துக்கு கீழ் பல மீட்டர் ஆழத்தில் உள்ளது.