ஈரான் யுத்தம் அமெரிக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் 

ஈரான் யுத்தம் அமெரிக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் 

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆரம்பித்த யுத்தம் முடிவின்றி தொடர, ஹோர்முஸ் பாதை மூடப்பட, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட, Exxon, Chevron போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைகின்றன.

Exxon இந்த ஆண்டின் இரண்டாம் வர்த்தக காலாண்டில் $14.5 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது. அதாவது தினமும் $160 மில்லியன் இலாபம் அடைந்துள்ளது.

இந்த இலாபம் கடந்த ஆண்டு, ஈரான் மீதான யுத்தத்துக்கு முன், இரண்டாம் காலாண்டில் Exxon அடைந்த இலாபத்தின் இரண்டு மடங்கிலும் அதிகம்.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய எரிபொருள் நிறுவனமான Chevron இரண்டாம் காலாண்டில் $12.1 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது. Chevron கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் அடைந்த இலாபம் $2.5 பில்லியன் மட்டுமே. அதாவது இலாபம் இம்முறை சுமார் 5 மடங்கு.

British Petroleum இரண்டாம் காலாண்டில் $5.73 பில்லியன் இலாபம் அடைந்துள்ளது. அதுவும் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் தொகையிலும் இரண்டு மடங்கு அதிகம்.