காசா, லெபனான் போன்று இஸ்ரேலிலும் இடியும் கட்டிடங்கள் 

காசா, லெபனான் போன்று இஸ்ரேலிலும் இடியும் கட்டிடங்கள் 

இதுவரை காலமும் இஸ்ரேலின் மேலோங்கிய ஆயுத கையிருப்பு காரணமாக காசா, லெபனான், சிரியா போன்ற இடங்களிலேயே குடியிருப்பு மற்றும் பொது கட்டிடங்கள் இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக இடிந்து தரைமட்டம் ஆகின. ஆனால் ஈரானின் பதிலடி தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக இஸ்ரேல் வீடுகளும், கடிதங்களும் முதல் முறையாக தரைமட்டம் ஆகி வருகின்றன.

வெள்ளிக்கிழமை ஈரானை இஸ்ரேல் திடீரென தாக்கிய பின் ஈரான் செய்யும் பதிலடி தாக்குதல்கள் இஸ்ரேலோ, மேற்கோ எதிர்பாராத அளவில் இஸ்ரேலில் அழிவுகளை ஏற்படுத்துகின்றன. ஈரான் இஸ்ரேலின் தடுப்பு ஏவுகணைகளுக்கு அகப்படாத புதிய வகை ஏவுகணைகள் பயன்படுத்துவதே இதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

ஈரானின் ஏவுகணைகள் வரும்போது மக்கள் உடனைடியாக பதுங்கு குழிகளுக்கு சென்றதால் இஸ்ரேலில் சுமார் 13 பேர் மட்டுமே பலியானதாக இஸ்ரேல் கூறுகிறது. காயமடைந்தோர் தொகை 380 ஆக உள்ளது. ஆனால் இம்முறை இஸ்ரேலில் நாடளாவிய அளவில் இடிபாடுகள் தொகையாக உள்ளன. அதேவேளை ஈரானில் 78 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

முன்னைய இரண்டு சண்டைகளில் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் ஈரானின் ஏவுகணைகளை தமது யுத்த விமானங்கள், தடுப்பு ஏவுகணைகள் கொண்டு இடைமறித்து தாக்கி இஸ்ரேலுக்கு உதவின. இம்முறை இதுவரை இந்த நாடுகள் இஸ்ரேலின் உதவிக்கு வரவில்லை.

இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியாத பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஈரானுடன் பேச்சுக்களை செய்ய தயாராக இருப்பதாக ஜெர்மன் வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.