கொழும்பு துறைமுகத்தில் இருந்து மும்பாய் சென்ற 269 மீட்டர் நீளம் கொண்ட MV Wan Hai என்ற கொள்கலன் கப்பல் தென் இந்திய கேரளா மாநிலத்துக்கு அருகே பயணிக்கையில் தீ பற்றிக்கொண்டது.
திங்கள் இந்த கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்று வெடித்ததாகவும் அதன் பின் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது.
விபத்தின் பின் 18 பணியாளர் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேரின் இருப்பிடம் இதுவரை அறியப்படவில்லை. இந்த நால்வரில் 2 பேர் தாய்வான் பணியாளர்கள், ஒருவர் பர்மா பணியாளர், மற்றவர் இந்தோனேசியர்.
இந்த கப்பலில் இருந்து ஏற்கனவே 50 கொள்கலன்கள் கடலுள் விழுந்து உள்ளதாக கேரளா அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த கடல் பகுதில் MSC Elsa 3 இன்னோர் கப்பல் அதில் இருந்த 640 கொள்கலன்களுடன் கடந்த மாதம் கடலுள் மூழ்கி இருந்தது.