சவுதியின் துருக்கி தூதரகத்துள் பத்திரிகையாளர் கொலை?

JamalKhashoggi

துருக்கியின் (Turkey) தலைநகர் இஸ்தான்புல்லில் (Istanbul) உள்ள சவுதியின் தூதரகத்துள் வைத்து சவுதி பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Jamal Khasgoggi என்ற அமெரிக்காவின் The Washington Post பதிக்கையாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம்.
.
சவுதியை சார்ந்த இந்த பத்திரிகையாளர் தற்போதைய சவுதி அரசுக்கு பாதகமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அதனால் சவுதி அரசின் மிரட்டலுக்கு உள்ளான இவர், 2017 ஆம் ஆண்டு முதல் சவுதி செல்லாது அமெரிக்காவிலேயே தங்கி இருந்துள்ளார்.
.
மேற்படி பதிக்கையாளர் முதலில் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி தனது சவுதி ஆவணம் ஒன்றை பெறுவதற்காக துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்துக்கு சென்றுள்ளார். பின் கடந்த செவ்வாய்க்கிழமையும் அவர் பிற்பகல் சுமார் 1:30 அளவில் அந்த தூதரகம் சென்றுள்ளார். அதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளார்.
.
சவுதி தூதரகம் தனது கூற்றில் Jamal Khasgoggi தூதரகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக கூறியுள்ளது. அதை துருக்கி போலீசார் மறுக்கின்றனர்.
.
துருக்கி போலீசார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதியில் இருந்து வந்த படுகொலைக்கு காரணமான 15 பேரும் தற்போது துருக்கியை விட்டு வெளியேறி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

.