சிட்னியில் கத்தி குத்துக்கு 6 பேர் பலி

சிட்னியில் கத்தி குத்துக்கு 6 பேர் பலி

அஸ்ரேலியாவின் சிட்னி (Sydney) நகரில் இடம்பெற்ற கத்தி குத்துக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். Bondi Junction என்ற இடத்தில் உள்ள Westfield Shopping Centre என்ற வியாபார நிலையத்திலேயே இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்துள்ளது.

இதை தனி ஒருவரே செய்ததாகவும் அந்த 40 வயது சந்தேக நபரை அங்கு விரைந்த முதல் போலீசார் சுட்டு கொன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில காயமடைந்தோர் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுகின்றனர். அதில் ஒரு 9 மாத குழந்தையும் அடங்கும்.