செவ்வாய் கிரகத்தில் இருந்து கல், மண் போன்ற மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் முயற்சியை அமெரிக்காவின் ரம்ப் அரசு செலவு காரணமாக கைவிட, சீனா இதற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறது. அதனால் சீனாவே செவ்வாய் கிரக மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் முதல் நாடாகலாம்.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் இணைந்து செய்த ஆய்வு கணிப்பு 2040ம் ஆண்டில் செவ்வாய் மாதிரியை எடுத்து வர குறைந்தது $11 பில்லியன் செலவாகும் என்று கூறுகிறது.
ஆனால் சீனா 2028ம் ஆண்டு Tianwen-3 திட்ட கலம்களை ஏவி, 2031ம் ஆண்டு 500g செவ்வாயின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர உள்ளது. செவ்வாயின் மேற்பரப்பு மாதிரி மட்டுமன்றி, 2 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தை குடைந்து 2 மீட்டர் ஆழத்து மாதிரியையும் எடுத்துவர உள்ளது சீனா.
இந்த மாதிரியில் சிறு உயிரினங்கள் இருந்தால் அவற்றை பாதுகாக்கவும், மறுபுறம் அவற்றில் இருந்து பூமியை பாதுகாக்கவும் அவற்றை கொண்டிருக்க சீனா விசேட ஆய்வுகூடம் ஒன்றை அமைத்து வருகிறது.
தற்போது செவ்வாயில் வலம்வரும் அமெரிக்காவின் Perseverance என்ற rover செவ்வாயின் மாதிரிகளை தன்னகத்தே சேமித்தாலும், அவற்றை பூமிக்கு எடுத்து வரும் திட்டம் அமெரிக்காவிடம் தற்போது இல்லை.