அமெரிக்க சனாதிபதி தென்னாபிரிக்க சனாதிபதி Cyril Ramaphosa வை பேச்சுவார்த்தை என்ற போர்வையில் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவமானப்படுத்த முயன்றாலும் தற்போது அவமானப்படுவது ரம்பே. அதற்கு காரணம் ரம்ப் பயன்படுத்திய பொய்யான தரவுகளே.
Ramaphosa விடம் ரம்ப் ஒரு படத்தை காட்டி அதில் காணப்பட்ட பைகளில் இருந்த சடலங்கள் தென்னாபிரிக்க வெள்ளையரின் சடலங்கள் என்றும் அவர்கள் கருப்பர்களால் படுகொலை செய்யப்பட்டவர் என்றும் ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் அந்த படம் ஒரு வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட screenshot என்றும், அந்த வீடியோ தமது வீடியோ என்றும் Reuters செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் அந்த வீடியோ Goma என்ற Congo நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் பிடிக்கப்பட்டது என்றும் அந்த படுகொலைகளை செய்தவர் M23 என்ற ஆயுத குழு என்றும் Reuters கூறியுள்ளது.
ரம்ப் பல்லாயிரம் சிலுவைகள் வீதியோரம் புதைக்கப்பட்ட இன்னோர் படத்தை காட்டி அது கருப்பர்களின் genocide க்கு பலியான வெள்ளையர்களின் burial site என்று கூறியுள்ளார். ஆனால் அவை 5 ஆண்டுகளுக்கு முன் இரண்டு வெள்ளையர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் நோக்கில் புதைக்கப்பட்ட பொய்யான சிலுவைகளே. ஆர்ப்பாட்டத்தின் பின் அவை அகற்றப்பட்டுள்ளன. மேற்படி கொலையை செய்த இருவர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.