இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இராணுவ தாக்குதல்கள் தொடர்கின்றன. இரு தரப்பும் தமது இழப்புகளை முடிந்தவரை மறைத்தும், எதிரி தரப்பு இழப்புகளை விபரித்து செய்திகளை வெளியிடுகின்றன.
பாகிஸ்தான் இந்திய இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் செய்துள்ளதாக இந்தியா கூறுகிறது. ஆனால் தாம் அவ்வாறு செய்யவில்லை என்கிறது பாகிஸ்தான். பதிலுக்கு தாம் எல்லைகளில் மட்டும் 40 முதல் 50 வரையிலான இந்திய படையினரை கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.
இந்தியாவின் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் 31 பொதுமக்கள் பலியானதாக கூறுகிறது பாகிஸ்தான். ஆனால் அவர்களின் இராணுவ இழப்புகளை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.
காஷ்மீரில் மட்டுமன்றி பாகிஸ்தான் புஞ்சாப் மாநிலத்திலும் தாக்குதல்களை செய்துள்ளது. தற்போது அங்கு பாடசாலைகள் 3 விடுமுறையில் உள்ளன. மின் சேவை தடைப்பட்டு உள்ளதால் புஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான் பகுதிகள் இருளில் உள்ளன.
பாகிஸ்தான் ஏற்கனவே தாம் இந்திய யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறியிருந்தாலும், இந்திய அது தொடர்பாக இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. அனால் அமெரிக்கா குறைந்தது 2 இந்தியாவின் பிரெஞ்ச் Rafale வகை யுத்த விமானம் சுடப்பட்டு உள்ளதாக கூறுகிறது. பாகிஸ்தான் சீனாவின் புதிய J-10 வகை யுத்த விமானங்களை பயன்படுத்தி இருக்கும்.
Rafale சுடப்பட்டு இருந்தால் அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிரான்சுக்கும் பெரும் நெருக்கடியாகும். Rafale பிரான்சின் முதல் தர யுத்த விமானம் ஆகும். கடந்த மாதமே இந்தியா மேலும் 26 புதிய இவ்வகை விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.
Rafale சுடப்பட்டது உண்மை என்றால் அதில் சீனாவின் கைவரிசை இருந்திருக்கும். பாகிஸ்தானிடம் அவ்வகை வல்லமை இல்லை. Rafale ஒரு முழு அளவிலான stealth (ரேடார்களில் இருந்து மறையும் வல்லமை கொண்ட) யுத்த விமானம் அல்ல.
மறுபுறம் அமெரிக்க உதவி சனாதிபதி JD வன்ஸ் இந்திய-பாகிஸ்தான் யுத்தம் அமெரிக்காவின் யுத்தம் அல்ல என்று கூறியதும் இந்தியாவுக்கு ஒரு அவமானம். சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பை தேடும் அமெரிக்கா இந்தியாவுக்கு இடர் வந்த போது விலகி நிற்பது நல்லதல்ல.