மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு 60 பேர் பலி

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு 60 பேர் பலி

மாஸ்கோ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி மற்றும் குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 60 பேர் பலியாகியும், 100 க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர்.

இஸ்லாமிய ஆயுத குழுவான ISIS தாமே இந்த தாக்குதலை செய்ததாக உரிமை கொண்டாடி உள்ளது.

Crocus City Center என்ற இசை நிகழ்ச்சி மண்டபமும் அதனுடன் இணைந்து உள்ள shopping mall உம் தீ பற்றி உள்ளது.

இவ்வாறு ISIS தாக்குதல் ஒன்றை செய்ய திட்டமிடுகிறது என்று அமெரிக்கா ரஷ்யாவுக்கு தகவல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த எச்சரிக்கையை பூட்டின் அவசியமற்ற மிரடடல் என்று கூறி புறக்கணித்து இருந்தார்.