யூக்கிறேனை இலகுவில் தாக்கி அடக்கி விடலாம் என்று ரஷ்ய சனாதிபதி பூட்டின் கொண்டிருந்த கனவு தொடர்ந்தும் பாரிய தோல்விகளை தழுவுகிறது.
ஜூன் 1ம் திகதி யூக்கிறேன் ரஷ்யாவுள் ஆழ ஊடுருவி தனது drone மூலமான தாக்குதல்களை செய்துள்ளது. ரஷ்யா தான் ஆரம்பித்த யுத்தத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவது அவமானமே.
யூக்கிறேனில் இருந்து சுமார் 4,000 km தொலைவில் ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள Belaya என்ற விமானப்படை தளம் மீது இடம்பெற்ற தாக்குதல் வியப்புக்கு உரியவற்றில் ஒன்று. இங்கு பயன்படுத்தப்பட்ட drone கள் எல்லை ஊடு கடத்தப்பட்டு, சுமார் 4,000 km ரஷ்யாவுள் நகர்த்தப்பட்டு, விமானப்படை தளத்துக்கு அருகில் இருந்தே ஏவப்பட்டு உள்ளான.
பல மாதங்களாக செய்யப்பட்ட இந்த நகர்வுகளை ரஷ்யா அறியாது இருந்தமை அவமானமே.
பூட்டினை வெறுக்கும் சில ரஷ்யர்களை யூக்கிறேன் இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தியிருக்க கூடும்.
இந்த தாக்குதல்களுக்கு ரஷ்யாவின் Tu-95, Tu-22M வகை குண்டு வீச்சு விமானங்கள் இரையாகின.
சோவியத் உடைந்த கால தலைமைகளோ அல்லது பின் வந்த ரஷ்ய தலைமைகளோ ரஷ்யாவை வளர்க்காது தம்மை மட்டும் வளர்த்து கொண்டதாலேயே ரஷ்யாவுக்கு இந்நிலை தோன்றியுள்ளது.