யுத்த விமான இழப்பை ஏற்று கொண்ட இந்திய ஜெனரல் 

யுத்த விமான இழப்பை ஏற்று கொண்ட இந்திய ஜெனரல் 

அண்மையில் இந்தியா பாகிஸ்தானுடன் செய்த யுத்தத்தின் முதல் நாளே இந்தியா பல யுத்த விமானங்களை இழந்திருந்தது என்பதை இந்தியாவின் முப்படை தலைமை அதிகாரி General Anil Chauhan ஏற்றுக்கொண்டுள்ளார். 

ஆனாலும் அவர் எத்தனை இந்திய விமானங்கள் சுடப்பட்டன, எவ்வகை விமானங்கள் சுடப்பட்டன என்பதை விபரமாக தெரிவிக்கவில்லை.

சிங்கப்பூரில் இடம்பெறும் பாதுகாப்பு தொடர்பான Shangri-La Dialogue அமர்வில் Bloomberg செய்தி நிறுவனம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு Chauhan “The more important question is not whether jects were shot down, but why they were shot down.” என்று பதில் கூறியுள்ளார்.

முதல் நாளே இந்தியா குறைந்தது 6 யுத்த விமானங்களை இழந்து என்றும் அதில் 3 பிரான்ஸ் தயாரித்த Rafale வகை யுத்த விமானங்கள் என்றும் கூறப்படுகிறது.