ரம்ப் காட்டில் மழை, அது அமெரிக்காவுக்கு நயமா, அழிவா?

ரம்ப் காட்டில் மழை, அது அமெரிக்காவுக்கு நயமா, அழிவா?

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தொட்டதெல்லாம் பொன் ஆகவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்தும் விரும்பிய எல்லாவற்றையும் தொட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்நிலை அமெரிக்காவுக்கு நயமாகுமா அல்லது அழிவை ஏற்படுத்துமா என்பதை 10 அல்லது 20 ஆண்டுகள் சென்ற பின்னரே அறிய முடியும்.

அண்மையில் ரம்ப் ஈரானின் அணு உலைகள் மீது குண்டு வீச அமெரிக்க சட்டப்படி காங்கிரஸிடம் உரிமை பெறப்படவில்லை. இந்த குண்டு வீச்சு தற்போது ஓரளவு தோல்வியிலேயே முடிந்துள்ளது. அத்துடன் சீனா போன்ற எதிரிகளும் இந்த குண்டின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிய முடிந்துள்ளது. ஆனாலும் ரம்பை தட்டி கேட்க யாருமில்லை.

இன்றும் அமெரிக்கா அதி உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றங்கள் ரம்பை கட்டுப்படுத்துவதை விலக்கி ரம்பின் கையை பலப்படுத்தி உள்ளது. 

காரணம் ரம்புக்கு சாதகமாக நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே கோட்டுக்கு வந்துள்ளன.

அமெரிக்காவில் 3 அரச அங்கங்கள் உண்டு. அங்கு சர்வாதிகாரங்கள் தலை தூக்குவதை தடுக்கவே இவ்வாறு அரச கட்டமைபு நடைமுறை செய்யப்பட்டுள்ளது. ரம்புக்கு வசதியாக மேற்படி 3 அங்கங்களும் தற்போது ரம்ப் கட்சியான Republican கையில் உள்ளன.

முதலாவது அமெரிக்க சனாதிபதி. அது ரம்ப், ஒரு Republican கட்சி உறுப்பினர். அமெரிக்க சனாதிபதி யுத்தங்கள் செய்ய காங்கிரசின் அனுமதி தேவை.

இரண்டாவது அமெரிக்க காங்கிரஸ். இதில் 2 சபைகள் உண்டு; ஒன்று House மற்றையது Senate. தற்போது அவை இரண்டும் Republican கையில் உள்ளன. House இல் 220 Republican உறுப்பினரும், 212 Democratic கட்சி உறுப்பினரும் உள்ளனர். அதனால் Democratic கட்சியினர் இங்கு எதையும் செய்ய முடியாது.

Senate இல் 53 Republican கட்சி உறுப்பினர்களும், 47 Democratic கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். இங்கேயும் Democratic கட்சி எதையும் செய்ய முடியாது.

மூன்றாவது அமெரிக்காவின் அதி உயர் நீதிமன்றம் (Supreme Court of the United States). இதில் தற்போது 9 நீதிபதிகள் உள்ளனர். அதில் 6 பேர் Republican கட்சியால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள். அதிலும் 3 பேர் (Gorsuch, Kavanaugh, Barrett) ரம்பால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள். இங்கேயும் ரம்பின் கை பலமாக உள்ளது.

இவ்வாறு மிதமிஞ்சிய பலம் ரம்ப் போன்ற ஒருவருக்கு வழங்கப்பட்டல் அந்த நாட்டின் நிலை என்னவாகும்? காலம் தான் பதில் சொல்லும்.