வியட்நாமில் $44 பில்லியன் திருடியவருக்கு மரண தண்டனை

வியட்நாமில் $44 பில்லியன் திருடியவருக்கு மரண தண்டனை

வியட்நாமில் $44 பில்லியன் திருடிய Truong My Lan என்ற 67 வயது billionaire பெண்ணுக்கு இன்று வியாழன் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவருடன் மொத்தம் 85 சந்தேக நபர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வீடு கட்டுமான வர்த்தகம் செய்த இவர் Saigon Commercial Bank என்ற வங்கியில் இருந்து 11 ஆண்டு கால இடைவெளியில் $44 பில்லியன் கடன் பெற்றுள்ளார். ஆனால் அந்த பணம் தற்போது மீட்கப்பட முடியாது உள்ளது.

2011ம் ஆண்டு முறிய இருந்த 3 சிறிய வங்கிகளை இணைத்து Saigon Commercial Bank என்ற வங்கி உருவாக இவர் காரணமாக இருந்தார்.

வியட்நாமில் வங்கி ஒன்றின் 5% இக்கு மேற்பட்ட உரிமையை தனி நபர் ஒருவர் கொண்டிருக்க முடியாது. ஆனால் இந்த பெண் பொய்யான நிறுவனங்கள் மூலம் Saigon Commercial வங்கியின் 90% உரிமையை கொண்டிருந்தார்.

அத்துடன் Saigon வங்கி வழங்கிய கடன்களில் 93% கடன் இவருக்கே சென்றுள்ளது.

தான் அகப்படாது இருக்க இவர் பலருக்கும் தாராளமாக இலஞ்சம் வழங்கியுள்ளார்.