Air India விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று (flight AI171) இந்தியாவின் குஜராத் மாநில அகமதாபாத் (Ahmedabad) நகரில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் (Gatwick) நகருக்கு பயணிக்க ஏறும்போது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:38 மணிக்கு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்துக்கு சுமார் 250 பேர் வரை பலியாகினர்.
விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. விபத்துக்கு உள்ளான Boeing 787-8 Dreamliner வகை விமானம் இதுவரை காலமும் பாரிய விபத்து எதிலும் அகப்பட்டு இருக்கவில்லை. இவ்வகை விமானம் ஒரு தரமான விமானமாகவே கருதப்பட்டது.
இந்த விமானம் விழுந்த இடத்தில் ஒரு மருத்துவ மாணவர் விடுதி இருந்ததால் அவர்களில் சிலரும் பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அரச விமான சேவையான Air India வை 2022ம் ஆண்டு Tata நிறுவனம் கொள்வனவு செய்திருந்தது. மரணித்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 1 கோடி இந்திய ரூபாய்கள் ($116,868) வழங்க Tata அறிவித்துள்ளது.
நீண்ட தூரம் பயணிக்க இருந்ததால் இந்த விமானத்தில் அதிக அளவு எரிபொருள் இருந்துள்ளது.
இந்த விமானம் மேலே எற முடியாது சிரமப்பட்டத்தை சில வீடியோக்கள் காண்பிக்கின்றன. விபத்துக்கு முன் இது சுமார் 625 அடி உயரத்துக்கு மட்டுமே மேலே சென்றுள்ளது. விபத்துக்கு முன் விமானி ஆபத்து தொடர்பான அறிவிப்பு ஒன்றை செய்திருந்தார். பின்னர் தொடர்பு அற்று போயிருந்தது.
இதில் 169 இந்தியர், 53 பிரித்தானியர், 7 போர்த்துக்கல் நாட்டவர், 1 கனேடியர் ஆகியோர் பயணித்துள்ளனர்.