சீனாவின் AVIC Chengdu Aircraft நிறுவதின் பங்கு சந்தை பெறுமதி Shenzhen பங்கு சந்தையில் இந்த கிழமை சுமார் 40% ஆல் அதிகரித்து உள்ளது. இதன் பெறுமதி புதன் கிழமை மட்டும் 17% ஆல் அதிகரித்து உள்ளது. மறுதினம் வியாழன் மேலும் 20% ஆல் அதிகரித்து உள்ளது.
அதற்கு காரணம் இந்த நிறுவனம் தயாரித்து பாகிஸ்தானுக்கு வழங்கிய யுத்த விமானமான J-10 வகை யுத்த விமானங்கள் புதன்கிழமை 3 பிரான்ஸ் தயாரித்த Rafale வகை யுத்த விமானங்களையும், 1 ரஷ்யா தயாரித்த MiG-29 வகை யுத்த விமானத்தையும், மேலும் 1 Su-30 வகை யுத்த விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது என்று கூறப்படுவதாலேயே.
தாம் இத்தொகை விமானங்களை இழந்ததை இந்தியா இதுவரை ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை. இந்தியா இதை மறுக்காமை சந்தேகத்தை வலுக்க வைக்கிறது. அனால் பாகிஸ்தானும் ஆதாரங்களை வெளியிடவில்லை. சிலவேளை இவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மண்ணில் விழுந்து இருக்கலாம். அமெரிக்கா 2 இந்திய விமானங்கள் விழுந்ததை அறிந்துள்ளது.
பாகிஸ்தான் அன்றைய தினம் தமது தரப்பில் சுமார் 125 யுத்த விமானங்கள், 160 km நீள எல்லையோரம் யுத்தம் செய்ததாக கூறியுள்ளது.
இந்த யுத்தத்தை இந்தியாவும், பாகிஸ்தானானும் செய்தாலும், இது கடந்த 40 ஆண்டுகளில் வளர்ந்த சீன இராணுவ தளபாட தாயரிப்புகளின் முதல் அசல் யுத்த பரிசோதனையாக மாறியுள்ளது. அதையே மேற்கு அரசுகளும், இராணுவங்களும் கண்காணித்து வருகின்றன.
இலங்கையில் யுத்தம் ஆரம்பித்த காலத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கை பொம்மையாக இருந்தது. ஆனால் சீனா வளர, அமெரிக்கா பாகிஸ்தானை கைவிட்டு இந்திய உறவை வளர்த்தது. தற்போது பாகிஸ்தானின் ஆயுதங்களில் 81% சீனாவில் இருந்து பெறப்படுவதாக நோர்வே ஆய்வு நிறுவனமான SIPRI கூறியுள்ளது.
1947ம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த இந்தியாவும், பாகிஸ்தானும் 3 பெரிய யுத்தங்களை செய்திருந்தன.
சீனாவின் J-10 வகை யுத்த விமானம் 4.5 ஆம் சந்ததி யுத்த விமானமாக (4.5 generation) கருதப்படுகிறது. அமெரிக்காவின் F-35, சீனாவின் J-20 ஆகியன 5ம் சந்ததி யுத்த விமானங்களாக கருதப்படுகின்றன. சீனாவிடம் தற்போது 6ம் சந்ததி யுத்த விமானங்கள் உண்டு.
இந்திய-பாகிஸ்தான் யுத்தம் மேற்கின் ஆயுதங்களை நம்பி இருக்கும் தாய்வானையும் கவலை கொள்ள வைத்திருக்கும்.