காசாவில் war crime என்கிறார் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் 

காசாவில் war crime என்கிறார் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் 

காசாவில் இடம்பெறுவது war crime என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Olmert (2006 – 2009). 

இவர் இஸ்ரேலில் வெளியாகும் Haaretz என்ற பத்திரிகைக்கு காசா யுத்தம் தொடர்பாக எழுதிய கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு  சாடியுள்ளார். பின்னொரு கூற்றில் “What is it if not a war crime?” என்று கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் Olmert.

காசா யுத்த ஆரம்பத்தில் இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு பலஸ்தீனரை வதைக்காது என்று கூறிய Olmert தற்போது காசாவில் இஸ்ரேல் செய்யும் குற்றங்களை மறுக்க முடியாததால் மனம் மாறியுள்ளார்.

இஸ்ரேல் காசா மீது கடந்த 11 கிழமைகளாக நடைமுறை செய்துவரும் உணவு மற்றும் மருந்து தடைகளையும் சாடியுள்ளார் Olmert.