இஸ்ரேல் ஈரான் மீது வெள்ளி செய்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலின் Tel Aviv, Jerusalem போன்ற இடங்களில் பல ஈரானிய ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களின் முழு சேத விபரம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் கூறியுள்ளார். இஸ்ரேலின் Gush Dan பகுதியில் 34 பேர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னைய சண்டையில் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்காவும் பல மேற்கு நாடுகளும் தமது யுத்த விமானங்கள், ஏவுகணைகள் கொண்டு தடுத்து இருந்தன. ஆனால் இம்முறை அவ்வாறு செய்யப்பட்டதாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஈரானின் அணு உலை மீது தாக்குதல் செய்தமை மூலம் இஸ்ரேல் இன்னோர் “red line” ஐ தாண்டி உள்ளது என்று சீனா சாடியுள்ளது.
இரு தரப்பும் தமது தாக்குதல்களை தொடர்கின்றன.
இந்த தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் விலை 8% ஆல் அதிகரித்து உள்ளது.
மத்திய கிழக்கு ஊடான விமான போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
