ரம்பின் காசா திட்டத்துக்கு ஐ.நா. முத்திரை பதிக்க முனைப்பு 

ரம்பின் காசா திட்டத்துக்கு ஐ.நா. முத்திரை பதிக்க முனைப்பு 

அக்டோபர் மாதம் 8ம் திகதி அமெரிக்க சனாதிபதி ரம்ப் முன்வைத்த பலஸ்தீனர் விரோத, இஸ்ரேல் சார்பு காசா சமாதான திட்டத்துக்கு ஐ.நா. அங்கீகாரம் பெற்று ஐ.நா. முத்திரையுடன் ரம்ப் காசாவில் தான் நினைத்ததை செய்ய முனைகிறார். ரம்பின் இந்த முயற்சியை ரஷ்யாவும், சீனாவும் தடுக்கின்றன.

ரம்ப் தனது தலைமையில் Board of Peace என்ற குழுவை அமைத்து, அதற்கு உதவ அமெரிக்க சார்பு நாடுகளை கொண்ட தற்காலிக International Stabilization Force (ISF) அமைத்து, அதன் மூலம் ஹமாஸை அழித்து, இதை எல்லாம் ஐ.நாவின் மேற்பார்வை இன்றி செய்து 2027ம் ஆண்டு இறுதிவரை காசாவை ஆழ முனைகிறார். ஏனைய விசயங்கள் திட்டமிட்டு தெளிவற்ற முறையில் ரம்பின் திட்டத்தில் கூறப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை ரம்ப் தரப்பு வியாழன் 15 உறுப்பினர் நாடுகளை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வழங்கி ஆதரவு கேட்டுள்ளது. ஆனால் வீட்டோ வாக்கு பலம் கொண்ட ரஷ்யாவும், சீனாவும் ஐ.நா. மேற்படி திட்டத்தை மீள் வரைய கூறியுள்ளது. காசா கட்டுப்பாடு ஐ.நாவின் கைகளில் இருக்கவேண்டும் என்கின்றன ரஷ்யாவும், சீனாவும்.

ரம்ப் முன்வைக்கும் திட்டத்தில் பலஸ்தீனர் நாடு என்ற சொல்லே இல்லை. இஸ்ரேல் காசாவை விட்டு வெளியேறும் உறுதிப்பாடும் இல்லை. 2027ம் ஆண்டுக்கு பின் காசாவினதும், பலஸ்தீனரினதும் நிலை என்னவாகும் என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய, சீன அழுத்தங்களின் பின் ரம்ப் தரப்புது திட்டத்தின் கூற்றை West Bank ஐ ஆளும் PA தனது reform களை “faithfully carried out and Gaza redevelopment has advanced, the conditions may be in place for a credible pathway to Palestinian self-determination and statehood” என்று மாற்றி உள்ளது. அதிலும் faithfully carried out, redevelopment has advanced, may be, pathway போன்ற பாதங்கள் தந்திர நோக்கங்களில் எழுதப்பட்டவை.