ஆப்கானிஸ்தானில் பிறந்த, அமெரிக்க குடியுரிமை பெற்ற Mohmood Habibi என்பவரை தேடுகிறது அமெரிக்கா. இவரின் இருப்பிடத்தை அறிய அல்லது இவரை விடுதலை செய்ய உதவுவருக்கு $5 மில்லியன் சன்மானமும் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. Habibi ஒரு CIA உளவாளி என்றும், இவரின் உதவியுடனேயே CIA அல்-கைடா தலைவர் Ayman al-Zawahiri யை படுகொலை செய்தது என்று கூறுகிறது தற்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலபான். இவரை ஆப்கானிஸ்தானின் உளவு பிரிவான GDI கைது செய்துள்ளது என்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் பிறந்த […]
தொழில்நுட்பம் வளர ஆரம்பித்த காலம் முதல் ஈரான் அமெரிக்காவின் Global Positioning System (GPS) என்ற நகர்வுகளை கண்காணிக்கும் செய்மதி கட்டமைப்பை பயன்படுத்தி வந்திருந்தது. ஆனால் ஜூன் மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து 12 தினங்கள் ஈரானை தாக்கியபோது அமெரிக்காவின் GPS சேவையில் தங்கி இருந்தமையால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தது ஈரான். GPS spoofing ஒரு பிரதான ஆபத்து. அதனால் தற்போது ஈரான் அமெரிக்காவின் GPS சேவையை கைவிட்டு சீனாவின் BeiDou சேவையை ஈரானில் நடைமுறை செய்ய […]
ரஷ்ய சனாதிபதி பூட்டினை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 15ம் திகதி அலாஸ்க்காவில் (Alaska) சந்திக்க உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா தரப்பில் Yuri Ushakov இரு தலைவர்களும் சந்திக்க தகுந்த இடம் என்றுள்ளார். ரம்ப் முன்வைக்கும் சமாதான திட்டப்படி ரஷ்யா தற்போது கைப்பற்றியுள்ள யூக்கிறேனின் நிலங்கள் சட்டப்படி ரஷ்ய நிலங்கள் ஆகும். அத்துடன் 2014ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரைமியாவும் (Crimea) சட்டப்படி ரஷ்ய நிலங்கள் ஆகும். அத்துடன் யூக்கிறேன் NATO அணியில் இணைவதும் தடுக்கப்படும். அப்படியானால் இது ஒரு தீர்வு […]
ஆகஸ்ட் 6ம் திகதி அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது 50% இறக்குமதி வரியை அறிவித்த பின் விசனம் கொண்ட இந்தியா அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வதை இடைநிறுத்தி உள்ளது என்று Reuters செய்திகள் கூறுகின்றன. அத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சரும் தனது அமெரிக்காவுக்கான பயணத்தை நிறுத்தி உள்ளார். Skryker வகை யுத்த வாகனங்கள், Javelin வகை ஏவுகணைகள், P8I வகை Boeing ஏவுபார்க்கும் இராணுவ விமானங்கள் என்பனவற்றின் கொள்வனவே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ரம்ப் […]
இந்த மாத இறுதியில் இந்திய பிரதமர் மோதி சீனா செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது 50% இறக்குமதி வரி அறிவித்த நிலையிலேயே மோதி சீனா செல்கிறார். ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 31ம் திகதிகளில் பெய்ஜிங் நகருக்கு அண்மையில் உள்ள Tianjin என்ற நகரில் இடம்பெறவுள்ள Shanghai Cooperation Organisation (SCO) அமர்வில் மோதி கலந்துகொள்வார். 2020ம் ஆண்டு Galwan என்ற இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற வன்முறைகளின் பின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவிய […]
இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை அறவிட உள்ளதாக ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி ஆகஸ்ட் 27ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னர் இந்தியாவுக்கான வரி 25% என்று ரம்ப் கூறியிருந்தாலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தண்டனையாக மேலும் 25% வரி அறவிடப்படுகிறது. ரம்பின் முதலாம் ஆட்சியில் ரம்ப் பிரதமர் மோதியுடன் மிக நெருக்கமாக பழகி இருந்தார். Texas மாநிலத்தில் இடம்பெற்ற Howdy Modi கூட்டத்தில் […]
ஜப்பானின் சனத்தொகை கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2024ம் ஆண்டின் சனத்தொகை 2023ம் ஆண்டின் சனத்தொகையிலும் 908,574 (0.75%) ஆல் குறைந்து உள்ளது என்கிறது புதன்கிழமை அரசு வெளியிட்ட அறிக்கை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அங்கு 120,653,227 ஜப்பானியர் இருந்துள்ளனர். அங்கு வாழும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையையும் உள்ளடக்கிய சனத்தொகை 124,330,690 ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டு 687,689 ஜப்பானிய குழந்தைகள் பிறந்து உள்ளனர். இத்தொகை முன்னைய ஆண்டிலும் 41,678 குறைவு. அங்கு ஜப்பானியர் தொகை குறைந்து சென்றாலும், […]
ரம்ப் அரசு அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் சிலரிட $5,000, $10,000 அல்லது $15,000 பிணை பணம் அறவிட உள்ளது. திங்கள் அறிவிக்கப்பட்ட இந்த பரிசோதனை திட்டம் (pilot program) ஆகஸ்ட் 20ம் திகதி ஆரம்பமாகி 1 ஆண்டு காலம் நீடிக்கும். பொதுவாக விசாவில் அமெரிக்கா சென்று அந்த விசா முடிவதற்கு முன் தமது நாடுகளுக்கு திரும்பாதோரை அதிகம் கொண்ட நாட்டவரையே இந்த மேலதிக சுமை அதிகம் பாதிக்கும். ரம்ப் அரசின் கொடுபிடிகள் காரணமாக அமெரிக்கா செல்வோர் […]
ஞாயிறு அஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Sydney Harbour Bridge என்ற பாலத்தின் ஊடு பலஸ்தீனர் நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. ஊர்வல ஏற்பாட்டாளர் 10,000 பேரையே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கலந்துகொண்டோர் தொகை 90,000 என்கிறது போலீசாரின் கணிப்பு. இந்த ஊர்வலத்தை தடை செய்ய முயற்சிகள் இடம்பெற்று இருந்தாலும் முதல் நாளான சனிக்கிழமையே Supreme Court அனுமதி வழங்கி இருந்தது. WikiLeaks Julian Assange போன்ற சில பிரபலங்களும் கூடவே பங்கெடுத்து இருந்தன. ஊர்வலம் ஆரம்பித்து 2 […]
இந்திய பிரதமர் மோதியின் அரசு உலக அரங்கில் நடைமுறைக்கு மிக கடினமான ஒரு செயலை செய்ய முனைகிறது. பரம எதிரிகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் ஒரே நேரம் நட்பு நாடாக இருக்க முனைவதே அச்செயல். மோதியின் இந்த முனைவுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்து உள்ளார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். யூக்கிறேன் யுத்தம் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா கொள்வனவு செய்யக்கூடாது என்கிறார் ரம்ப். ஆனால் இந்தியா ரஷ்யாவை பகைக்க விரும்பவில்லை. ரஷ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் இந்தியா […]