கொழும்பில் இருந்து சென்ற கொள்கலன் கப்பலில் தீ

கொழும்பில் இருந்து சென்ற கொள்கலன் கப்பலில் தீ

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சென்ற ZIM Charleston என்ற பெயர் கொண்ட கொள்கலன் கப்பல் தீ பற்றி அதில் இருந்த 300 கொள்கலன்கள் பாதிப்பு அடைந்து உள்ளன. அதனால் அந்த கப்பல் மீண்டும் கொழும்பு துறைமுகத்துக்கு திரும்பலாம். சீனாவில் தனது பயணத்தை ஆரம்பித்த இந்த கப்பல் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய துறைகளில் தரித்து பின் ஆகஸ்ட் 8ம் திகதி கொழும்பு வந்துள்ளது. கொழும்பு East Terminal லில் கொள்கலன்களை இறங்கி, ஏற்றி பின் கொழும்பை விட்டு நீங்கி […]

மீண்டும் சந்திரனில் காலடி வைக்கும் முயற்சியில் நாசா

மீண்டும் சந்திரனில் காலடி வைக்கும் முயற்சியில் நாசா

அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்கள் இல்லாத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க உள்ளது. சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட SLS ஏவுகணை ஏற்கனவே Kennedy ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. மிக பாரமான இதை […]

தொடரும் கலிபோர்னியா பகுதி நீர் தட்டுப்பாடு

தொடரும் கலிபோர்னியா பகுதி நீர் தட்டுப்பாடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை அண்டிய தென் மேற்கு பகுதி தொடர்ந்தும் நீர் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி வருகிறது. அடுத்த ஆண்டில் இப்பகுதி Tier 2 அளவிலான நீர் தட்டுப்பாட்டை அடையலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tier 0, Tier 1, Tier 2, Tier 3 ஆகிய அளவீடுகள் இப்பகுதிக்கு நீர் வழங்கும் மீட் வாவி (Lake Mead) என்ற Hoover Dam அணையை கட்டி தேக்கிய நீரின் அளவில் தங்கி உள்ளன. மீட் அணைக்கட்டு கொள்ளக்கூடிய […]

எகிப்து கிறிஸ்தவ தேவாலய தீக்கு 41 பேர் பலி

எகிப்து கிறிஸ்தவ தேவாலய தீக்கு 41 பேர் பலி

எகிப்தின் தலைநகர் Cairo வுக்கு அண்மையில் உள்ள Giza என்ற நகரில் உள்ள Abu Sifin Coptic தேவாலய தீக்கு குறைந்தது 41 பேர் பலியாகியும், 55 காயமடைந்தும் உள்ளனர். மின் ஒழுக்கே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி போலீஸ் அறிக்கை கூறுகிறது. விபத்து இடம்பெற்ற வேளையில் சுமார் 5,000 பேர் தேவாலயத்தில் இருந்துள்ளனர். விபத்து உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9:00 மணிக்கு நிகழ்துள்ளது. தேவாலய வாசல் தடைப்பட்டதானாலே அதிகமானோர் மரணித்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. […]

சீனாவின் Yuan Wang 5 கப்பலை இலங்கை அனுமதிக்கிறது

சீனாவின் Yuan Wang 5 கப்பலை இலங்கை அனுமதிக்கிறது

சீனாவின் Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்ல இலங்கை அரசு சனிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் Yuan Wang 5 இலங்கை துறைமுகத்துக்கு வருகிறது. சீனா இது ஒரு ஆய்வு கப்பல் என்று கூறினாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இதை உளவுபார்க்கும் கப்பலாகவே கருதுகின்றன. இந்த கப்பல் செய்மதி மூலமான தொடர்புகளையும், ICBM போன்ற நீண்ட தூரம் பாயும் ஏவுகணை அவதானிப்புகளையும் செய்ய வல்லது. […]

ரம்ப் வீட்டில் இருந்து Top Secret ஆவணங்கள் கைப்பற்றல்

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற மாளிகை வீட்டில் இருந்து அமெரிக்க அரசுக்கு சொந்தமான 11 Top Secret ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI தெரிவித்து உள்ளது. அனால் ரம்ப் அந்த ஆவணங்கள் declassified ஆவணங்கள் என்று கூறுகிறார். அமெரிக்க அரசுக்கு சொந்தமான இரகசிய ஆவணங்களை பதவியில் உள்ள சனாதிபதியும், அனுமதி கொண்ட உயர் அதிகாரிகளும் பார்வை இடலாம். ஆனால் அவற்றை அவர்கள் தமது வீட்டுக்கு எடுத்து செல்வது குற்றம். இச்செயல் […]

கட்டுநாயக்க Terminal 2 கட்டுமானம் கைவிடப்படும்?

கட்டுநாயக்க Terminal 2 கட்டுமானம் கைவிடப்படும்?

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டப்படும் புதிய Terminal 2 வேலைகள் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுமான வேலைகளை செய்யும் ஜப்பான் நிறுவனமான Taisei கட்டுமானத்தை நிறுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்த கட்டுமானத்துக்கான பணம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுகிறது Taisei. பணம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே தாம் வேலைகள் தொடர முடியும் என்கிறது Taisei. அத்துடன் வேலைகளை செய்வதற்கு தேவையான சூழ்நிலையும் அவசியம் என்கிறது Taisei. புதிய Terminal 2 கட்டிடத்தையும் பழைய […]

வியாழன் சிங்கப்பூரை நீங்கினார் கோட்டபாய

வியாழன் சிங்கப்பூரை நீங்கினார் கோட்டபாய

தனது இரண்டாவது விசா காலமும் முடிவடைந்த நிலையில் முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாய வியாழன் சிங்கப்பூரை விட்டு வெளியேறி உள்ளார் என்று சிங்கப்பூர் Immigration & Checkpoints Authority கூறியுள்ளது . இவர் தற்போது எங்கு செல்கிறார் என்று கூறாவிட்டாலும், தாய்லாந்து செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. கோட்டபாய தாய்லாந்து செல்வதற்கு உரிமையை ஏற்கனவே கேட்டு இருந்ததாகவும் அந்த உரிமை வழங்கப்பட்டு இருந்ததாகவும் தாய்லாந்து பிரதமர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தாய்லாந்தில் அவர் 90 தினங்கள் தங்க உரிமை […]

ஈரானின் செய்மதியை ரஷ்யா ஏவியது, அமெரிக்கா விசனம்

ஈரானின் செய்மதியை ரஷ்யா ஏவியது, அமெரிக்கா விசனம்

ஈரானின் Khayyam என்ற செய்மதியை ரஷ்யா தனது Soyuz ஏவுகணை மூலம் இன்று ஆகஸ்ட் 9ம் திகதி ஏவி உள்ளது. High-resolution படங்களை எடுக்கக்கூடிய இந்த செய்மதியால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. சுமார் 600 kg எடை கொண்ட இந்த செய்மதியின் resolution 1 மீட்டர் ஆகும். இது 500 km உயரத்தில் உலகை வலம் வரும். ஈரானின் Iranian Space Agency தாம் இந்த செய்மதியை நீர்வளம், விவாசாயம் போன்ற நுகர்வோர் பயன்பாடுகளுக்கே பயன்படுத்த உள்ளதாக […]

ரம்பின் Mar-a-Lago மாளிகை FBI சோதனையில்

அமெரிக்காவின் மத்திய குற்ற புலனாய்வு (FBI) அதிகாரிகள் இன்று முன்னாள் சனாதிபதி ரம்பின் Mar-a-Lago என்ற சொந்த குடியிருப்பு மாளிகையை சோதனை செய்துள்ளனர். FBI அதிகாரிகளின் செயலால் கடுமையாக விசனம் கொண்டுள்ளார் ரம்ப். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின் ரம்ப் பிளோரிடா மாநிலத்தில் உள்ள இந்த மாளிகையிலேயே குடியிருக்கிறார். ஆனாலும் தேடுதல் வேளையில் ரம்ப் நியூ யார்க் நகரில் இருந்ததாக சில பத்திரிகைகள் கூறுகின்றன. வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ரம்ப் அமெரிக்க அரசுக்கு சொந்தமான […]