எதியோப்பிய விமானம் விபத்தில், 157 பேர் பலி

எதியோப்பியாவின் (Ethiopia) தலைநகர் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி (Nairobi) சென்ற Ethiopian Airlines விமானம் (Flight 302) கோளாறு காரணமாக வீழ்ந்ததில் 157 பேர் (149 பயணிகள் + 8 பணியாளர்) பலியாகி உள்ளனர். . உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 8:38 மணிக்கு மேலேறி விமானம், 6 நிமிடங்களின் பின், 8:44 மணிக்கு வீழ்ந்துள்ளது. இந்த Boeing 737 MAX 8 வகை விமானம் 4 மாதங்களுக்கு […]

103 km நீள Helsinki-Tallin கடலடி தண்டவாளம்

பின்லாந்தின் தலைநகர் Helsinki ஐயும், Estonia வின் தலைநகர் Tallinn ஐயும் இணைக்க 103 km நீளம் கொண்ட கடலடி தண்டவாளம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான $17 பில்லியன் முதலீட்டை சீனாவின் Touchstone Capital Partners வழங்கவுள்ளது. Touchstone சீனாவின் Belt and Road திட்டத்தில் ஒரு முக்கிய பங்காளி. . திட்டமிடுபவர்கள் இந்த தண்டவாளம் 2024 ஆம் ஆண்டு அளவில் சேவைக்கு வரும் என்று கணிப்பிட்டு இருந்தாலும், நிர்மாண வேலைகளுக்கு […]

மட்டக்களப்பு அருகே HMAS Vampire கண்டுபிடிப்பு?

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானின் யுத்த விமானங்களால் இந்து சமுத்திரத்தில் தாக்கி அமிழ்த்தப்பட்ட அஸ்ரேலிய யுத்த கப்பலான destroyer HMAS Vampire (D68) சமுத்திரத்தின் அடியில் உள்ள இடம் இலங்கை மற்றும் அஸ்ரேலிய கடல்படைகளால் கண்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. . இரண்டாம் உலக யுத்த காலத்தில், 1942 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி, ஜப்பான் அந்தமான் தீவுகளை கைப்பற்றி இருந்தது. அதை தொடர்ந்து இலங்கையும் ஜப்பானியர்களால் கைப்பற்றப்படலாம் என்று கருதப்பட்டது. . 1942 […]

சீன BRI திட்டத்தில் இணையும் இத்தாலி?

சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலியும் இணையவுள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு இத்தாலி இணைந்தால் சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடக இத்தாலி அமையும். . அதேவேளை இத்தாலியின் இந்த தீர்மானம் அமெரிக்காவை விசனப்படுத்தி உள்ளது. அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள ஏனைய 6 நாடுகளும் சீனாவின் Belt and Road திட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றன. . இத்தாலி இந்த திட்டத்தில் இணைவது […]

இலங்கை தத்தெடுப்பில் 70% போலி பிறப்பு சான்றிதழ்கள்

1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 750 இலங்கை குழந்தைகள் சுவிஸ் நாட்டவரால் தத்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த குழந்தைகளில் சுமார் 70% குழந்தைகளுக்கு பொய்யான பிறப்பு சான்றிதழ்கள் (birth certificates) பயன்படுத்தப்பட்டு உள்ளதாக புதிய ஆய்வுகள் அறிந்துள்ளன. . Swiss Canton of St. Gallen விடுத்துள்ள அறிக்கையே இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இவ்விசயம் தொடர்பாக ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி […]

இந்திய விமானியை பாகிஸ்தான் விடுதலை

புதன் கிழமை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய இந்திய MiG விமானத்தின் விமானியைஉள்ளோர் நேரப்படி இன்று வெள்ளி இரவு 9:00 மணிக்கு பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட Abhinandan Varthaman என்ற தமிழ்நாட்டு இராணுவ விமானி Wagah எல்லையை கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளார். அவரை பல்லாயிரம் இந்தியர் வரவேற்று உள்ளனர். . இவரின் யுத்த விமானம் காஸ்மீரை ஊடறுக்கும் பாகிஸ்தான்-இந்திய எல்லையை (Line of Control) கடந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீருள் நுழைந்த போதே சுட்டு […]

Hong Kong இல் முடங்கிய சவுதி சகோதரிகள்

தமது குடும்ப கட்டுப்பாடுகளை விரும்பாத இரண்டு சவுதி பெண்கள் அஸ்ரேலியாவுக்கு  தப்பி ஓட முனைந்து, தற்போது Hong Kong நகரில் முடங்கி உள்ளனர். . கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு குடும்பத்துடன் உல்லாச பயணம் வந்த இந்த 18 மற்றும் 20 வயதுடைய சகோதரிகள் அங்கிருந்து அஸ்ரேலியாவுக்கு தப்பி ஓடும் நோக்கில் Hong Kong சென்றுள்ளனர். ஆனால் உண்மையை அறிந்த சவுதி அரசு அந்த பெண்களின் சவுதி கடவுசீட்டுகளை Hong Kong இல் பறிமுதல் செய்துள்ளது. இவர்களின் […]

இணக்கம் எதுவும் இன்றி முடிந்தது ரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியடனாமின் ஹனோய் (Hanoi) நகரில் இடம்பெற்ற இரண்டாம் சந்திப்பும் இணக்கம் எதுவும் இன்றி முன்னராகவே முடிந்துள்ளது. . சிங்கப்பூரில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பின்போது இருந்த அளவு எதிர்பார்ப்புகள் வியடனாம் சந்திப்பில் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இரண்டாம் சந்திப்பில் இருந்த குறைந்த அளவு எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை. . வடகொரியா பொருளாதார தடையை முற்றாக நீக்கவேண்டும் என்று கேட்பதாகவும் அதை செய்ய முடியாது என்றும் ரம்ப்  கூறியுள்ளார். பொருளாதார தடையை முற்றாக […]

இந்திய விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது

இந்தியாவின் 2 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று கூறியுள்ளது. அத்துடன் ஒரு இந்திய விமானியையும் கைப்பற்றி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. . இந்தியா தமது தரப்பில் ஓர் MiG 21 யுத்த விமானத்தை இழந்துள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் ஒரு விமானியும் தவறியுள்ளார் என்றும் இந்தியா கூறியுள்ளது. இந்திய தரப்பு இழப்பை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Raveesh Kumar அறிவித்துள்ளார். . பாகிஸ்தான் தரப்பு இணையங்களில் வீழ்ந்த இந்திய விமானியை தாக்குவது போன்ற காட்சிகள் […]

பாகிஸ்தானை தாக்கின இந்திய விமானங்கள்

இந்திய விமானப்படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் உள்ளே பறந்து தாக்குதல்களை செய்துள்ளன. கடந்த கிழமை Pulwama என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு போலீசார் மீது தடாத்திய தற்கொலை தாக்குதலுக்கு 40 இந்திய போலீசார் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammmed என்ற ஆயுத குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள இந்த குழுவின் முகாம்கள் மீதே இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தியதாக இந்தியா கூறுகின்றது. . […]