ஒலிம்பிக்கில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு

தென்கொரியாவில் இன்று வெள்ளி இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆரம்ப விழாவின்போது வடகொரியாவுக்கு முக்கியத்துவம் வழங்குவதை தடுக்க அமெரிக்கா எடுத்த பெரும் முயற்சிகளையும் மீறி  தென்கொரியா வடகொரியாவை உபசரித்து உள்ளது. . ஆரம்ப விழாவின் போது வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் இணைந்து ஒரு கொடியின்கீழ் அணிவகித்து உள்ளனர். இந்த விசேட கொடி வெள்ளை பின்னணியில், நீல நிறத்தில் இணைந்த கொரிய வரைபடத்தை கொண்டிருந்தது. . வடகொரியாவின் தலைவர் Kim […]

ஜப்பானில் பாடசாலை சீருடை விலை $730

ஜப்பானின் Tokyo நகரின் உள்ள Ginza பகுதி ஆரம்ப பாடசாலை (elementary school) ஒன்று அண்மையில் தமது பாடசாலை சிறுவர்களுக்கு புதிய சீருடை தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சீருடை வடிவமைப்புக்கு பாடசாலை உலகின் luxury ஆடை தயாரிப்பு நிறுவனமான இத்தாலிய ஆர்மானி (Armani) நிறுவனத்தை நாடி இருந்தனர். . ஆர்மானி தயாரித்த சீருடை ஒன்றின் விலை சுமார் 80,000 ஜப்பானிய யென் ($730). இந்த அதீத விளையால் விசனம் கொண்டுள்ளனர் பெற்றார். . Taimei Elementary என்ற […]

முன்னாள் பங்களாதேச பிரதமருக்கு 5 வருடங்கள்

முன்னாள் பங்களாதேச பிரதமர் Khaleda Zia என்பவருக்கு இன்று வியாழன் 5-வருட சிறை தண்டனை வழங்கப்டுள்ளது. தனது ஆட்சி காலத்தில் $252,200 பெறுமதியான பணத்தை Zia Orphanage Trust என்ற சேவையில் இருந்து தனது சொந்த வங்கி  கணக்குக்கு மாற்றினார் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இவருக்கு 5-வருட சிறை கிடைத்துள்ளது. . சிறை தண்டனையை வழங்கிய நீதிபதி Mohammad Akhteruzzaman முன்னாள் பிரதமர் வயது முதிர்ந்தவர் என்றபடியாலும், ஒரு முன்னாள் பிரதமர் என்றபடியாலும், குறைந்த […]

மாலைதீவுள் மீண்டும் அரசியல் குழப்பம்

மாலைதீவு அரசியல் மீண்டும் குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த வெள்ளி முதல் குழப்பம் உக்கிரம் அடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலத்தீவு உயர் நீதிமன்றம் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விடுதலை செய்யும்படி அரசிடம் கூறி இருந்தது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த அரசு உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதிகளை கைது செய்து, நாட்டில் 15-நாள் அவசரகால நிலையையும் நடைமுறை செய்துள்ளது. . மேற்கு நாடுகள் மாலைதீவு அரசின் செயலை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டு […]

தொண்டையறுப்பு சைகை பிரிகேடியர் பதவி நீக்கம்

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவரகம் முன்னாள் எதிர்ப்பு கூட்டம் கூடிய இலங்கையரை நோக்கி கழுத்தை அறுக்கும் சைகை (throat-slitting) செய்த இலங்கை தூதுவரக அலுவலகரான Brigadier Priyanka Fernando பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய் அறிவித்துள்ளது. . Brigadier Fernando இலங்கை இறுதி யுத்தத்தில் பங்கு கொண்டிருந்தவர். இவர் இப்போது இலங்கை தூதுவராக பாதுகாவல் அதிகாரியாக (defense attache) உள்ளார். இவரை நாடு கடத்தும்படி பிரித்தானியாவின் Labour கட்சி கேட்டுள்ளது. . […]

1500 புள்ளிகளால் கவிழ்ந்த Dow பங்கு சந்தை

அமெரிக்காவின் Dow (Dow Jones Industrial average) பங்கு சந்தை இன்று திங்கள் மதியம் அளவில் சுமார் 1,500 புள்ளிகளால் வீந்திருந்தது. அந்த பாரிய வீழ்ச்சியின் சிறிதை மீண்ட Dow நாள் முடிவின்போது 1,175 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. Dow வரலாற்றின் அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி இதுவாகும். . கடந்த வெள்ளிக்கிழமை அடைந்த 665 புள்ளி வீழ்ச்சியுடன் இன்று மதிய வீழ்ச்சியுடன் மொத்தம் 2,100 புள்ளிகளால் சந்தை வீழ்ந்திருந்தது. மதிய வேளையின்போது சில நிமிடங்களில் மட்டும் 500 […]

மேலும் 60,000 மாயன் கட்டிடங்கள் கண்டுபிடிப்பு

முற்காலங்களில் அதி சிறந்து வளர்ந்திருந்த மக்களில் மாயன் (Mayan) மிக முக்கியமானவர்கள். மத்திய அமெரிக்காவின் பல பாகங்களில் மாயன் எச்சங்கள் பல இன்றும் உண்டு. மெக்ஸிக்கோ (Mexico) நாட்டு சிசென் இற்ச (Chichen Itza), ருழும் (Tulum), கோபா (Coba) ஆகிய இடங்கள் தற்போது உல்லாச பயணிகளின் முக்கிய தெரிவுகள். இதுவரை அறிந்த தரவுகளின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன் மாயன் அவர்களின் உச்ச காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்பட்டு இருந்தது. . ஆனால் அண்மையில் LIDAR […]

கியூபா பிடெல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவின் மகன் Fidel Castro Diaz-Balart தனது 68ஆவது வயதில் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்று வியாழன் தற்கொலை செய்துகொண்டவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, வைத்தியம் பெற்று வந்துள்ளார். . இவர் தனது தந்தையார் போன்ற உருவத்தை கொண்டிருந்ததனால் பலரும் இவரை Little Fidel அல்லது Fidelito என்று அழைத்தனர். இவரது தாயாருக்கும், தந்தையார் பிடெல் காஸ்ரோவுக்கும் இடையிலான திருமணம் சிறுகாலத்துள் முடிவடைந்தது. இவர் […]

அத்திரம்பாக்கத்தில் 385,000 வருட ஆயுதங்கள்

நேற்று புதன்கிழமை Nature என்ற சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றின்படி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 km தூரத்தில் உள்ள அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட ஆதி மனிதனின் கல் ஆயுதங்கள் 385,000 வருடங்கள் பழமையானவை என்று கூறப்படுகிறது. . இதுவரை காலமும் விஞ்ஞானம் இந்திய மனிதம் தொடர்பாக கொண்டிருந்த எண்ணக்கருவை நேற்று வெளியிட்ட கருத்து பொய்யாக்கி உள்ளது. முன்னர் கொண்டிருந்த கணிப்பிலும் 250,000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆதி […]

அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு கணை தோல்வியில்

அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து உருவாக்கி, இன்று புதன் ஏவி ஒத்திகை பார்த்த ஏவுகணை எதிர்ப்பு கணை (interceptor missile) பயிற்சி இலக்கை தாக்கி அழிக்காது தோல்வியில் முடிந்துள்ளது. SM-3 Block IIA என்ற இந்த ஏவுகணை எதிர்ப்பு கணை Hawaii பகுதியில் இன்று ஒத்திகை செய்யப்பட்டது. . கடந்த வருடம் பெப்ருவரி மாதம் செய்யப்பட்ட இவ்வகை ஒத்திகை ஒன்று வெற்றிகரமாக பயிற்சி இலக்கை தாக்கி இருந்தது. ஆனால் பின் ஜூன் மாதம் செய்யப்பட்ட ஒத்திகை தோல்வியில் முடிந்து […]