திங்கள் Nasser Medical Complex என்ற காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் வீசிய இரண்டு குண்டுகளுக்கு குறைந்தது 20 பேர் பலியாகி உள்ளனர். அதில் 5 பேர் பத்திரிகையாளர், பலர் வைத்திய ஊழியர். வைத்தியசாலை கட்டிடம் ஒன்றின் 4ம் மாடிக்கு வீசப்பட்ட முதல் குண்டுக்கு ஒருவர் மட்டுமே பலியாகி இருந்தார். அதே இடத்தில் சுமார் 10 நிமிடங்களின் பின் திட்டமிட்டு வீசிய இரண்டாம் குண்டுக்கு உதவிக்கு வந்த ஏனையோர் பலியாகினர். இராணுவங்கள் இவ்வாறு இரண்டு குண்டுகளை […]
தமிழ்நாட்டின் கொந்தகை என்ற இடத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இரண்டு மனித எலும்பு எச்சங்களும் சுமார் 2500 ஆண்டுகள் பழையன என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வாளர் கூறுகின்றனர். கொந்தகை என்ற இடம் ஏற்கனவே அகழ்வுகளில் அறியப்பட்ட கீழடி என்ற மதுரை பகுதியில் இருந்து 4 km தொலைவில் உள்ளது. கி.மு. 580 ஆண்டுகளில் மிகவும் முதிர்ச்சி அடைந்த நகரங்கள் இருந்ததாக ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Liverpool John Moors பல்கலைக்கழக Face Lab மேற்படி மண்டையோடு ஒன்றுக்கு […]
இந்திய மத்திய அரசின் CBI (Central Bureau of Investigation) அனில் அம்பானி மீதும், அவரின் முறிந்துபோன Reliance Communication நிறுவனத்தின் மீதும் 2,000 கோடி இந்திய ரூபாய் ($344 மில்லியன்) ஊழல் வழக்கு விசாரணை ஒன்றை ஆரம்பித்து உள்ளதாக கூறியுள்ளது. State Bank of India (SBI) இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த விசாரணையின் ஒரு படியாக இன்று சனிக்கிழமை அனில் அம்பானி வீட்டிலும், அவரின் அலுவலகங்களிலும் CBI தேடுதல் செய்துள்ளது. அனில் அம்பானி […]
அமெரிக்க Defense Intelligence Agency (DIA) என்ற இராணுவ ஆய்வு பிரிவின் இயக்குனர் (director) ஆக பதவி வகித்த லெப். ஜெனரல் Jeffrey Kruse வெள்ளிக்கிழமை அவரின் பதவியில் இருந்து ரம்ப் அரசால் நீக்கப்பட்டுள்ளார். இவரின் பதவி பறிப்புக்கு ரம்ப் அரசு காரணம் எதையும் கூறியிருக்கவில்லை. ஆனாலும் இந்த ஜெனரல் ரம்ப் தான் ஜூன் மாதம் ஈரான் அணு உலைகள் மீது B-2 விமானங்கள் மூலம் வீசிய குண்டுகள் அந்த உலைகளை “completely and totally obliterated” […]
காசாவின் பகுதிகளில் மனிதம் உருவாக்கிய பட்டினி கொடுமை பரவி உள்ளது என்று ஐ.நா.வின் அமைப்பான IPC (The Integrated Food Security Phase Classification) இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. குறிப்பாக Gaza City இந்த மனிதம் உருவாக்கிய பட்டினி கொடுமையில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இஸ்ரேலும், காசாவில் பொருட்களை வழங்கும் பணிகளை கண்காணிக்கும் இஸ்ரேலின் COGAT அமைப்பும் அங்கு பட்டினி இல்லை என்று கூச்சம் இன்றி கூறுகிறது. IPC காசாவில் உடனடி யுத்த […]
கருத்து கணிப்பு ஆய்வு ஒன்றின்படி அமெரிக்க சனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று 57% அமெரிக்கர் கருதுகின்றனர். Reuters/Ipsos ஆய்வினர் இந்த மாதம் 13ம் திகதி முதல் 18ம் திகதி வரை 4,446 அமெரிக்கரிடம் “Is American democracy in danger of failing?” என்று கேட்டபோது 57% அமெரிக்கர் “Yes” என்று பதிலளித்து உள்ளனர். தற்போது ஆட்சியில் உள்ள சனாதிபதி ரம்பின் Republican கட்சியினரை இந்த கேள்வியை கேட்டபோது 37% மட்டுமே Yes என்று பதிலளித்து உள்ளனர். ஆனால் […]
யூக்கிறேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஒரு இணக்கத்துக்கு வருவார் என்று தான் வேண்டுவதாகவும், ஆனால் பூட்டின் தீர்வில் நாட்டம் இன்றி உள்ளார் போலும் (It’s possible that he doesn’t want to make a deal) என்று ரம்ப் இன்று செவ்வாய் கூறியுள்ளார். அத்துடன் தீர்வு ஏற்படாவிடின் நிலைமை மேலும் உக்கிரம் ஆகும் (rough situation) என்றும் ரம்ப் கூறியுள்ளார். யூக்கிறேன் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகளை அனுப்ப மாட்டேன் என்றும் ரம்ப் […]
சனாதிபதி ரம்பாலும் உதவி சனாதிபதி வன்சாலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி (Zelenskiy) மீண்டும் வெள்ளை மாளிகை அழைக்கப்பட்டுள்ளார். இந்த சந்திப்பு திங்கள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரம்பும், பூட்டினும் மேற்கொண்ட அலாஸ்கா சந்திப்பிலும் இந்த சந்திப்பு பிரதானமாக இருக்கும். இம்முறை இவருடன் ஜெர்மனியின் அதிபர் Merz, பிரான்ஸின் சனாதிபதி Macron, பிரித்தானியாவின் பிரதமர் Starmer, இத்தாலியின் பிரதமர் Meloni, ஐரோப்பிய ஒன்றியத்தின் von der Leyen […]
இந்தியாவில் செய்யப்பட்ட இரண்டு ஆய்வுகள் மாம்பழத்தில் உள்ள இனிப்பு (sugar) உடலுக்கு நல்லது என்று அறிந்துள்ளன. இந்த ஆய்வுகள் விரைவில் ஐரோப்பாவின் Journal of Clinical Nutrition என்ற ஆய்வு பதிப்பில் வெளிவரவுள்ளது. பொதுவாக வைத்தியர்கள் எந்த வகை இனிப்பும் Type 2 diabetes குறைபாடு உள்ளோர்க்கு தகாது என்றே கூறி வந்துள்ளனர். தற்போது அதே வைத்தியம் முரண் கதை கூறுகிறது. ஒரு ஆய்வுக்கு 95 பேர் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு Safeda, Dasheri, Langra ஆகிய […]
யூக்கிறேன் யுத்தம் தொடர்பாக அலாஸ்காவில் வெள்ளி இடம்பெற்ற ரம்ப், பூட்டின் சந்திப்பு இணக்கம் எதுவும் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது. ரம்ப் இந்த அமர்வுக்கு பெரும் கனவுடன் சென்று இருந்தாலும், உலகம் அந்த அளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அமர்வின் பின் இருவரும் ஒன்றாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை செய்திருந்தாலும், பத்திரிகையாளரிடம் இருந்து இவர்கள் கேள்விகள் எதையும் எடுக்கவில்லை. பொதுவாக வெளிநாட்டு தலைவர் ஒருவர் அமெரிக்கா வரும்போது பத்திரிகையாளர் மாநாடுகளில் அமெரிக்க சனாதிபதியே முதலில் பேசுவார். ஆனால் இன்று பத்திரிகையாளர் […]