கடந்த வியாழக்கிழமை Dialog நிறுவனமும், வெள்ளிக்கிழமை SLT-Mobitel நிறுவனமும் இலங்கையில் 5G தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஆரம்பித்து உள்ளன. ஆனாலும் இந்த சேவை பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும். அண்மையில் இலங்கை அரசு 5G சேவைக்கு தேவையான 3.5 GHz மற்றும் 27 GHz அலைவரிசைகளின் (spectrum) பாவனை உரிமையை Dialog, Mobitel ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து 5 பில்லியன் ரூபாய்களை பெற்று இருந்தது. 5G சேவை சுமார் 10 முதல் 20 Gbps வரையான வேகத்தில் தரவுகளை […]
சுமார் 35 ஆண்டுகள் நிதானமான விலையை கொண்டிருந்த சாக்லேட் (chocolate) கடந்த சுமார் ஒரு ஆண்டு காலமாக பல மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சாக்லேட் தரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை முன்னரிலும் 200% முதல் 500% வரை அதிகமாக இருந்தது, தற்போதும் அவ்வாறே உள்ளது. ஆனால் உலக சந்தையில் சாக்லேட் விலை விரைவில் குறைய உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சாக்லேட்டின் மூலப்பொருளான கொக்கோ பவுடரின் (cocoa) விலை மிகையாக அதிகரித்ததே சாக்லேட் விலை அதிகரிக்க காரணம். 2024ம் ஆண்டு டிசம்பர் […]
Artificial Intelligence (AI) கணினிகளுக்கு தேவையான அதிநவீன chip களை தயாரிக்க அவசியமான Extreme UltraViolet lithography (EUV) பரிசோதனை அறிவை சீனா இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெற்று உள்ளது என்று Reuters செய்தி நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அறிவு சீனாவின் கைகளை அடையக்கூடாது என்பதில் அமெரிக்கா மூர்க்கமாக இருந்தாலும் சீனா அந்த அறிவை பெற்று உள்ளது. ஐரோப்பா தயாரிக்கும் சுமார் $250 மில்லியன் பெறுமதியான EUV இயந்திரங்கள் மனித முடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு அகலம் கொண்ட […]
கனடா தீடீரென உள்வாங்கும் வெளிநாட்டவர் தொகையை குறைத்தால் ஜூலை மாதம் முதலான 3ம் காலாண்டில் கனடாவின் சனத்தொகை 76,068 பேரால் குறைந்து உள்ளது என்று Statistics Canada இன்று புதன் கூறியுள்ளது. மேற்படி குடிவரவு குறைப்பில் தற்காலிக வேலைவாய்ப்பு விசா குறைப்பு, மாணவ விசா குறைப்பு ஆகியனவும் அடங்கும். இவர்களின் வரவு (குறைந்தது ஆரம்பத்தில்) குடியுரிமை அற்ற தற்காலிக வரவு என்றாலும், கனடாவில் வாழும் குடியுரிமை அற்றோரும் சனத்தொகையில் உள்ளங்கும். 2022ம் ஆண்டில் ரூடோ அரசு தாராள குடிவரவை நடைமுறை செய்ததால் சனத்தொகை 1 மில்லியன் ஆல் அதிகரித்து […]
கனடாவில் பண மற்றும் முதலீட்டு குற்றங்களை கண்காணிக்கும் Criminal Intelligence Service Canada என்ற அமைப்பு ஆண்டுதோறும் கனடாவின் பொருளாதாரத்தில் 5% பங்கு கருப்பு பணத்தை கழுவும் நோக்கத்தில் செய்யப்படுபவை என்றுள்ளது. இத்தொகை ஆண்டுக்கு சுமார் C$113 பில்லியன் ஆகும். நவம்பர் மாதம் 3 கிழமைகளாக உலக financial crime auditors கனடாவின் வங்கிகள், மற்றும் அரச திணைக்களங்களை விசாரணை செய்து வருகின்றனர். இதில் இலங்கை, இத்தாலி, ஹாங் காங், ஜப்பான், அஸ்ரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஆய்வாளரும் அடங்குவர். வழமையில் […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் தற்போதைய chief of staff என்ற பிரதான அதிகாரி Susie Wiles அமெரிக்காவின் Vanity Fair என்ற செய்தி நிறுவனத்துக்கு கடந்த காலங்களில் வழங்கிய கூற்றுக்கள் இன்று செவ்வாய் வெளிவந்து அமெரிக்காவில் புதியதோர் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளன. Suise Wiles தனது கூற்றுகளில் ரம்ப் குடிகாரன் போல் செயல்படுபவர், சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் பழிவாங்கும் குணம் கொண்டவர் என்றெல்லாம் கூறியுள்ளார். நியூ யார்க் Attorney General Letitia மீது ரம்ப் தரப்பு வழக்கு தொடர்ந்தது பழிவாங்கும் நோக்கிலேயே (that might […]
திங்கள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் பிரித்தானியாவின் BBC ஒளிபரப்பு சேவை மீது $5 பில்லியன் மானநட்ட வழக்குகள் இரண்டை (two counts) தாக்கல் செய்துள்ளார். 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி தான் செய்த பேச்சு ஒன்றை தவறாக edit செய்து ஒளிபரப்பியதாக ரம்ப் BBC மீது குற்றம் சாட்டுகிறார். அந்த பேச்சில் ரம்ப் தனது ஆதரவாளரை Capital மண்டபம் நோக்கி சென்று “we fight, we fight like hell” என்று கேட்டிருந்தார். பின் அவர் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யுமாறும் கேட்டதை […]
மூலைக்கு மூலை தமிழ் மரபு திங்கள் கொண்டாடி, நகரத்துக்கு நகரம் தமிழ் கொடி ஏற்றி, வீதிக்கு வீதி தமிழ் விழா கொண்டாடி தமிழை வயிற்று பிழைப்புக்கு மட்டும் பயன்படுத்தும் தமிழரை கொண்ட கனடாவில் இணையம் மூலம் வர்த்தகம் செய்யும் Amazon நிறுவனம் (amazon.ca) C$19.66 க்கு விற்பனை செய்யும் தமிழ் குறுக்கெழுத்து புத்தகம் ஒன்று தமிழை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்துள்ளது. TAMIL CROSSWORD PUZZLE BOOK என்ற இந்த புத்தகம் வழங்கும் குறுக்கெழுத்து பயிற்சிகள் மெய் எழுத்துகளில் உள்ள குற்றை பிரித்து ஒரு எழுத்தாகவும், […]
அஸ்ரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ள Bondi Beach என்ற கடற்கரையில் யூதர்களின் Hanukkah நிகழ்வை கொண்டாடிய யூதர்களில் 11 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த கடற்கரை நிகழ்வு ஞாயிறு மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி இருந்தது. துப்பாக்கி தாக்குதல் இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றது. சுட்டவரில் ஒருவரும் பலியாகி உள்ளார். இன்னொருவர் வைத்தியசாலையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கிருந்த கார் ஒன்றில் சில வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அவை தற்போது போலீசாரால் அகற்றப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Facebook இணையம் பொய்யர்கள், மூடர்களின் சுவர்க்கம். இதில் தெளிவு இன்றி, ஆதாரம் இன்றி எதையும் எவரும் எழுதலாம். சிலவேளைகளில் அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கலாம். பலாலி விமான நிலையமும் தற்போது இவ்வகை facebook மூட பதிவுகளில் அகப்பட்டு உள்ளது. இந்த பதிவுகளுக்கு “அப்பிடி கேளடா தம்பி” என்று like குகளும் குவிகின்றன. அண்மையில் அமெரிக்காவின் பெரிய இராணுவ விமானமான C-130 Hercules இறங்கி உதவி பொருட்களை வழங்கிய பின் சில தமிழ் facebook போராளிகளுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகளை […]