nVIDIA என்ற artificial intelligence வல்லமை கொண்ட chip களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) $4 டிரில்லியன் ($4,000 பில்லியன்) ஆகியுள்ளது. உலகில் nVIDIA மட்டுமே $4 டிரில்லியன் பெறுமதி கொண்ட நிறுவனம். ஆனாலும் ரம்ப் அரசு விதித்த தடைகள் காரணமாக nVIDIA சீன சந்தையை தற்போது இழந்துள்ளது. சீன சந்தையை மீண்டும் கைப்பற்ற nVIDIA CEO Jensen Huang சில தினங்களில் சீனா செல்கிறார். அதற்கு முன் வியாழன் Huang […]
காசா மற்றும் West Bank ஆகிய இடங்களில் இஸ்ரேல் செய்யும் யுத்த குற்றங்களை விசாரிக்கும் ஐ.நா. அதிகாரியான Francesca Albanese மீது அமெரிக்க ரம்ப் அரசு புதன்கிழமை தடை விதித்துள்ளது. இவர் International Criminal Court (ICC) சார்பிலேயே காசா விசாரணையை செய்கிறார். இஸ்ரேல் செய்யும் குற்றங்களை ICC விசாரணை செய்ய முடியாது என்பதே அமெரிக்காவின் கொள்கை. இத்தாலியரான Albanese கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் காசா யுத்தத்தில் இலாபம் அடையும் அமெரிக்க நிறுவனங்களை விசாரணை […]
தான் ஆட்சிக்கு வந்தால் யூக்கிறேன் யுத்தத்தை 24 மணி நேரத்தில் சமாதானத்துக்கு கொண்டு வருவேன் என்று தேர்தல் காலத்தில் ரம்ப் கூறியிருந்தார். ஆனால் அவரின் 6 மாத கால ஆட்சியின் பின் அவர் பாதை மாறி முன்னாள் சனாதிபதி பைடென் வழியில் செல்கிறார். செவ்வாய்க்கிழமை ரம்ப் “I am not happy with Putin” என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டின் மீது வசைபாடி வருவதோடு யூக்கிறேனுக்கு ஆயுதங்களை வழங்கவும் அறிவித்துள்ளார். முன்னர் […]
அமெரிக்க Texas மாநிலத்து Guadalupe ஆற்று பெருக்கெடுப்புக்கு பலியானோர் தொகை 104 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொலைந்து உள்ளோர் தொகை 27 ஆக உள்ளது. Kerr County பகுதியில் மட்டும் 84 பேர் பலியாகியும், 11 பேர் தொலைந்தும் உள்ளனர். அதில் 28 பேர் இளையோர். தரமான வானிலை அவதானிப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ள நாட்டில் இவ்வகை அழிவை தவிர்க்க முடியாமை பல கேள்விகளை தோற்றுவித்துள்ளன. அண்மையில் சனாதிபதி ரம்ப் FEMA போன்ற பல […]
ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக இன்று திங்கள் அறிவித்துள்ளார். இந்த வரி நடைமுறைக்கு வந்தால் Toyota, Honda போன்ற ஜப்பானின் பெரிய நிறுவனங்களும், Samsung போன்ற தென் கொரியாவின் பெரிய நிறுவனங்களும் பெரிதும் பாதிப்பு அடையும். இந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா கொள்வனவு செய்யும் மொத்த பெறுமதியிலும் மிக குறைந்த அளவு பெறுமதிக்கே இந்த நாடுகள் […]
இந்த ஆண்டுக்கான BRICS நாடுகளின் அமர்வு பிரேசில் நாட்டு Rio de Janeiro நகரில் இடம்பெறுகிறது. முதல் தடவையாக இம்முறை சீன சனாதிபதி சீ BRICS அமர்வில் கலந்துகொள்ளவில்லை. பதிலுக்கு சீனாவின் இரண்டாம் இடத்தில் உள்ள Premier Li Qiang அமர்வில் கலந்து கொள்கிறார். சீ கலந்து கொள்ளாமை பலருக்கும் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. அவர் நோய்வாய்ப்பட்டு உள்ளாரா, அல்லது விரைவில் ரம்ப் அறிவிக்கவுள்ள சீனாவுக்கு எதிரான வரிகளுக்கு சீனாவை தயார் செய்ய நாட்டில் தங்கியுள்ளாரா என்று […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு குறைந்தது 24 பேர் பலியாகியும், மேலும் 20 மாணவிகள் வரை தொலைந்தும் உள்ளனர். அப்பகுதியில் summer camp ஒன்றுக்கு சென்ற மாணவிகளே தொலைந்து உள்ளனர். ஆபத்தில் சிக்கிய குறைந்தது 237 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். மேற்படி summer camp க்கு சுமார் 700 பாடசாலை மாணவிகள் சென்று இருந்தனர். Texas மாநிலத்தில் பாயும் Guadalupe River என்ற ஆற்று நீர்மட்டம் 45 நிமிடத்தில் 26 அடிகளால் உயர்ந்ததே இந்த […]
வியாழக்கிழமை NVIDIA என்ற அமெரிக்க AI Chip தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் விலை $160.98 ஆக உயர்ந்ததால் இந்த நிறுவனத்தின் மொத்த பங்குச்சந்தை வெகுமதி (market capital) $3.92 டிரில்லியன் ($3,920 பில்லியன்) ஆகி இருந்தது. அதனால் NVIDIA முதலாவது உயரிய வெகுமதி கொண்டிருந்த நிறுவனமாகிறது. 2024ம் ஆண்டு டிசம்பர் 24ம் திகதி முதல் iPhone தயாரிக்கும் Apple நிறுவனம் இந்த பெருமையை கொண்டிருந்தது. அப்போது இந்த வெகுமதி $3.915 டிரில்லியன் ஆக அதிகரித்து இருந்தது. […]
இஸ்ரேல் காசாவில் பட்டினி போடலையும் ஆயுதமாக்கி உள்ளது என்று Amnesty International இன்று வியாழன் கூறியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து இயக்கும் Gaza Humanitarian Foundation (GHF) என்ற இராணுவ மயமாக்கப்பட்ட உதவி வழங்கும் அமைப்பு காசாவில் செய்வது genocide என்கிறது Amnesty. புதன்கிழமை இரவு மட்டும் உதவி பெற சென்ற 45 பலஸ்தீனர் GHF அருகே சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். வேறு உதவி வழங்கல் இடங்களில் மேலும் 40 பேர் கொலை செய்யப்பட்டு […]
தற்போதைய செலவாக்கியா (Slovakia) என்ற நாட்டில் உள்ள கைவிடப்பட்டு, பாழடைந்த Doncov Castle என்ற அரண்மனையில் 2001ம் ஆண்டு நீல மாணிக்க கல் பதித்த மோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருந்தது. இந்த 18-கரட் மோதிரத்தை பரிசோதனைகள் செய்த ஆய்வாளர் இது 12ம் நூற்றாண்டுக்கு உரியது என்று அறிந்துள்ளனர். அத்துடன் இந்த மோதிரத்தில் பதிக்கப்பட்டு இருந்த நீல மாணிக்கத்தின் (sapphire) இரசாயண பங்குகளை ஆராந்தபோது இது இலங்கையில் அகழ்வு செய்யப்பட்ட நீல மாணிக்கம் என்றும் அறியப்பட்டுள்ளது. அதாவது 12ம் நூற்றாண்டிலேயே […]