சீன உற்பத்தியில் முழுமையாக தங்கி இருப்பது தனக்கு ஆபத்தாக அமையலாம் என்று பயந்த அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது. இவ்வாறு சீன supply chain னில் இருந்து தம்மை de-risk செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதினாலும் உண்மையில் தற்போதும் அமெரிக்கா சீன supply யில் தங்கி உள்ளது என்று Global Trade Research Initiative போன்றவற்றின் ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் பெருமளவு இந்திய உற்பத்தியாளர் சீன மூலப்பொருட்களையே தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர். இந்த […]
இன்று செப்டம்பர் 1ம் திகதி முதல் இந்தியாவின் IndiGo விமான சேவை நிறுவனம் பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இன்று சென்னையில் இருந்து 52 பயணிகளுடன் பிற்பகல் 3:05 மணிக்கு வந்த IndiGo விமானம் 75 பயணிகளுடன் சென்னை திரும்பியது. பலாலியிலிருந்து சென்னைக்கான ஒருவழி பயணத்துக்கு சுமார் 30,000 இலங்கை ரூபாய்கள் (சுமார் $100) அறவிடப்படுகிறது. இதில் 7 kg cabin bag ம், 15 kg check-in bag ம் உள்ளடக்கப்பட்டுள்ளன. Flight 6E1177: […]
காசாவில் பணயம் வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 6 பேரை இஸ்ரேல் இராணுவம் இன்று சனிக்கிழமை மீட்க முனைகிறது என்பதை அறிந்து கைதிகளை வைத்திருந்தவர்கள் பாடுகளை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெற்ரன்யாஹூ மீது இஸ்ரேல் யூதர்கள் கடும் வெறுப்பை கொண்டுள்ளனர். இந்த 6 பேரில் ஒருவர் இஸ்ரேல், அமெரிக்க குடியுரிமைகளை கொண்டவர். தற்போது நடைபெறும் யுத்த நிறுத்த பேச்சுவார்தைகளின்படி இந்த கைதி முதலாம் கட்டத்தில் விடுதலை செய்யப்பட இருந்தவர். ஆனால் பலஸ்தீனர் மீது வெறித்தனமான துவேசம் […]
இதுவரை காலமும் ஒரு இடதுசாரி கட்சி தலைவருக்கு வழங்காத கவனத்தை மேற்கு நாடுகள் இம்முறை சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுர குமார திசாநாயக்காவுக்கு (Anura Kumara Dissanayake) வழங்குகின்றன. குறிப்பாக மேற்கு நாடுகளின் பத்திரிகைகள் அனுராவின் வளர்ச்சியால் வியப்படைந்துள்ளன. ஆகஸ்ட் 29ம் திகதி Bloomberg செய்தி நிறுவனம் “Sri Lanka Leftist Candidate Gains Ground With Anti-Corruption Push” என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டு இடம்பெற்ற Gota Go Gama புரட்சியாளர் அனுராவுக்கு தமது ஆதரவை […]
ஜப்பானில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாத காலத்தில் 37,227 பேர் மரணிக்கும்போது தனிமையில் வாழ்ந்துள்ளனர். இவர்களில் 70% மானோர் 65 வயதுக்கும் அதிகமான வயதுடையோர் என்று கூறுகிறது ஜப்பானின் National Police Agency. இவர்களில் 5,635 பேர் 70-74 வயதுடையோர், மேலும் 5,920 பேர் 75-79 வயதுடையோர், 7,498 பேர் 80 வயதுக்கும் அதிக வயதுடையோர் ஆவர். இவ்வாறு மரணித்தோரில் 40% மானோரின் உடல்கள் ஒரு தினத்துள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் 3,939 உடல்கள் […]
இந்தியா Arighaat என்ற தனது இராண்டாவது Arihant வகை அணு மின் நீர்மூழ்கியை இன்று வியாழன் விசாகப்பட்டினத்தில் சேவைக்கு விட்டுள்ளது. இது மூழ்கிய நிலையில் 24 knots/hour (44 km/h) வேகத்தில் பயணிக்க வல்லது. இந்த 6,000 தொன் எடை கொண்ட நீர்மூழ்கி K-15 வகை அணு குண்டு ஏவுகணைகளை கொண்டிருக்கும். K-15 ஏவுகணை 750 km தூரம் சென்று தாக்க வல்லது. முதலாவது Arihant வகை நீர்மூழ்கி 2016ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்தது. அணு மின் நீர்மூழ்கிகளை கொண்ட […]
அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும் சீன சனாதிபதி சீக்கும் இடையில் மீண்டுமொரு சந்திப்பை ஏற்பாடு செய்ய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan முயற்சித்து வருகிறார். கடந்த 2 தினங்களாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் தங்கியுள்ள Jake Sullivan சீனாவின் Wang Yi உடனும் உரையாடி உள்ளார். பைடென்-சீ சந்திப்புக்கான திட்டமிடல் பணிகள் வரும் கிழமைகளில் இடம்பெறும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று கூறுகிறது. சுமார் 8 ஆண்டுகளின் பின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சீனா சென்றது இதுவே முதல் […]
அமெரிக்காவின் IBM என்ற தொழில்நுட்ப நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறுகிறது என்றும், அதன் ஒரு படியாக 1,000 ஊழியர்களை நீக்கி உள்ளது என்றும் Yicai என்ற சீன அரச செய்தி நிறுவனம் சேவையை கூறியுள்ளது. ஆனால் IMB இது தொடர்பாக கருத்து எதையும் இதுவரை கூறவில்லை. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு முதல் தரமான தொழில்நுட்பங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அமெரிக்கா தடை விதித்துள்ளது. அதேவேளை சீன நிறுவனங்கள் முதல் தரமான தொழில்நுட்பங்களை விற்பனை செய்ய, அமெரிக்க நிறுவனங்களின் இரண்டாம் […]
Milkio Foods Limited என்ற நியூ சிலாந்தின் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் இருந்து பெற்ற butter ஐ “100% pure New Zealand” butter என்று பொதி செய்து விற்பனை செய்ததால் அதன் மீது 420,000 நியூ சிலாந்து டாலர்கள் ($261,452) தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நியூ சிலாந்தின் Hamilton நகரை தளமாக கொண்ட Milkio தாம் Fair Trading Act சட்டத்தின் 15 விதிகளை மீறி உள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது. நியூ சிலாந்து உலகில் 8ஆவது […]
இஸ்ரேல் படைகளுக்கும் லெபனானின் ஹெஸ்புல்லா குழுவுக்கும் இடையில் பெரும் சண்டை நடைபெறுகிறது. இஸ்ரேல் தான் ஒரு preemptive தாக்குதலை செய்ததாகவும், உடனே ஹெஸ்புல்லா திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பும் முழு அளவிலான யுத்தத்துக்கு தயார் இல்லை என்றாலும், விரும்பியோ விரும்பாமலோ முழு அளவிலான யுத்தத்துள் இருதரப்பும் அகப்படலாம். இஸ்ரேலின் 100 யுத்த விமானங்கள் முதலில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது தாக்குதல்களை செய்தது. உடனே ஹெஸ்புல்லா 320 ஏவுகணைகளையும் drone களை இஸ்ரேல் மீது ஏவியது. முழுமையான சேத […]