Prague பல்கலைக்கழகத்தில் 14 மாணவர் சுட்டு கொலை

Prague பல்கலைக்கழகத்தில் 14 மாணவர் சுட்டு கொலை

Prague என்ற Czech நாட்டின் தலைநகரில் உள்ள Charles University என்ற பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவன் ஒருவன் செய்த துப்பாக்கி சூட்டுக்கு 14 மாணவர்கள் பலியாகியும், 25 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.

கொலையாளியும் போலீசாரால் கொலை செய்யப்பட்டு உள்ளான்.

வியாழன் பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்ற இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் கொலையாளி அதே தினம் இந்த தாக்குதலுக்கு முன் தனது தந்தையரையும் கொலை செய்துள்ளான்.

அதேவேளை அப்பகுதி காடு ஒன்றில் இருவர் கொலை செய்யப்பட்டமைக்கும் இந்த கொலையாளிக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்கின்றனர்.

Charles University 1347ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.