Sri Lanka Telecom போட்டியில் இந்திய Jio, சீன Gortune

Sri Lanka Telecom போட்டியில் இந்திய Jio, சீன Gortune

IMF தான் வழங்கும் $3 பில்லியன் பிச்சை கடனுக்கு விதித்த நிபந்தனைகளில் ஒன்றாக Sri Lanka Telecom என்ற அரச கூட்டுத்தாபனத்தை தனியார் கைகளுக்கு விட கேட்டிருந்தது.

இந்த முயற்சிக்கு இலங்கை அரசு முதல் விண்ணப்பங்களை ஜனவரி 12ம் திகதி வரை ஏற்றுக்கொண்டு இருந்தது.

தற்போது இந்தியாவின் Jio என்ற நிறுவனமும், சீனாவின் Gortune International என்ற நிறுவனமும் தமது இறுதி Request for Proposal விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டு உள்ளன.

Jio இந்திய செல்வந்தரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இவரின் Reliance நிறுவனத்துக்கு கீழ் உள்ள Jio இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.