Prague என்ற Czech நாட்டின் தலைநகரில் உள்ள Charles University என்ற பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவன் ஒருவன் செய்த துப்பாக்கி சூட்டுக்கு 14 மாணவர்கள் பலியாகியும், 25 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். கொலையாளியும் போலீசாரால் கொலை செய்யப்பட்டு உள்ளான். வியாழன் பிற்பகல் 3:00 மணியளவில் இடம்பெற்ற இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் கொலையாளி அதே தினம் இந்த தாக்குதலுக்கு முன் தனது தந்தையரையும் கொலை செய்துள்ளான். அதேவேளை அப்பகுதி காடு ஒன்றில் […]
தற்போதும் பெருமளவு மக்களின் ஆதரவை கொண்ட முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்க அரசியலில் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அமெரிக்காவில் ஆளும் கட்சிகள் நீதிபதிகளை தெரிவு நியமனம் செய்வதும் குட்டையை மேலும் குழப்புகிறது. அமெரிக்காவில் தற்போது 2024ம் ஆண்டுக்கான சனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. முதலில் மாநில அளவில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் மூலம் (primary தேர்தல்) தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்து ஒரு தொகை வாக்குகளை வழங்கும். தேசிய அளவில் அதிக வாக்குகள் பெறுபவர் […]
தமது நாட்டை ஆக்கிரமித்து உள்ள ரஷ்யாவுடன் போரிட மேலும் 500,000 படையினர் தேவை என்கிறார் யுகின்றேன் சனாதிபதி செலன்ஸ்கி. ஏற்கனவே அமெரிக்காவின் $60 பில்லியன் உதவியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் $55 பில்லியன் உதவியும் தடைப்பட்டு உள்ள நிலையிலேயே செலன்ஸ்கி மேலும் 500,000 தேவை என்கிறார். மேலதிக 500,000 படையினருக்கு பயிற்சி வழங்கி, தேவையான ஆயுதங்கள் வழங்க மேலும் பெருமளவு பணமும், பல மாதங்களும் தேவை. யுகின்றேன் யுத்தம் ஏற்கவே 2 ஆண்டுகளை கடந்துள்ளது. யுகின்றேன் சனாதிபதியின் கணிப்பீடு […]
இந்தியாவில் இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் (MPs) பாராளுமன்றத்தில் இருந்து ஆளும் பா.ஜ. கட்சியால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த கிழமை இருவர் இந்திய பாராளுமன்ற பார்வையாளர் பகுதியில் இருந்து அங்கத்தவர் சபை உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இந்த செயலை பாராளுமன்றத்தில் விவாதம் செய்ய வேண்டும் என்று கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களே இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர். திங்கள் கிழமை மட்டும் 78 எதிர்க்கட்சி உறுப்பினர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தடை வெள்ளிக்கிழமை […]
அமெரிக்க சனாதிபதி பைடென் முதலில் காசாவில் பலியாகும் பொதுமக்களின் தொகை அளவுக்கு அதிகமானது என்று கடந்த சில தினங்களாக கூறி வந்தார். அதன்பின் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரும், ஜெர்மனியும் கூட்டாக காசாவில் பலியாகும் பொதுமக்களின் தொகை அளவுக்கு அதிகம் என்றும் அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் வேண்டும் என்று கூறினார். பின்னர் பிரான்சும் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இன்று பிரித்தானியாவின் பிரதமர் Rishi Sunak க்கும் காசாவில் “அளவுக்கு அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர்” என்று […]
காசாவில் இடம்பெறும் யுத்தம் செங்கடல் ஊடான கப்பல் போக்குவரத்தை தடைப்பட வைக்கிறது. யேமென் (Yemen) நாட்டின் Houthi இன ஆயுத குழு செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேலில் பதிவு கொண்ட கப்பல்களையும், இஸ்ரேல் செல்லும் கப்பல்களையும் ஏவுகணைகள் கொண்டு தாக்குவதாலேயே இக்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு தடைபடுகிறது. பலஸ்தீனருக்கு ஆதரவளிக்கும் நோக்குடனேயே Houthi ஆயுத குழு இந்த தாக்குதல்களை செய்கிறது. காசாவில் யுத்த நிறுத்தம் வந்தால் தாம் தாக்குதல்களை நிறுத்துவோம் என்கிறது Houthi ஆயுத குழு. இந்த குழுவுக்கு ஈரான் […]
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் கடத்தி சென்ற யூத கைதிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபாடுள்ள இஸ்ரேல் இராணுவ 3 கைதிகளை சுட்டு கொன்றுள்ளது. தாம் கைதிகளை ஹமாஸ் உறுப்பினர் என்று தவறாக அடையாளம் கண்டதே அவர்களின் கொலைகளுக்கு காரணம் என்கிறது இஸ்ரேல். Yotam Haim (வயது 28), Samer Talalka (வயது 22), Alon Shamriz (வயது 26) ஆகியோரே பலியாகி உள்ளனர். இரு தரப்பிலும் சில கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், 100 க்கும் அதிகமான யூத கைதிகள் தற்போதும் ஹமாஸ் வசம் […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அடுத்த ஆண்டு மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்ற பயம் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் அவரிடம் இருந்து NATO அணியை பாதுகாக்க சட்டம் ஒன்றை நடைமுறை செய்கிறது. அண்மையில் அமெரிக்கா சட்டமாக்கிய $886 பில்லியன் பெறுமதியான National Defense Authorization Act அதனுள் ரம்பிடம் இருந்து, ஆனால் அவரின் பெயரை குறிப்பிடாது, NATO வை பாதுகாக்கும் சட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த சட்டப்படி காங்கிரசின் அனுமதி இன்றி அல்லது 2/3 Senate ஆதரவு […]
ஜூலை முதல் செப்டம்பர் வரையான கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்து உள்ளது என்று இலங்கையின் புள்ளிவிபர திணைக்களம் இன்று வெள்ளி கூறியுள்ளது. 2021ம் ஆண்டு இறுதிக்கு பின்னர் காலாண்டு ஒன்றில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது இதுவே முதல் தடவை. இந்த காலாண்டில் விவசாய துறை 3% ஆலும், சேவை துறை 1.3% ஆலும், தொழிற்சாலை உற்பத்தி 0.3% ஆலும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனாலும் இந்த ஆண்டின் 12 மாதங்களில் பொருளாதாரம் 3.6% ஆல் […]
சுமார் $1.4 பில்லியன் வெகுமதியை கொண்ட Raymond Group என்ற நிறுவன குடும்பம் விவாகரத்தில் மாண்டுள்ளது. Gautam Singhania என்பவருக்கும் அவரின் மனைவி Nawaz Modi என்பவருக்கும் இடையேயான விவாகரத்து சண்டையே தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த Raymond Group நிறுவனத்தின் கடந்த தீபாவளி நிகழ்வுக்கு மனைவி Modi அனுமதிக்கப்படாதமை விவகாரத்து விசயம் உக்கிரம் அடைந்ததை காட்டியுள்ளது. மனைவியுடன் அவர்களின் இரண்டு பெண் சிறுமிகளும் குடும்ப சொத்தின் 75% பங்கை கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. […]