இலங்கை இராணுவத்தினர் மீது தடைக்கு ஐ.நா. அத்திவாரம்?

முன்னாள் மற்றும் தற்கால இலங்கை இராணுவத்தினர் சிலர் மீது பயண தடைகள், வங்கி கணக்கு முடக்கம், சொத்து முடக்கம் போன்ற தடைகளை விதிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் Michelle Bachelet இன்று புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த மாதம் அமர்வில் ஆராயப்படும். ஐ.நா. அதிகாரி தனது பரிந்துரையில் தற்போதை சனாதிபதி கோத்தபாயா குறைந்தது 28 முன்னாள் அல்லது தற்கால இராணுவ அதிகாரிகளுக்கு பிரதான பதவிகளை வழங்கி உள்ளதாகவும் குற்றம் கூறியுள்ளார். குறிப்பாக […]

அமெரிக்காவில் அர்த்தமற்ற பங்குச்சந்தை சூதாட்டம்?

அமெரிக்காவில் அர்த்தமற்ற பங்குச்சந்தை சூதாட்டம்?

அமெரிக்காவில் சில நிறுவனங்களின் பங்குச்சந்தை பங்குகளை அர்த்தமற்ற வகையில், சூதாட்டத்துக்கு நிகரான முறையில், பெருமளவு  முதலீட்டாளர் கொள்வனவு செய்கின்றனர். இதனால் நட்டத்தில் இயங்கும் சில நிறுவங்களின் பங்கு விலைகள் ஒரு கிழமைக்குள் மட்டும் 300% மடங்கால் அதிகரித்து உள்ளன. GameStop என்ற வீடியோ game விற்பனை செய்யும் நிலையங்களை கொண்ட நிறுவனம் 2019ம் ஆண்டு $470 மில்லியன் நட்டத்தை அடைந்திருந்தது. இது அதற்கு முன் 2017ம் ஆண்டு தனது கடைகளில் 150 கடைகளை இலாபம் இன்மையால் மூடியும் […]

மேலும் உரமாகும் சீன-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக வலயம்

மேலும் உரமாகும் சீன-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக வலயம்

சீனாவுக்கும் நியூசிலாந்துக்கு இடையே நடைமுறையில் இருந்து வந்த சுதந்திர வர்த்தக வலயம் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் உரமாகியுள்ளது. உரமாக்கப்பட்ட வர்த்தக வலயம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல பொருட்கள் வரிகள் இன்றி நகர உதவுகிறது. 2008ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயம் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் தற்போது மீண்டும் மீளாய்வு செய்யப்பட்டு, மேலும் உரமாக்கப்படும் உள்ளது. உதாரணமாக நியூசிலாந்தின் பால் உணவுகள் 2024ம் ஆண்டு […]

பிரான்ஸ் நீதிமன்றில் வியட்நாம் Agent Orange வழக்கு

பிரான்ஸ் நீதிமன்றில் வியட்நாம் Agent Orange வழக்கு

Tran To Nga என்ற 78 வயது பெண்ணின் Agent Orange தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் இணங்கி உள்ளது. வியட்நாம் யுத்த காலத்தில் வியட்நாமில் வாழ்ந்திருந்த இவர் மட்டுமன்றி, இவரின் மகள் ஒருவரும் Agent Orange பாதிப்பால் மரணமாகி இருந்தார். Agent Orange நஞ்சை வீசிய அமெரிக்காவுக்கு எதிராக வழக்கை தொடர்வதை தவிர்த்து, அமெரிக்க படைகளுக்கு இரசாயனங்களை வழங்கிய 14 நிறுவனங்கள் மீதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிக பெரிய […]

தாய்வானை சீண்டும் சீனா, அமெரிக்கா விசனம் 

தாய்வானை சீண்டும் சீனா, அமெரிக்கா விசனம் 

சீனாவின் விமானப்படை விமானங்கள் அடிக்கடி தாய்வானின் வான்பரப்புள் சென்று வருகின்றன. இதை அமெரிக்கா கண்டிக்கிறது. தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்வதை சீனா பதிலுக்கு கண்டிக்கிறது. இன்று ஞாயிறு (2021/01/24) மட்டும் 12 சீன யுத்த விமானங்கள், 2 குண்டுவீச்சு விமானங்கள், 1 வேவு விமானம் ஆகியன தாய்வானின் தென்பகுதியை ஊடறுத்து சென்றுள்ளன. நேற்று சனிக்கிழமை 8 யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்பு ஊடே சென்று வந்திருந்தன. ஒவ்வொரு தடவையும் சீனா விமானங்கள் தாய்வானை அணுகும்போது, தாய்வானின் யுத்த விமானங்கள் சில அவற்றை இடைமறிக்க செல்லும். அவ்வாறு செய்வது சிறிய நாடான தாய்வானுக்கு பெரிய செலவை […]

ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

Tse Chi Lop (வயது 56) என்ற ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரரை நெதர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் பிறந்து தற்போது கனடாவில் குடியுரிமை கொண்டு வாழும் இவர் கனடா செல்ல விமானம் ஒன்றில் ஏற முற்படுகையிலேயே கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை கைது செய்ய அஸ்ரேலியா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முனைந்து வந்துள்ளது. அஸ்ரேலியாவுக்கு செல்லும் போதைகளின் 70% பங்கு இவர் மூலமே செல்கிறது என்று Australian Federal Police கூறியுள்ளது.இவரை கைது […]

ஆபிரிக்காவில் இலஞ்சம் வழங்கியவருக்கு ஜெனீவாவில் சிறை

ஆபிரிக்காவில் இலஞ்சம் வழங்கியவருக்கு ஜெனீவாவில் சிறை

Guinea என்ற ஆபிரிக்க நாட்டு அரசியல்வாதிகளுக்கு $8.5 மில்லியன் இலஞ்சம் வழங்கிய குற்றத்துக்காக Beny Steinmetz என்ற இஸ்ரேல் வர்த்தகருக்கு ஜெனீவா இன்று வெள்ளிக்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அத்துடன் இவர் ஜெனீவாவுக்கு $56 மில்லியன் தண்டமும் செலுத்த தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இவருக்கு பிராஸ்சின் குடியுரிமையும் உண்டு. சுவிஸ் நாட்டு சட்டத்தை மீறியதாலேயே மேற்படி வழக்கு சுவிஸில் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது. இது Guinea சட்டத்தை மீறியதற்கான வழக்கு அல்ல. 2006ம் […]

தமிழருக்கு உரு ஏற்றுகிறதா தமிழ்Mirror?

தமிழருக்கு உரு ஏற்றுகிறதா தமிழ்Mirror?

தமிழ்Mirror என்ற இலங்கையை தளமாக கொண்ட தமிழ் பத்திரிகை “சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும் அகழ்வு” என்ற ஒரு ஆசிரியர் தலையங்கத்தை இன்று (2021/01/21) பதித்துள்ளது. இந்த ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் சம்பவத்தை அலசி ஆராய்ந்து குருந்தூரில் புத்தரை நிலைநாட்டியோரையும் துணிவுடன் கண்டிக்கிறது. ” தமிழர்களுக்கே சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள முமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக் கல்லு பகுதிகளில் இரண்டு விகாரைகள் இருந்தமைக்கான சிதைவுகள் […]

Pompeo உட்பட ரம்ப் ஆட்சி அதிகாரிகள் 28 பேர் மீது சீனா தடை

ரம்ப் ஆட்சியில் வெளியுறவு செயலாளராக ஆக கடமையாற்றிய Mike Pompeo உட்பட மொத்தம் 28 பேர் மீது சீன தடை விதித்து உள்ளது. இந்த தடை காரணமாக 28 பேரும் சீனா, ஹாங் காங், மக்கா (Macao) ஆகிய இடங்களுக்கு பயணிக்க முடியாது. அத்துடன் இவர்களுடன் தொடர்பு கொண்ட வர்த்தகங்கள் சீனா, ஹாங் காங், மக்கா ஆகிய இடங்களில் செயற்படவும் முடியாது. ரம்பின் Health and Human Services செயலாளர் Alex Azar, வர்த்தக ஆலோசகர் Peter […]

வாடகை தாய்மூல குழந்தைகளை கைவிட்ட சீன நடிகை

வாடகை தாய்மூல குழந்தைகளை கைவிட்ட சீன நடிகை

Zheng Shuang என்ற பிரபல சீன நடிகை (வயது 29) தனக்கும், Zhang Heng (வயது 30) என்ற தயாரிப்பாளருக்கும் அமெரிக்காவில் இரண்டு வாடகை தாய்மார்கள் மூலம் (surrogacy) பெற்ற இரண்டு குழந்தைகளையும் கைவிட்டுள்ளார். இந்த நடிகையின் செயல் சீனாவில் அவர்மீது எதிர்ப்பை உருவாகியுள்ளது திருமணமாகாதா நடிகை Zheng தயாரிப்பாளர் Zhang உடனான உறவை முறித்துக்கொண்டதே குழந்தைகளை கைவிட காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள தந்தை Zhang உடன் வாழ்கின்றன. ஆண் குழந்தை […]