சவுதி இளவரசருக்கு ரம்ப் வெள்ளை மாளிகையில் புகழாரம் 

சவுதி இளவரசருக்கு ரம்ப் வெள்ளை மாளிகையில் புகழாரம் 

இன்று செவ்வாய் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட சவுதி இளவரசர் Mohammed bin Salman னை அமெரிக்க சனாதிபதி ரம்ப் புகழ்ந்து பாடியுள்ளார். இளவரசரிடம் பத்திரிகையாளர் ஜமால் கசோகி (Jamal Khashoggi) படுகொலை தொடர்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரையும் கடுமையாக சாடியுள்ளார் ரம்ப். ஒரு விருந்தினரை மேற்படி பத்திரிகையாளர் நோகடித்துள்ளார் என்று ரம்ப் பாய்ந்துள்ளார். 2018ம் ஆண்டு அக்காலத்தில் அமெரிக்கராக, Washington Post பத்திரிகையாளராக இருந்த ஜமால் கசோகி என்பவரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்து, அமிலங்கள் மூலம் உடல் கரைக்கப்பட்டு, […]

ரம்பின் தெளிவற்ற காசா திட்டத்துக்கு ஐ.நா. ஆதரவு 

ரம்பின் தெளிவற்ற காசா திட்டத்துக்கு ஐ.நா. ஆதரவு 

அமெரிக்க சனாதிபதி ரம்பின் 20-point காசா திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று வாக்கெடுப்பு மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. மொத்தம் 15 உறுப்பினரை கொண்ட பாதுகாப்பு சபையில் 13 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க ரஷ்யாவும், சீனாவும் வாக்களியாது இருந்துள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தமது வீட்டோ வாக்கு மூலம் திட்டத்தை தடை செய்யவும் இல்லை. ஹமாஸ் இந்த திட்டத்தை ஏற்க மறுத்துள்ளது. குறிப்பாக மேற்படி ரம்ப் திட்டம்  பலஸ்தீனர் நாட்டுக்கு தெளிவான வழியை கொண்டிருக்கவில்லை என்கிறது ஹமாஸ். மேற்படி திட்டம் […]

பொய் AI செய்தி பரப்பி $300,000 உழைத்த இலங்கையர் 

பொய் AI செய்தி பரப்பி $300,000 உழைத்த இலங்கையர் 

Facebook எங்கும் பொய் செய்திகள், தரவுகள் என்பது யாரும் அறிந்தது. அவ்வாறு பொய் செய்திகள், தரவுகள் Facebook மூலம் பரவுகின்றன என்று Facebook அறிந்தும் வருமானத்தை மட்டும் விரும்பும் Facebook அதை தடுக்கவில்லை. இலங்கையரான கீத் சூரியபுர (Geeth Sooriyapura) என்பவர் இலங்கையில் இருந்து கொண்டே பிரித்தானிய வெள்ளையர்களை வெறிகொள்ள செய்யும் செய்தியை AI மூலம் உருவாக்கி, பிரித்தானிய வெள்ளையர்களுக்கு பரப்பி $300,000 உழைத்துள்ளார் என்கிறது The Bureau of Investigative Journalism (TBIJ) மற்றும் Institute of […]

யாருக்கு சொல்லியழ 24: Richard Falk 4 மணிநேர கனடிய விசாரணை

யாருக்கு சொல்லியழ 24: Richard Falk 4 மணிநேர கனடிய விசாரணை

அமெரிக்க யூத குடும்பத்தில் பிறந்து, Yale மற்றும் Harvard பல்கலைக்கழகங்களில் பயின்று, Princeton பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பதவி வகித்து, ஐ.நா. வின் விசேட Rapporteur அதிகாரியாக பதவி வகித்த 95 வயது Richard Falk என்பவரை கனடிய எல்லை அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.  இவர் Ottawa நகரில் வெள்ளி, சனி இடம்பெற இருந்த “Palestine Tribunal on Canadian Responsibility” என்ற பலஸ்தீன அமர்வு ஒன்றுக்கு செல்ல வியாழன் Toronto விமான நிலையம் வந்தபோதே 4 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். […]

பிரித்தானியாவில் அகதிகளின் குடியுரிமை 20 ஆண்டுகளின் பின்

பிரித்தானியாவில் அகதிகளின் குடியுரிமை 20 ஆண்டுகளின் பின்

புதிய சட்டப்படி பிரித்தானியா செல்லும் அகதிகள் அவர்களின் அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிரந்தர குடியுரிமையை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று பிரித்தானிய Home Secretary Shabana Mahmood அறிவித்துள்ளார். அதனால் இந்த 20 ஆண்டு கால வதிவுரிமை ஒரு தற்காலிக சலுகையாக மாறியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் அகதிகளின் நாடுகளின் நிலைமை வழமைக்கு திரும்பினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர். ஆனாலும் இந்த 20 ஆண்டுகளில் நன்றாக படித்து அல்லது நல்ல வர்த்தக முயற்சிகள் […]

இந்தியாவில் பிறந்த இலங்கையருக்கு இந்திய கடவுச்சீட்டு

இந்தியாவில் பிறந்த இலங்கையருக்கு இந்திய கடவுச்சீட்டு

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்ற தமிழ் பெற்றாருக்கு 1986ம் ஆண்டு பிறந்த கோகுலேஸ்வரன் என்ற மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்க இந்தியாவை கேட்டுள்ளது Madras High Court. 1955ம் ஆண்டு Citizenship Act பிரிவு 3(1) இல் குறிப்பிட்டபடி 1955ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி வரை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் இந்திய குடியுரிமை கொண்டவர். அதன்படி 1986ம் ஆண்டு பிறந்த கோகுலேஸ்வரன் இந்திய கடவுச்சீட்டு பெறும் உரிமை கொண்டவர் என்கிறது Madras […]

Standard Chartered வங்கியும் இலங்கையை கைவிடுகிறது

Standard Chartered வங்கியும் இலங்கையை கைவிடுகிறது

சுமார் 130 ஆண்டுகளாக இலங்கையில் இயங்கி வந்த பிரித்தானியாவின் Standard Chartered வங்கி தனது இலங்கை தனியார் சேவையை (retail banking) நிறுத்துகிறது. Standard Chartered வங்கியின் இலங்கை தனியார் சேவை பிரிவை இலங்கையின் DFCC வங்கி கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. நவம்பர் மாதம் 12ம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த இணக்கப்படி இந்த கொள்வனவுக்கு DFCC வங்கி 3.7 பில்லியன் இலங்கை ரூபாய்களை செலவிடுகிறது. Standard Chartered இலங்கை பிரிவின் தனியார் வைப்பு கணக்குகள், கடன் கணக்குகள், கடன் அட்டைகள், SME சேவைகள் ஆகியன DFCC […]

ரம்பின் காசா திட்டத்துக்கு ஐ.நா. முத்திரை பதிக்க முனைப்பு 

ரம்பின் காசா திட்டத்துக்கு ஐ.நா. முத்திரை பதிக்க முனைப்பு 

அக்டோபர் மாதம் 8ம் திகதி அமெரிக்க சனாதிபதி ரம்ப் முன்வைத்த பலஸ்தீனர் விரோத, இஸ்ரேல் சார்பு காசா சமாதான திட்டத்துக்கு ஐ.நா. அங்கீகாரம் பெற்று ஐ.நா. முத்திரையுடன் ரம்ப் காசாவில் தான் நினைத்ததை செய்ய முனைகிறார். ரம்பின் இந்த முயற்சியை ரஷ்யாவும், சீனாவும் தடுக்கின்றன. ரம்ப் தனது தலைமையில் Board of Peace என்ற குழுவை அமைத்து, அதற்கு உதவ அமெரிக்க சார்பு நாடுகளை கொண்ட தற்காலிக International Stabilization Force (ISF) அமைத்து, அதன் மூலம் ஹமாஸை அழித்து, இதை எல்லாம் […]

டெல்லியில் கார் வெடித்தது, 10 பேர் பலி 

டெல்லியில் கார் வெடித்தது, 10 பேர் பலி 

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள Red Fort என்ற 17ம் நூற்றாண்டு அரண்மனைக்கு அருகில் திங்கள் இரவு கார் ஒன்று வெடித்ததால் குறைந்தது 10 பேர் பலியாகியும், 30 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். கார் வெடித்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. அவ்விடத்துக்கு மெதுவாக நகர்ந்து வந்த ஒரு Hyundai i20 வகை கார் Red Light ஒன்றுக்கு தரித்த வேளையில், உள்ளூர் நேரப்படி மாலை 6:52 மணிக்கு வெடித்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் பின் இந்திய […]

Tajikistan விமான தளத்தை இந்தியா கைவிட்டது 

Tajikistan விமான தளத்தை இந்தியா கைவிட்டது 

இந்தியா தஜிகிஸ்தான் (Tajikistan) என்ற மத்திய ஆசிய நாட்டில் கொண்டிருந்த Ayni என்ற இடத்து விமானப்படை தளத்தை கைவிட்டுள்ளது.  சோவியத் முறிந்த காலத்தில் அப்போது கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்த தளத்தை இந்தியா தனது சொந்த முதலில் நவீனப்படுத்தி இந்திய விமானப்படை தளமாக பயன்படுத்தியது. இன்றுவரை இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரே இந்திய படைத்தளம் இதுவாகும். 2002ம் ஆண்டு இந்தியாவும், தஜிகிஸ்தானும் செய்துகொண்ட ஒப்பந்தம் 2022ம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கான உரிமை நீடிக்கப்படவில்லை. சீனாவும், […]

1 2 3 372