இஸ்ரேல் காசாவில் genocide செய்துள்ளது என்று ஐ.நா.வின் விசாரணை ஆணைக்குழு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று ஐ.நா. கூறவில்லை. The Independent International Commission of Inquiry on the Occupied Palestinian Territory என்ற ஆணைக்குழு 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை மொத்தம் 5 வகை genocide களில் இஸ்ரேல் 4 வகை genocide களை செய்துள்ளது என்கிறது. அவையாவன 1) ஒரு […]
சீன சனாதிபதி சீயுடன் தான் வெள்ளிக்கிழமை உரையாட உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று திங்கள் கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் Madrid நகரில் நலமே முன்னேறுவதாகவும் ரம்ப் கூறியுள்ளார். ஆனால் அடுத்த வர்த்தக பேச்சுக்கள் ஒரு மாதத்தின் பின் வேறு இடத்தில் தொடரும் என்று அமெரிக்க Treasury Secretary Scoot Bessent தெரிவித்து உள்ளார். அப்படியானால் வெள்ளி அறிவிக்கப்பட உள்ள இணக்கம் என்ன என்பது புதிராகவே உள்ளது. சீனா இவ்வகை அறிவிப்பு […]
பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்திருந்த 40 ரோஹிங்கியா அகதிகளை இந்தியா கடத்தி சென்று பர்மா கரையோர கடலில் கைவிட்டு உள்ளது என்று கூறுகிறது அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனத்தின் ஆய்வு செய்தி. இந்த அகதிகள் தற்போது தொலைந்து உள்ளனர். 2017ம் ஆண்டு தமது வீடுகளில் இருந்து பர்மா இராணுவத்தால் விரட்டப்பட்ட மேற்படி 13 பெண்களும், 27 ஆண்களும் இந்தியா சென்று அகதிகளாக பதிந்து உள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் 6ம் திகதி இந்திய அதிகாரிகள் இவர்களை […]
வெள்ளிக்கிழமை ஐ.நாவின் பொதுச்சபையில் (General Assembly) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனர்களுக்கான நாட்டுக்கு (two-state solution) 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்து உள்ளன. 10 நாடுகள் எதிர்க்க, 12 நாடுகள் வாக்களியாது விலகி இருந்தன. ஆனாலும் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட New York Declaration என்ற இந்த தீர்மானம் சட்டபடியானது அல்ல. ஐ.நாவில் பாதுகாப்பு சபையே பலம் கொண்டது, பொதுச்சபை ஒரு கண்துடைப்பு மட்டுமே. எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஆர்ஜென்டீனா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியன பிரதானம். ஆதரவாக வாக்களித்த நாடுகளில் […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஐ.நாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரம்பின் இந்த முயற்சி இந்த மாத இறுதியில் ஐ.நாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐ.நாவில் அகதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பெருமளவில் அகதிகளான ஐரோப்பியரையும், யூதர்களையும் மனதில் கொண்டு வரையப்பட்டவை. ஆனால் தற்போது இந்த உரிமைகளை பெரிதும் அனுபவிப்பவர்கள் ஆசிய, மத்திய கிழக்கு, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாட்டவரே. அதை ரம்ப் விரும்பவில்லை. உதாரணமாக தற்போதைய […]
அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு ஆதரவாக பரப்புரைகள் செய்துவரும் 31 வயதான Charlie Kirk புதன்கிழமை பிற்பகல் 12:20 மணியளவில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் Utah மாநிலத்து Orem என்ற நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுடப்பட்டார். குண்டு இவரின் தொண்டையில் பாய்ந்துள்ளது. Kirk குறிப்பாக இளையோரை ரம்ப் பக்கம் இழுக்க காரணமானவர். இவரின் podcast க்கு 5.3 மில்லியன் பின்தொடர்வோர் உள்ளனர். அமெரிக்காவின் ஆரம்ப அரசியல் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தாலும், பின்னர் […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் தாம் தற்போதும் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர்வதாகவும் தான் விரைவில் இந்திய பிரதமர் மோதியை சந்திக்க உள்ளதாகவும் செவ்வாய் கூறியுள்ளார். இரண்டு “Great Countries” களும் விரைவில் நல்ல இணக்கத்துக்கு வரும் என்றும் ரம்ப் கூறியுள்ளார். திடீரென உதிர்ந்த ரம்பின் அன்பான வார்த்தைகளுக்கு பதிலளித்த பிரதமர் மோதி வாஷிங்ரனும் நியூ டெல்லியும் “close friends and natural partners” என்றுள்ளார். கடந்த கிழமை மோதி சீனா சென்று சீன சனாதிபதி சீயை சந்தித்து உரையாடியதால் விசனம் அடைந்த ரம்ப் […]
கட்டாரின் Doha நகரில் ஹமாஸ் உறுப்பினர்கள் தங்கியிருந்த இடத்தை இஸ்ரேல் இன்று செவ்வாய் பிற்பகல் தாக்கியுள்ளது. இங்கு தங்கியிருந்த ஹமாஸ் உறுப்பினர்களே யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் திட்டம் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாம். இந்த தாக்குதலுக்கு வகுத்த திட்டத்தை இஸ்ரேல் Summit of Fire என்று பெயரிட்டு உள்ளது.
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைந்து இன்று பாராளுமன்றம் ஆர்ப்பாட்டம் செய்வோரால் தீயிடப்பட்டு உள்ளது. அதற்கு முன் பிரதமர் KP Sharma Oli பதவி விலகியுள்ளார். ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். பல அரசியல் தலைவர்களின் வதிவிடங்களும் தீயிடப்பட்டு அல்லது தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. முதலில் நேபாளில் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக இளையோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை கட்டுப்படுத்த அரசு social media களை தடை செய்தது. அதன் பின்னரே […]
பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் பிரதமர் Francois Bayrou மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் திங்கள் நிறைவேறியதால் பிரதமர் பதவியை இழக்க அரசு கவிழ்ந்துள்ளது. பிரதமருக்கு எதிராக 364 வாக்குகளும், ஆதரவாக 194 வாக்குகளும் கிடைத்துள்ளன. 2026ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் பிரெஞ்ச் அரசு $51 பில்லியன் பெறுமதியான செலவுகளை கட்டுப்படுத்த முனைந்த வேளையிலேயே அரசு கவிழ்ந்துள்ளது. இதனால் சனாதிபதி மக்கிறோன் (Macron) மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்த பிரதமர் 9 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். கடந்த […]