சீனாவுக்கு போட்டியாக, சீனாவின் உதவியுடன் இந்திய துறைமுகம்

சீனா பாகிஸ்தானில் தனது One Road One Belt திட்டத்துக்காக கட்டிவரும் துறைமுகத்துக்கு (Gwadar port) போட்டியாக இந்தியா ஈரானில் ஒரு துறைமுகத்தை, $500 மில்லியன் செலவில், கட்ட தீர்மானித்திருந்தது. ஈரானின் Chabahar என்ற இடத்தில் கட்டப்படும் இந்த துறைமுகத்துக்கு இந்தியா சீனாவின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு உள்ளது. . இந்தியா கட்டும் துறைமுகத்துக்கு தேவையான தொழிநுட்ப வசதிகள் இந்தியாவிடம் இல்லை. அதனால் இந்தியா மேற்கு நாடுகளிடம் இருந்து தேவையான நுட்பங்களை பெற திட்டமிட்டு […]

ஈரானில் தாக்குதல், 12 பேர் பலி, சவுதி காரணம்?

ஈரானில் இன்று புதன் காலை இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களுக்கு 12 பேர் பலியாகியும், மேலும் 42 பேர் காயமடைந்தும் உள்ளனர். மூன்றாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ஈரான் புலனாய்வு அமைச்சு கூறியுள்ளது. . ஒரு தாக்குதல் Imam Khomeini’s நினைவாலயத்திலும் மற்றைய தாக்குதல் ஈரான் பாராளுமன்றத்திலும் இடம்பெற்று உள்ளன. தலைநகர் தெகிரானில் உள்ள இந்த இரண்டு இடங்களும் சுமார் 20 km இடைவெளியில் உள்ளன. குறைந்தது ஒரு தற்கொலை தாக்குதல்காரரும் பங்கு கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. . ஈரானின் […]

இந்தியாவில் அதிஉயர் வெப்பம்

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது வெப்பநிலை அதிஉயர்வாக காணப்படுகிறது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 48 C ஆகவுள்ளது. தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 47 C ஆக்கவுள்ளது. . ஆந்திராவிலும், தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த மாதத்தில் மட்டும் 220 பேர் வெட்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர். கடந்த 4 வருடங்களில் சுமார் 4,620 பேர் இந்தியாவில் வெட்ப கொடுமைக்கு பலியாகி உள்ளனர் என்று இந்தியாவின் Earth Sciences அமைச்சு கூறியுள்ளது. . இந்த அதிஉயர் வெட்பத்துக்கு […]

சவுதி அணி கட்டாருடன் உறவுகளை துண்டிப்பு

சவுதி அரேபியா தலைமையில் சில இஸ்லாமிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்து உள்ளன. இன்று திங்கள் சவுதி, UAE, எகிப்து, ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவுகளை துண்டித்தன. அதை தொடர்ந்து யேமென் (Yemen), லிபியா, மாலைதீவு ஆகினாவும் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்தன. . சவுதி கட்டாருடனான தனது எல்லைகளை மூடி, விமான மற்றும் கடல் பயணங்களை நிறுத்தி உள்ளது. எகிப்து கட்டார் தூதுவரை 48 மணித்தியாத்துள் வெளியேறுமாறு பணித்துள்ளது. அத்துடன் தனது தூதுவரையும் திருப்பி அழைத்துள்ளது. . […]

லண்டனில் வாகனத்தால் தாக்குதல், 6 பேர் பலி

லண்டன் மாநகரில் உள்ள லண்டன் பாலம் (London Bridge) அருகே இன்று சனி மாலை 9:00 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெற்றும் வருகின்றனர். தாக்குதல்காரர் என்று கருதப்படும் 3 பேர் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டும் உள்ளனர். . லண்டன் பாலம் வழியே சென்ற வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மக்கள் நடைபாதை நோக்கு சென்று இந்த கொலைகளை செய்துள்ளது. […]

டிரம்ப் ஆட்சியில் சீன-ஐரோப்பிய உறவு வளர்ச்சி

தன்னிச்சையாக டிரம்ப் அரசு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளை நடைமுறைப்படுத்த, வெறுப்படைந்த ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் சீனாவின் நெருக்கத்தை நாட ஆரம்பித்துள்ளன. நேற்று ஜுன் முதலாம் திகதி டிரம்ப் அரசு சூழல் மாசடைவதை தடுக்கும் பொருட்டு உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Paris Accord என்ற இணக்கத்தில் இருந்து வெளியேறியது ஐரோப்பாவை மேலும் சீனா நோக்கி தள்ளியுள்ளது. . அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் Paris Accord என்ற வளிமண்டலத்துக்கு பாதகமான (greenhouse gas […]

இந்தியாவில் இறைச்சி மாட்டுக்கு தடை, மாநிலங்கள் எதிர்ப்பு

ஆட்சியில் உள்ள இந்துவாத இந்திய மத்திய அரசு கடந்த கிழமை இறைச்சிக்கு மாடுகள், எருமைகள், மற்றும் சில மிருகங்களை விற்பனை செய்தலையும், கொள்வனவு செய்தலையும் சட்டப்படி தடை செய்திருந்தது. ஆனால் சில மாநிலங்கள், குறிப்பாக இறைச்சி மாட்டு வர்த்தகத்தில் உள்ள மாநிலங்கள், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. . தமிழ்நாட்டில் உள்ள Madras High Court இந்த மத்திய அரசு சட்டத்தை 4 கிழமைகளுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த சட்டத்தின் நியாயத்தை ஆராய இந்த 4 […]

சர்வாதிகாரி ஜெனரல் Noriega மரணம்

1983 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டுவரை பனாமாவை (Panama) ஆண்ட சர்வாதிகாரி நோரியேகா (Manuel Noriega) திங்கள் இரவு பனாமா நகரில் உள்ள Santo Thomas வைத்தியசாலையில் காலமானார். இவர் ஆரம்பத்தில் CIAயின் கைக்கூலியாக இருந்து, பின் CIAயின் பகைமையால் அமெரிக்காவில் சிறை சென்றவர். . 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டில் பனாமா இராணுவத்தில் இணைந்து இருந்தார். 1968 ஆம் ஆண்டில் பனாமாவின் ஜெனரல் Omar Torrijos இராணுவ […]

எகிப்து கிறீஸ்தவர் மீது தாக்குதல், 26 பலி

எகிப்தில் இன்று வெள்ளிக்கிழமை IS ஆதரவு குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு குறைந்தது 26 கோப்ரிக் (Coptic) கிறீஸ்தவர்கள் பலியாகி உள்ளனர். அத்துடன் 25 பேர் காயமடைந்தும் உள்ளனர். . பஸ்களில் Minya என்ற சென்றுகொண்டிருந்த கிறீஸ்தவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. மூன்று வாகனங்களில் வந்த 8 முதல் 10 எண்ணிக்கையிலான IS ஆதரவு ஆயுததாரர் இந்த கொலையை செய்துள்ளார். . எகிப்து முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்றாலும், அங்கு சுமார் 10%மானோர் கிறீஸ்தவர் […]

அமெரிக்காவின் பாகிஸ்தான் உதவி மேலும் குறைப்பு

அமெரிக்காவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்திருந்த உதவி மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா $534 மில்லியன் உதவியை வழங்கி இருந்தது. ஆனால் டிரம்ப் அரசு 2008 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தானின் உதவியை $100 மில்லியன் ஆக குறைத்துள்ளது. அதையும் கடனாக வழங்குவதா அல்லது நன்கொடையாக வழங்குவதா என்று அமெரிக்கா இதுவரை முடிவு செய்யவில்லை. . அண்மை காலங்களில் அமெரிக்கா முன்னாள் எதிரி இந்தியாவுடன் உறவை அதிகரித்து, அதேவேளை முன்னாள் நண்பன் பாகிஸ்தானுடனான உறவை குறைத்தும் […]