இன்று செய்வாய் கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:58 மணியளவில் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவி உள்ளது. இம்முறை அந்த ஏவுகணை ஜப்பான் மேலாக சென்று பசுபிக் கடலுள் வீழ்ந்துள்ளது. இதனால் கோபம் கொண்டுள்ளது ஜப்பான். . இன்று ஏவப்பட்ட ICBM வகை கணை சுமார் 550 km உயரம் வரை உயர்ந்து, 2,700 km தூரம் சென்று வீழ்ந்துள்ளது. கடலுள் விழமுன் இந்த கணை 3 துண்டங்களாக பிரிந்து வீழ்ந்துள்ளது. இது ஜப்பானின் Hokkaido […]
அண்மையில் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்ட 39 வயதான பிரான்ஸின் ஜனாதிபதி Emmanuel Macron தனது முதல் மூன்று மாதகால அலங்காரத்துக்கு $31,000 (26,000 euro) வரையான தொகையை செலவு செய்துள்ளதாக Le Point வெளியீடு கூறியுள்ளது. . ஜனாதிபதியின் அலங்காரத்துக்காக அலங்காரம் செய்பவரான Natacha என்பவருக்கு 26,000 யூரோக்கள் (euro) வழங்கப்பட்டுள்ளது என்கிறது இந்த செய்தி. . ஜனாதிபதி குடியிருக்கும் Elysee Palace இந்த தரவுகளை உறுதியம் செய்துள்ளது. . இவருக்கு முன் பதவியில் […]
இன்று வெள்ளி இரவு 11:00 மணியளவில் அமெரிக்காவின் Texas மாநிலத்தின் Gulf of Mexico கரையோரத்தை தாக்க ஆரம்பித்துள்ளது சூறாவளி ஹார்வி (Harvey). கரையை தாக்க ஆரம்பித்தபோது இந்த சூறாவளியின் வேகம் சுமார் 209 km/h ஆக இருந்துள்ளது. அடுத்துவரும் நாட்களில் இந்த சூறாவளி பலத்த பாதிப்பை இங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. . வெள்ளி காலையில் வகை-1 (Category 1) ஆக மெக்சிக்கோ குடாவின் நடுப்பகுதியில் இருந்த சூறாவளி, வெள்ளி இரவு 11:00 மணியளவில் வகை-4 […]
Guru Gurmeet Ram Rahim Singh என்ற குருவை இந்தியாவின் ஹரியானா மாநில Panchkula நகர நீதிமன்றம் இன்று குற்றவாளி என்று .தீர்ப்பு கூறியுள்ளது. அந்த தீர்ப்பின்படி இவருக்கு 10 வருடங்கள் சிறை கிடைக்கலாம். இதை அறிந்த அவரின் பக்தர்கள் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த வன்முறைக்கு 32 பேர் பலியாகியும் உள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளதுடன், பல வாகனங்கள் தீ மூட்டப்பட்டும் உள்ளன. . 2002 ஆம் ஆண்டில் இரண்டு பெண்கள் இந்த குரு […]
கட்டார் (Qatar) வெளியுறவு அமைச்சர் தாம் ஈரானுடன் மீண்டும் முழுமையான உறவை வைத்துக்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். கட்டாரின் இந்த தீர்மானம் சவுதி தலைமையிலான சுனி இஸ்லாம் அணிக்கு மேலும் ஒரு அடியாகவுள்ளது. . 2016 ஆம் ஆண்டு கட்டார், சவுதியின் வேண்டுகளுக்கு இணங்க, ஈரானில் இருந்து கட்டாருக்கான தூதுவரை திருப்பி அழைத்திருந்தது. ஈரானுடனான தொடர்புகளையும் குறைத்து இருந்தது. ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. . சுமார் 3 மாதங்களுக்கு முன் சவுதி தலைமையில் எகிப்து, UAE, […]
அமெரிக்காவின் 7th Fleet இராணுவ அதிகாரி (commander) Vice Admiral Joseph Aucoin அவரது பதவியில் இருந்து இன்று புதன்கிழமை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் இடத்துக்கு Vice Admiral Phillip Sawyer நியமனம் செய்யப்பட்டு உள்ளார். . அமெரிக்காவின் 7th Fleet ஆசியாவை மையமாக கொண்டது. இந்த இராணுவ அணியில் 60 முதல் 70 வரையான யுத்த கப்பல்கள் இருக்கும். அதில் சுமார் 18 ஆசியாவிலேயே நிலைகொண்டிருக்கும். அண்மையில் விபத்துகளுக்கு உள்ளான USS Fitzgerald என்ற […]
2050 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 100% தூய, சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத சக்தி பயன்படுத்தப்படும் என்று கணிக்கின்றன ஐ.நா. வின் UNDP (United Nations Development Program) அமைப்பும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB – Asian Development Bank) . UNDP அமைப்பும், ABD அமைப்பும் இணந்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை 2050 ஆண்டளவில் சுமார் 34 Gigawatt 34,000 MW) சக்தியை உட்கொள்ளும் என்றும் அதில் 15 Gigawatt காற்றினால் உருவாக்கப்டும் சக்தி (wind […]
மீண்டும் ஒரு நவீன அமெரிக்க யுத்த கப்பல் விபத்தில் சிக்கியுள்ளது. USS John S. McCain என்ற தாக்கியழிக்கும் யுத்த கப்பல் (destroyer) இன்று திங்கள் காலை, சிங்கப்பூருக்கு அண்மையில், Strait of Malaccaவில் வர்த்த கப்பல் ஒன்றுடன் மோதியுள்ளது. . சிங்கப்பூர் நேரப்படி திங்கள் காலை 6:24 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தின் பின் அதில் இருந்த 10 கடல்படையினரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் சாதாரணமாக 23 உயர் அதிகாரிகள், 24 இடைநிலை அதிகாரிகள், […]
சிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் சர்வாதிகாரி Robert Mugabeயின் மனைவி Grace Mugabe தாக்கியதில் தென்னாபிரிக்க அலங்காரி (model) ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதால் அவரை அங்கு கைது செய்ய அழுத்தங்கள் உருவாகி இருந்தன. ஆனாலும் Grace Mugabeக்கு இராசதந்திரிகளுக்கான உரிமை (diplomatic immunity) வழங்கியுள்ளது தென்னாபிரிக்கா. . Gabriella Engels என்ற தென்னாபிரிக்க அலங்காரியும் அவளின் இரண்டு நண்பிகளும் Grace முகாபேயின் இரண்டு மகன்களை சந்திக்க கடந்த ஞாயிற்று கிழமை தென்னாபிரிக்க விடுதி […]
Spain நாட்டின் Barcelona என்ற நகரில் இடப்பெற்ற வாகன தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 13 பேர் பலியாகியும், மேலும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒரு நபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. . இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் மேற்படி வாகன சாரதி அந்த வாகனத்தை (van) முன்னோக்கியும், பின்னோக்கியும் வேகமாக நகர்த்தி தாக்குதலை நடாத்தினார் என்றுள்ளார். தாக்குதல் நடாத்தப்பட்ட இடம் […]