காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ வாக்கு மூலம் தடுத்துள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையில் 14 நாடுகள் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்து உள்ளது. வீட்டோ வாக்கு உரிமை கொண்ட பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 4 நாடுகளும், ஏனைய 10 நாடுகளும் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளன. […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் இரண்டாம் ஆட்சியின் ஆரம்பத்தில் ரம்பின் வலது கரம் போல் இயங்கியவர் Tesla நிறுவன CEO இலான் மஸ்க். அண்மையில் ரம்ப் ஆட்சியில் இருந்து விலகிய இவர் செவ்வாய்க்கிழமை ரம்பின் வரவு-செலவை கடுமையாக வசை பாடியுள்ளார். ரம்ப் “big and beautiful” என்று அழைத்த வரவு-செலவு திட்டத்தை இலான் மஸ்க் “disgusting abomination” என்று அழைத்துள்ளார். அத்துடன் இந்த வரவு-செலவு திட்டத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை அடுத்த நவம்பர் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் கூறியுள்ளார் இலான் மஸ்க். […]
யூக்கிறேனை இலகுவில் தாக்கி அடக்கி விடலாம் என்று ரஷ்ய சனாதிபதி பூட்டின் கொண்டிருந்த கனவு தொடர்ந்தும் பாரிய தோல்விகளை தழுவுகிறது. ஜூன் 1ம் திகதி யூக்கிறேன் ரஷ்யாவுள் ஆழ ஊடுருவி தனது drone மூலமான தாக்குதல்களை செய்துள்ளது. ரஷ்யா தான் ஆரம்பித்த யுத்தத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாவது அவமானமே. யூக்கிறேனில் இருந்து சுமார் 4,000 km தொலைவில் ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள Belaya என்ற விமானப்படை தளம் மீது இடம்பெற்ற தாக்குதல் வியப்புக்கு […]
இஸ்ரேல் காசா மீது திணித்துள்ள தடைகளை மீறி சூழல் பாதுகாப்பு வாதியான Greta Thunberg உதவி கப்பல் ஒன்றை காசா நோக்கி செலுத்துகிறார். Madleen என்ற இந்த கப்பல் இத்தாலியின் Catania என்ற தென்பகுதி துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து உள்ளது. Freedom Flotilla Coalition என்ற தொண்டர் அமைப்பின் ஆதரவுடனேயே Thunberg இந்த உதவி வழங்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஞாயிறு பயணத்தை ஆரம்பித்த இவருடன் மொத்தம் 11 தொண்டர்கள் பயணிக்கின்றனர். சுவீடன் நாட்டவரான Thunberg தான் […]
அண்மையில் இந்தியா பாகிஸ்தானுடன் செய்த யுத்தத்தின் முதல் நாளே இந்தியா பல யுத்த விமானங்களை இழந்திருந்தது என்பதை இந்தியாவின் முப்படை தலைமை அதிகாரி General Anil Chauhan ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும் அவர் எத்தனை இந்திய விமானங்கள் சுடப்பட்டன, எவ்வகை விமானங்கள் சுடப்பட்டன என்பதை விபரமாக தெரிவிக்கவில்லை. சிங்கப்பூரில் இடம்பெறும் பாதுகாப்பு தொடர்பான Shangri-La Dialogue அமர்வில் Bloomberg செய்தி நிறுவனம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு Chauhan “The more important question is not whether jects were […]
காசாவில் இடம்பெறுவது war crime என்று கூறுகிறார் முன்னாள் இஸ்ரேல் பிரதமர் Ehud Olmert (2006 – 2009). இவர் இஸ்ரேலில் வெளியாகும் Haaretz என்ற பத்திரிகைக்கு காசா யுத்தம் தொடர்பாக எழுதிய கட்டுரை ஒன்றிலேயே இவ்வாறு சாடியுள்ளார். பின்னொரு கூற்றில் “What is it if not a war crime?” என்று கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் Olmert. காசா யுத்த ஆரம்பத்தில் இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டு பலஸ்தீனரை வதைக்காது என்று கூறிய Olmert தற்போது காசாவில் இஸ்ரேல் […]
இந்தியாவும் தற்போது stealth யுத்த விமான தயாரிப்பு முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த அறிவிப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் நேற்று செவ்வாய் அறிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானுடனான யுத்தத்தில் இந்தியா தனது யுத்த விமானங்கள் பலவற்றை இழந்து இருந்தது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய J-10 வகை stealth விமானங்களே இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என்று இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் இந்தியா 2 Rafale வகை நவீன விமானங்களை இழந்துள்ளதாக அமெரிக்கா […]
இதுவரை காலமும் காசா யுத்தத்தில் அகப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஐ.நாவும் அதனுடன் இணைந்த தொண்டர் நிறுவனங்களுமே உணவு, மருந்து போன்ற அவசிய உதவிகளை வழங்கி வந்தன. ஆனால் அவ்வகை உதவி வழங்களை பறித்து இராணுவ மயமாக்க முனைகிறது Gaza Humanitarian Foundation (GHF) என்ற அமெரிக்க-இஸ்ரேல் அமைப்பு. இந்த அமைப்பை ஐ.நா. நிராகரித்து உள்ளது. GHF அமைப்பு திங்கள் தாம் சிலருக்கு உதவிகளை வழங்கியதாக அறிக்கை விட்டிருந்தது. ஆனால் அந்த வழங்கல் எப்போது, எந்த இடத்தில் செய்யப்பட்டது […]
காசாவில் மீண்டும் ஒரு யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இம்முறை இந்த யுத்த நிறுத்தம் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அரசால் முன் வைக்கப்பட்டது. ஹமாஸ் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாலும், இஸ்ரேல் இதுவரை தனது தீர்மானத்தை அறிவிக்கவில்லை. இந்த யுத்த நிறுத்தம் நடைமுறை செய்யப்பட்டால் 10 இஸ்ரேல் கைதிகள் இரண்டு குழுக்களாக விடுதலை செய்யப்படுவர். யுத்த நிறுத்தம் 70 தினங்களுக்கு நீடிக்கும். முன்னாள் சனாதிபதி பைடென் நடைமுறை செய்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மார்ச் 18ம் திகதி […]
காசாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை செய்த விமான தாக்குதலுக்கு 10 பிள்ளைகளை கொண்ட Alaa al-Najjar என்ற பெண் வைத்தியரின் 9 பிள்ளைகள் பலியாகி உள்ளனர். அதே வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் கணவர் வைத்தியரான மனைவியை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய வேளையிலேயே இஸ்ரேலின் விமானம் வீட்டை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு 11 வயது மகனும், தந்தையும் காயப்பட 9 பிள்ளைகள் பலியாகினர். இவர்களின் மூத்த பிள்ளைக்கு வயது 12. காயங்களுடன் தப்பிய 11 வயது மகனுக்கு Graeme Groom […]