தனது பொதுவாழ்வு முழுவதும் தனது தவறுகளை மற்றவர்களின் தலையில் சுமத்தி தப்பித்துக்கொள்ளும் இயல்பு கொண்ட அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான தனது தவறுகளை ஐ.நா.வின் சுகாதார அமைப்பான WHO மீது திணிக்க முயல்கிறார். . சீனா கொரோனா வைரஸ் தொடர்பான ஆபத்துகளை முதலில் முழுமையாக வெளியிடவில்லை என்றும், WHO அதற்கு ஆதரவாக இருந்துள்ளது என்றும் ரம்ப் கூறி உள்ளார். அதனால் WHO அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியையும் நிறுத்த பணித்துள்ளார். . […]
கொரோனா காரணமாக இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பொருளாதார வீழ்ச்சி 1930 ஆம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியிலும் அதிகமாக இருக்கும் என்று இன்று செவ்வாய் IMF (International Monitory Fund) கூறியுள்ளது. . உலக அளவில் இந்த ஆண்டு பொருளாதாரம் சுமார் 3% ஆல் வீழ்ச்சி அடையும் என்றும், அடுத்த வருடம் ஓரளவுக்கு மீண்டும் உலக பொருளாதாரம் வளரும் என்று IMF கூறி உள்ளது. . கடந்த ஜனவரி மாதம் 2020, கொரோனா பாதிப்புக்கு […]
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் உட்பட 8 நாடுகளை கொண்ட தென் ஆசிய நாடுகள் கடந்த 40 வருடங்களில் நிகழும் அதிகூடிய பொருளாதார மந்த நிலையை இந்த வர்த்தக ஆண்டில் அடையும் என்று உலக வங்கி (World Bank) இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது. . சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தென் ஆசிய நாடுகள் 6.3% பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி கூறி இருந்தாலும், கொரோனா வரைஸ் காரணமாக மேற்படி […]
பொதுவாக ஒரு புதிய நோய் பரவும்போது அதன் காரணி, குணம், காவி போன்றவற்றை விஞ்ஞானம் தேடும். அவ்வாறு தேடிய அறிவை பயன்படுத்தியே அந்த நோயை குணப்படுத்தும் மருந்து, அந்த நோயை தொற்றாது தடுக்கும் மருந்து போன்றவற்றை தயாரிக்க முடியும். . ஆனால் கொரோனாவின் காரணி, குணம், காவி எல்லாவற்றையும் விஞ்ஞானம் திடமாக அறிய முடியாது உள்ளது. கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் கூறிய விஞ்ஞான கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் தற்போது கூறப்படுகின்றன. . பிரித்தானிய மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகள் […]
உலக அளவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகை 102,000 ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளை கொரோனா தொற்றியோர் தொகை 1.68 மில்லியன் ஆக உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே தற்போது மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொற்றுக்கு உள்ளாகி பின் குணமடைந்தோர் தொகை 374,509 ஆகவும் உள்ளது. . அமெரிக்காவில் மட்டும் தற்போது 491,358 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் 157,053 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இத்தாலியில் 147,577 பேரும், […]
மே 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையான கிழமையில் அமெரிக்கா மொத்தம் 6.6 மில்லியன் தொழில்களை இழந்துள்ளது. விமான சேவைகள், உணவகங்கள், விடுதிகள், தொழிச்சாலைகள், அலுவலகங்கள் என்பன தமது பணியாளர்களை நீக்கியமை இந்த பாரிய அளவிலான தொழில் இழப்புக்கு காரணம். . கடந்த கிழமைக்கு முன்னைய கிழமை அமெரிக்கா 6.7 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது. அதற்கு முன்னைய கிழமை 3.3 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது.அதனால் கடந்த 3 கிழமைகளில் […]
கொரோனா வரைஸ் பரவ ஆரம்பித்த சீன நகரமான 11 மில்லியன் மக்களை கொண்ட வூஹான் (WuHan) இன்று புதன்கிழமை, 76 நாட்களின் பின், முழுமையாக வழமைக்கு திரும்பியது. ஜனவரி 23 ஆம் திகதி முதல் ஊரடங்கு போல் முடக்கி வைக்கப்பட்டு இருந்த வூஹான் மக்கள் இன்று தடைகள் எதுவும் இன்றி நடமாட விடப்பட்டனர். . தடைகள் நீக்கப்பட்ட முதல் நாளே 55,000 பேர் ரயில்கள் மூலம் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பல தூர இடங்களுக்கு பயணித்து உள்ளனர். […]
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு அதிகம் பாதிப்பு அடைந்த துறை பயணிகள் விமான சேவையே. தற்போது பயணிகள் விமான சேவைகள் தமது நாளாந்த சேவைகளை 70% முதல் 80% ஆல் குறைத்து உள்ளன. ஆனாலும் சில விமானங்கள் தொடர்ந்தும் ஏறக்குறைய வெறுமையாகவே பறக்கின்றன. . கடந்த வெள்ளிக்கிழமை மொத்தம் 76 ஆசங்களை கொண்ட American Airlines flight 4511 அமெரிக்காவின் Washington DC யில் இருந்து New Orleans நகரத்துக்கு Carlos என்ற 1 பயணியுடன் மட்டுமே பறந்துள்ளது. […]
. அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள Bronx மிருகக்காட்சியகத்தில் உள்ள Nadia என்ற மலாயன் புலிக்கும் கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மிருகக்காட்சியகத்தில் இருந்தாலும் இந்த புலி காட்டு மிருகம் என்ற வகையிலேயே உள்ளது, வளர்ப்பு மிருகம் அல்ல. . இந்த புலி இருமல் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏப்ரல் 2 ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போதே அதற்கு கொரோனா தொற்றியது தெரிந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த காடசியக்கத்தில் மேலும் ஒரு […]
மலேசியாவில் 1MDB (1 Malaysia Development Berhad) என்ற முதலீட்டில் இடம்பெற்ற ஊழல் உண்மைகளை பகிரங்கப்படுத்திய Xavier Justo மலேசியாவில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளார். சுவிஸின் தலைநகர் ஜெனீவா சென்ற பின்னரே இவர் தனது மலேசிய நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து உள்ளார். இவருடன் இவரது மனைவியும், மகனும் கூடவே தப்பி உள்ளனர். . இவர் முன்னர் சவுதியை தளமாக கொண்ட PetroSaudi என்ற எண்ணெய்வள நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றியவர். PetroSaudi நிறுவனத்துக்கும், 1MDB […]