உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் கவனத்தை வைத்திருந்தாலும், வடகொரியா இன்று மீண்டும் குறைந்தது ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது. வடகொரிய நேரப்படி ஞாயிறு காலை இந்த ஏவலை வடகொரியா செய்துள்ளது. . கடந்த ஒரு மாத காலத்துள் வடகொரியா செய்து கொண்ட 6 வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த மாதம் 9 ஆம் திகதி மட்டும் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது. பின் 27 ஆம் திகதி மேலும் 2 ஏவுகணைகளை […]
உலக நாடுகள் எங்கும் ஆண்கள் வாழும் காலத்திலும் அதிக காலத்துக்கு பெண்கள் வாழ்வது நாம் அறிவோம். ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி ஆண் மிருகங்களில் அதிக காலத்துக்கு பெண் மிருக்கங்கள் வாழ்கின்றனவாம். . மொத்தம் 101 மிருகங்களின் வாழ்க்கை காலங்களை ஆராய்ந்த பிரித்தானியாவின் University of Bath ஆய்வாளர்களே இந்த ஆய்வை Proceedings of the National Academy of Sciences என்ற வெளியீட்டில் விபரித்து உள்ளனர். . சராசரியாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 8% […]
பிரித்தானிய பிரதமர் Boris Johnson (வயது 55) ஐயும் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனாலும் தான் தொடர்ந்தும் பிரதமர் பணிகளை தொடர உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். . பிரதமர் தனக்கு நேற்று வியாழக்கிழமை நோய்க்கான அறிகுறி தென்பட்டதாகவும், பரிசோதனைகள் அவருக்கு கொரோனா தொற்றியதை உறுதி செத்ததாகவும் கூறி உள்ளார். அதனால் தான் வீட்டில் இருந்து பணிபுரிய உள்ளதாக அவர் கூறியுள்ளார். . இதுவரை 578 பேர் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியாகி […]
இன்றைய தவுகளின்படி உலகத்தில் அமெரிக்காவிலேயே அதிகம் பேர் கொரோனா வைரஸின் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்று அமெரிக்காவில் 82,404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 1,178 பேர் அமெரிக்காவில் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் குணமடடைந்தோர் தொகை 619 மட்டுமே. . சுமார் 330 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்கா ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டிருக்கவில்லை. இந்த வைரஸ் மீது ரம்ப் அரசு கொண்டிருந்த உதாசீனமே அதற்கு […]
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை (unemployment) கடந்த கிழமை என்றைக்கும் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது. இன்று வியாழன் அமெரிக்காவின் Department of Labor விடுத்த அறிக்கையின்படி கடந்த கிழமை 3.28 மில்லியன் ஊழியர்கள் தமது வேலைகளை இழந்து, வேலை இழப்புக்கான காப்புறுதி பணம் (unemployment insurance) பெற விண்ணப்பித்து உள்ளனர். . கடந்த கிழமை தமது வேலைவாய்ப்பை இழந்து காப்புறுதிக்கு விண்ணப்பித்தோரின் தொகை (3.28 million) இதுவரை கொண்டிருந்த அதி கூடிய 1982 […]
தாய்லாந்து கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கையில், அந்நாட்டு அரசர் (King Maha Vajiralongkorn, வயது 67) ஜெர்மனியில் உள்ள மலை பகுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளார். இதனால் கோபம் கொண்டுள்ளார் சில தாய்லாந்து மக்கள். தம்முடன் இல்லாத மன்னர் எதற்கு என்று அவர்கள் வினாவுகின்றனர். . மன்னார் நாட்டில் இல்லாமை தொடர்பாக கருத்து கூற மறுத்த அரசு, பதிலாக மன்னரை அவதூறு செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரித்து உள்ளது. Puttipong Punnakanta என்ற அமைச்சர் மன்னரை […]
இஸ்ரேலுடன் அரபு நாடுகள் மோதிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில், அன்றைய எண்ணெய் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இஸ்ரேலின் உறவு நாடுகள் மீது எண்ணெய் ஏற்றுமதி தடையை விதித்தன. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்க அவற்றின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகின. . 1973 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா படிப்படியாக எண்ணெய் உற்பத்தியில் சுயாதீனம் அடைய முயற்சித்தது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி செலவு மிகவும் அதிகம் என்றாலும், வளர்ந்து வந்த உலக பொருளாதாரம் […]
ஆபிரிக்க நாடான மொசாம்பிகில் பார வாகனம் ஒன்று இழுத்து சென்ற கொள்கலம் ஒன்றை சோதனை இட்ட மொசாம்பிக் போலீசார் அதனுள் 64 உடல்களையும், 14 பேரை உயிருடனும் கைப்பற்றி உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள். . எதியோப்பியா (Ethiopia) என்ற நாட்டின் ஆண்களே அகதிகளாக தென் ஆபிரிக்கா செல்ல முனைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. . அந்த பார வாகனத்தின் சாரதியும், அகதிகள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இனொருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு […]
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று நடுநிசியில் இருந்து 21 நாட்களுக்கு முழு இந்தியாவும் முடக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை பிரதமர் மோதி இன்று தொலைக்காட்சி ஊடாக அறிவித்து உள்ளார். . இந்தியாவில் தற்போது 519 பேர் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளார்கள். அத்துடன் 10 பேர் மரணமாகியும் உள்ளனர். கொரோனா தொற்றியோர் தொகை அதற்கான பரிசோதனையை செய்தோர் தொகையில் தங்கி உள்ளது. தற்போது இந்தியாவில் சிறிதளவு தொகையினரே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். . இந்த […]
வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது. பதிலாக இந்த போட்டிகள் 2021 ஆம் ஆண்டு கோடை காலத்துக்கு முன்னரான காலத்தில் இடம்பெறும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. . கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை பின்தள்ளும் ஜப்பானின் விருப்பத்தை ஒலிம்பிக் அமைப்பு ஏற்றுக்கொண்டு இந்த பின்தள்ளலை உறுதி செய்துள்ளது. 2021 ஆண்டில் இடம்பெற்றாலும் இந்த போட்டி Tokyo 2020 என்றே அழைக்கப்படும். […]