இன்று செவ்வாய் ஐ. நா. வில், பொதுமக்களுக்கு எதிராக தடைசெய்யப்பட்ட குளோரின் வாயு குண்டுகளை வீசியது என்று குற்றம் கூறி, சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துவந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் veto மூலம் தடுத்துள்ளன. சிரியாவின் யுத்தம் ஆரம்பித்தபின் இன்றுடன் மொத்தம் ஏழு தடவைகள் ரஷ்யா சிரியவையும், அதன் தலைவர் Assadஐயும் பாதுகாத்து உள்ளது. . அத்துடன் டிரம்ப் ஆட்சியில் இதுவே முதல் தடவையாக ரஷ்யா அமெரிக்காவின் தீர்மானம் ஒன்றை ஐ.நாவில் veto மூலம் நிராகரித்து உள்ளது. […]
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஒரேயொரு அமெரிக்க நிரந்தர படை முகாம் Djibouti என்ற சிறிய நாட்டில் உள்ளது. தற்போது இந்த அமெரிக்க முகாமுக்கு அண்மையில், சுமார் 12 km தொலைவில், சீனா தனது 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்படை முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் வேகமாக ஈடுபாட்டு உள்ளது. சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் அமையப்போகும் முதலாவது சீன படைமுகாம் இதுவாகும். . நியூ யோர்க் நகரில் நடந்த 9/11 தாக்குதலின் பின், மத்தியகிழக்கு ஆயுத குழுக்களுக்கு […]
பெரிய அளவில் ஆடம்பர கல்யாண விழாக்கள் நடாத்துவோரை 10% வரி செலுத்த நிர்பந்திக்கும் வகையில் சட்டம் ஒன்றை நாடளவில் நடைமுறைப்படுத்த இந்தியா முனைகிறது. ஏட்டிக்கு போட்டியாக ஆடம்பர கல்யாண விழாக்கள் செய்யப்படும்போது பெரும் விரையங்கள் ஏற்படுவதாகவும், வறியோரையும் அவர்களின் நிலைக்கு அப்பால் செலவழிக்க தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. . காங்கிரஸ் M.P. Ranjeet Ranjan (பீஹார் மாநிலம்) அறிமுகப்படுத்தும் இந்த சட்டத்தின்படி, சட்டம் நடைமுறைக்கு வந்தால், 500,000 இந்திய ரூபாய்களுக்கு மேல் (சுமார் $7500.00) திருமணத்துக்கு செலவிடுவோர் 10% […]
அமெரிக்க உளவு திணைக்களத்தின் முன்னாள் பணியாளர் Edward Snowden பின்னாளில் அமெரிக்காவின் உளவு சம்பந்தமான இரகசியங்களை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தி இருந்தார். அதனால் அவர் அமெரிக்க அரசின் எதிரியும் ஆனார். அமெரிக்காவை விட்டு தப்பியோடிய இவர் சிலகாலம் Hong Kong நகரிலும் மறைந்திருந்தார். . Snowden Hong Kong நகரில் மறைந்திருந்த காலத்தில் அவருக்கு வதிவிட வசதி வழங்கியவர்கள் அங்கிருந்த இலங்கை அகதிகள் என்றும் கூறப்படுகிறது. அந்த இலங்கை அகதிகளை தேடி தற்போது இலங்கை CID போலீசார் Hong […]
இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று இந்தியா வலியுறுத்த மாட்டாது என்று இந்தியாவின் வெளிவகார செயலாளர் S. Jaishankar கூறியதாக New Indian Express செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த விபரத்தை Jaishankar இன்று திங்கள்கிழமை TNAக்கு கூறியுள்ளார். . 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி வடக்கும், கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும். ஆனால் இந்தியா அந்த கொள்கையை கைவிட்டு உள்ளது. 1987 இல் பலமான இஸ்லாமிய கட்சி என்று […]
தென்கொரியாவின் Samsung நிறுவனத்தை ஆரம்பித்தவரின் பேரனான Lee Jae-yong தென்கொரிய அரசால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய தென்கொரிய ஜனாதிபதி Park Geun-hyeக்கும் அவருடைய நண்பி Choi Soon-silக்கும் எதிராக செய்யப்படும் ஊழல் விசாரணைகள் தொடர்பாகவே Lee Jae-yongயம் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது Samsung நிறுவனத்தின் Vice Chairman ஆக பதவியில் உள்ளார். . இவர் Samsung நிறுவனத்துக்கு பயன்படும் வகையில் சட்டங்களை அமைக்க, ஜனாதிபதியின் நண்பிக்கு $38 மில்லியன் பணம் வழங்கினார் என்று […]
தென்னிலங்கை துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம் செய்துள்ளது. அத்துடன் தென்னிலங்கையில் செய்யவிருந்த $1.1 பில்லியன் முதலீட்டு வேலைகளையும் சீனா பின்தள்ளி உள்ளது. . ஆரம்ப கால உடன்படிக்கைகளின்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80% உரிமையை 99 வருடங்களுக்கு சீனா கொள்ளவிருந்தது. இந்த விடயம் கடந்த ஜனவரி 7 ஆம் திகதியளவில் முற்றாகி இருந்திருத்தல் வேண்டும். ஆனால் அவ்விவகாரம் இப்போதும் இழுபறியில் உள்ளது. துறைமுகத்துக்கு அப்பால், 15,000 ஏக்கர் நிலத்தில் சீனா வர்த்தக வலயம் ஒன்றும் அமைக்க விரும்பி […]
இந்தியாவின் விண்வெளி அமைப்பான Indian Space Research Organization (ISRO) ஒரே ஏவலில் மொத்தம் 104 செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஒரே ஏவலில் செலுத்தப்பட்ட செய்மதிகளின் தொகைகளில் இதுவே அதிகம். இதற்கு முன், 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா 39 செய்மதிகளை ஒரே ஏவலில் அனுப்பி இருந்தது. ஏவப்பட்டு 30 நிமிடங்களில் 104 செய்மதிகளும் தமக்குரிய பாதைகளில் (orbits) பயணிக்க தொடங்கி உள்ளன. . மொத்தம் 104 செய்மதிகள் ஏவப்பட்டாலும் அதில் ஒரு செய்மதி மட்டுமே […]
டிரம்பின் ஆட்சியில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர், ஒரு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல், Michael Flynn ஆலோசகர் பதவியை திங்கள் இரவு இழந்துள்ளார். டிரம்ப் ஆட்சியில் வீழ்ச்சி அடையும் முதலாவது முன்னணி உறுப்பினர் இவராகும். . ஒபாமா ஆட்சி காலத்தில், டிரம்ப் சட்டப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்கமுன், ரஷ்யா மீது சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஹில்லாரி கிளின்டன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் emailகளை களவாடி பகிரங்கப்படுத்தியதால் கோபம் கொண்ட […]
அண்மையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு அங்குள்ள அகதிகளுக்கு எதிராக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் உள்ள சில அகதிகள் கனடாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தற்போது கனடாவில் குளிர் காலம் ஆகையால் இவர்களுள் சிலர் கடும் குளிரில் அகப்பட்டு உடல் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர். . இவ்வாறு நகரும் அகதிகளில் சிலர் கடாவின் Manitoba மாநிலத்து பெருநகரான Winnipeg நகருக்கு தெற்கே, சுமார் 110 km தொலைவில் உள்ள அமெரிக்க-கனடிய எல்லை நகரான Emerson மூலம் கனடா சென்றுள்ளனர். […]