இந்தியாவின் ÍndiGo விமான சேவை கடந்த சில தினங்களாக பலத்த நெருக்கடியில் உள்ளது. இது சுமார் 1,000 விமான சேவைகளை இடைநிறுத்தம் செய்ததால் இந்தியாவில் விமான சேவை பாரிய பாதிப்புக்கு உள்ளாகியது. அண்மையில் இந்திய அரசு நடைமுறை செய்யவிருந்த விமானிகளுக்கான புதிய விதிகளே IndiGo குழப்பத்துக்கு காரணம். விமான சேவை பாதுகாப்பை கருத்தில் கொண்ட இந்திய அரசு அண்மையில் விமானிகள் தொடர்பாக நடைமுறை செய்த விதிகள் சில வருமாறு: 1) விமானிகள் ஒவ்வொருவரும் கிழமை ஒன்றுக்கு குறைந்தது 48 மணித்தியால ஓய்வை கொண்டிருக்க […]
இஸ்ரேல் காசாவில் செய்யும் கொடுமைகள் காரணமாக இஸ்ரேலை Eurovision பாட்டு போட்டியில் இருந்து விலத்தாதால் அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்லோவேனிய (Slovenia) ஆகிய நாடுகள் தாம் 2026ம் ஆண்டு Eurovision போட்டியில் பங்கு கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ளன. நெதர்லாந்தின் ஒளிபரப்பு நிறுவனமான AVROTROS, ஸ்பெயின் நிறுவனமான RTIVE ஆகியன இந்த அறிவிப்பை செய்துள்ளன. இந்த நாடுகள் இஸ்ரேலின் KAN என்ற ஒளிபரப்பு நிறுவனம் போட்டியில் பங்கு கொள்வதை தடை செய்ய கேட்டிருந்த. 1956ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் […]
அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் பெறுமதி வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. டிசம்பர் 3ம் திகதி அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 90.30 இந்திய ரூபாய்கள் கிடைத்துள்ளன. இது வரலாற்றில் இந்திய ரூபாயின் அதிக வீழ்ச்சியாகும். 1950ம் ஆண்டு அளவில் ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 5.00 இந்திய ரூபாய்கள் கிடைத்தன. ஆனால் இந்திய ரூபாயின் பெறுமதி படிப்படியாக குறைந்து தற்போது 90.00 ரூபாய்கள் கிடைக்கின்றன. படம்: The Indian Express காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய ரூபாய் […]
அமெரிக்காவுக்கு போதை கடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி செப்டம்பர் 2ம் திகதி முதல் இதுவரை 22 வள்ளங்களை சர்வதேச கடலில் வைத்து குண்டு வீசி தாக்கி அழித்தது அமெரிக்க படைகள். இந்த தாக்குதல்களுக்கு 83 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச கடலில் வைத்து தாக்கியமை சர்வதேச சட்டங்களுக்கு முரண் என்றாலும் எந்த நாடும், தங்களின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு, ரம்புக்கு எதிராக ஐ.நா. செல்லவில்லை. மேற்படி தாக்குதல்களில் ஒன்றில் தப்பியவர்களை கைது செய்து நீதிமன்றம் எடுக்காது அவர்களின் நாடுகளுக்கு […]
புதன்கிழமை பிரெஞ்சு சனாதிபதி மக்ரோன் (Macron) சீனாவின் தலைநகர் சென்று சீனா சனாதிபதி சீயை சந்திக்கவுள்ளார். மறுபுறம் வியாழன் ரஷ்ய சனாதிபதி பூட்டின் இந்தியா சென்று பிரதமர் மோதியை சந்திக்கவுள்ளார். இரு சந்திப்புகளும் பெரும் அறிவிப்புகளை செய்யலாம் சென்று கருதப்படுகிறது. டிசம்பர் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை மக்ரோன் சீன பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். இவர் மூடிய அறை பேச்சு ஒன்றை சனாதிபதி சீயுடன் மேற்கொள்வார். யூக்கிறேன், சீன-ஐரோப்பிய பொருளாதாரம் இரண்டும் இந்த உரையாடலில் பிரதான பங்கை கொண்டிருக்கும். 2024ம் ஆண்டு சீனா ஐரோப்பிய […]
சனிக்கிழமை வரை இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் சூறாவளி அல்லது கடும் மழைக்கு சுமார் 600 பேர் பலியாகி உள்ளனர். இலங்கையில் Ditwah சூறாவளிக்கு இதுவரை பலியானோர் தொகை 128 பேர் ஆக உள்ளது. மேலும் 170 பேரின் இருப்பிடம் இதுவரை அறியப்படவில்லை. இலங்கையை விட்டு Ditwah சூறாவளி தற்போது வெளியேறி உள்ளது என்றாலும் மலை நாடுகளின் வெள்ளம் கீழ் பகுதிகளுக்கு வரும் போது ஆபத்து தொடரும். அதேவேளை இந்தோனேசியாவில் அப்பகுதியை தாக்கிய Senyar சூறாவளிக்கு 300 பேர் […]
தற்போது Ditwah என்று அழைக்கப்படும் சூறாவளியாக மாறியுள்ள வங்காள விரிகுடா தாழமுக்கம் இலங்கையின் வடக்கு/வடகிழக்கு திசையில் சென்று பின் இந்தியாவின் கிழக்கே தாக்கவுள்ளது. இம்முறை இந்து சமுத்திர சூறாவளிக்கு Ditwah என்று யேமென் (Yemen) வழங்கிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. வியாழன் 27ம் திகதி பொத்துவில் பகுதி கடலில் ஆரம்பித்த Ditwah வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகரும் என்று Indian Meteorological Department (IMD) கணிப்பிடுகிறது. இது பதுளை, பொலநறுவை பகுதிகள் ஊடு நகர்ந்து பின் இலங்கையின் வடக்கு, வடமத்தி, வடகிழக்கு பகுதிகளில் 200 mm அளவுக்கும் அதிகமான […]
ஹாங் காங் தொடர் மாடியில் புதன்கிழமை ஏற்பட்ட தீக்கு பலியானோர் தொகை 40 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போதும் 279 பேரின் இருப்பிடம் அறியப்படவில்லை. தீயால் காயமடைந்தோரில் 45 பேரின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் தீ சுமார் 15 மணித்தியாலங்களாக பரவுகிறது. கடுமையான காற்று வீச்சு தீ பரவலுக்கு காரணமாகி உள்ளது. இந்த தீ தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் இருவர் கட்டுமான நிறுவனத்தின் director பதவிகளில் உள்ளவர் என்றும் மூன்றாம் நபர் […]
ஹாங் காங் நகரின் Tai Po பகுதியில் உள்ள Wang Fuk Court என்ற 1,984 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொடர் மாடியை புதன்கிழமை தீ பற்றிக்கொண்டது. இதுவரை தீயணைப்பு படையினர் ஒருவர், வயது 37, உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர். தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் இந்த மாடிகளை சுற்றி மூங்கில் கட்டுமான அல்லது திருத்த வேலைகளுக்கு பயன்படும் சாரக்கட்டு கட்டப்பட்டு இருந்தது. அந்த சராகட்டும் தீ வேகமாக பரவ காரணமாகியது. 1983ம் ஆண்டு கட்டப்பட்ட […]
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான 10 மாதங்களில் இலங்கை $14 பில்லியன் பெறுமதியான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது என்கிறது Export Development Board (EDB). இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் 10 மாதங்களுக்கான அதிக ஏற்றுமதி வருமானம். இந்த ஆண்டின் 12 மாதங்களுக்கான மொத்த ஏற்றுமதி குறி $18 பில்லியன். கடந்த ஆண்டின் முதல் 10 மாத கால பகுதியின் ஏற்றுமதியிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி 6% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த ஏற்றுமதியுள் சாதாரண […]