ஏற்கனவே ஈரான் மூடிய ஹோர்முஸ் ஊடான கப்பல் போக்குவரத்தை தானும் மூடுவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாகிஸ்தான் பேச்சுக்களில் தீர்வு ஏற்படாததாலேயே ரம்ப் தானும் ஹோர்முசை மூடுகிறார். எப்போதும் முன் பின் சிந்துக்காது மிரட்டும் ரம்ப் இம்முறையும் ஹோர்முஸ் பாதையில் செல்லும் “any and all” கப்பல்களும் தடுக்கப்படும் என்று முதலில் கூறினார். அவரின் முதல் அறிவிப்பு சவுதி, UAE, கட்டார், பஹ்ரைன், குவைத் ஆகிய அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு செல்லும் […]
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பாகிஸ்தானில் சனி, ஞாயிறு இடம்பெற்ற யுத்த நிறுத்த பேச்சு இணக்கம் எதுவுமின்றி முடிந்துள்ளது. அதனால் ஹோர்முஸ் கடல் வழி தொடர்ந்தும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. பேச்சில் நேரடியாக பங்கெடுக்க பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க உதவி சனாதிபதி JD வன்ஸ் தீர்வு இன்றி மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார். அத்துடன் தற்போது இன்னொரு பேச்சுக்கு திட்டம் எதுவும் இல்லை என்று இரு தரப்பும் கூறியுள்ளன. அமெரிக்காவின் அடுத்த நகர்வு ரம்பின் கைகளில் உள்ளது. அதேவேளை சீனா ஈரானுக்கு […]
இன்று சனிக்கிழமை அமெரிக்காவும், ஈரானும் பாகிஸ்தானில் கூடி சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்க உள்ளன. அனால் இந்த பேச்சுக்கள் முழுமையான பயன்களை அளிப்பதற்கான சந்தர்பங்கள் மிக குறைவாகவே உள்ளன. அமெரிக்க சனாதிபதி ரம்பின் பிரதான நோக்கம் பாகிஸ்தான் பேச்சுக்கள் மூலம் ஹோர்முஸ் கப்பல் பாதையை முற்றாக திறக்க வைப்பதே. இந்த பணியை அமெரிக்க ஆயுதம் செய்ய முடியாது உள்ளது. மற்றபடி அமெரிக்கா ஈரானை தொடர்ந்தும் இஸ்ரேலின் விருப்பத்துக்கு ஏற்ப அடக்கி ஆளவே விரும்புகிறது. உலகம் சவுதி, UAE, கட்டார், பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளிடம் பெரும் […]
பாகிஸ்தானின் முயற்சியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அறிவித்திருந்த யுத்த நிறுத்தம் தற்போதும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இஸ்ரேல் லெபனான் மீது தொடரும் தாக்குதலே இதற்கு காரணம். மேற்படி யுத்த நிறுத்தம் லெபனான் மீதான தாக்குதல்களையும் இடைநிறுத்தும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் ஆரம்பித்த சிறிது நேரத்தில், புதன்கிழமை, 10 நிமிட இடைவெளியில் 100 க்கும் அதிகமான தாக்குதல்களை லெபனானில் செய்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு குறைந்தது 182 பலியாகியும், 900 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். […]
ஹோர்முஸ் நீரிணையை தனது இராணுவ பலத்தால் திறக்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் இறுதி நேரத்தில் ஈரான் மீதான தாக்குதலை 2 கிழமைகளுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளார். மேற்படி யுத்த நிறுத்த காலத்தில் ஹோர்முஸ் நீரினை ஊடாக அதிகரித்த அளவில் கப்பல்கள் பயணிக்கும் என்றாலும் ஹோர்முஸ் தொடர்ந்தும் ஈரானின் கடுப்பாட்டிலேயே இருக்கும். ஈரானிடம் அனுமதி பெற்ற கப்பல்கள் மட்டுமே இதனூடு பயணிக்கலாம். ஹோர்முஸ் ஊடான போக்குவரத்து தனது கட்டுப்பாடில் இருக்கவேண்டும் என்று அடம்பிடித்த ரம்ப் தற்போது அந்த நிபந்தனையை கைவிட்டு உள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் […]
ஈரானில் தான் நினைத்தவற்றை சாதிக்க முடியாமையால் மூர்க்கத்தின் உச்சத்தில் குமுறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். ரம்பால் ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியவில்லை, ஒரு கைப்பொம்மை அரசை அமர்த்த முடியவில்லை, ஈரானின் எண்ணெய் வளத்தை திருட முடியவில்லை, இறுதியில் தான் ஆரம்பித்த யுத்தத்தை தன்னால் நிறுத்த முடியவில்லை. இறுதியில் நியூ யார்க் நேரப்படி செவ்வாய் இரவு 8:00 மணிக்கு முன் ஈரான் தான் கூறும்படியான யுத்த நிறுத்தத்துக்கு வரவிடின் ஈரான் “civilization will die tonight” என்று மிரட்டி […]
வெள்ளிக்கிழமை ஏப்ரல் 3ம் திகதி ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 யுத்த விமான விமானிகளில் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு இருந்தார். ஆனால் இரண்டாவது விமானியை மீட்க அமெரிக்கா சுமார் $500 மில்லியன் பெறுமதியான இழப்புகளை அடைந்துள்ளது. இரண்டாம் விமானி ஈரானின் Zagros மலை பகுதில் ஒளிந்து இருப்பதை அறிந்த அமெரிக்கா அவரை மீட்க திட்டமிட்டது. அப்பகுதியில் இருந்த கைவிடப்பட்ட விமான நிலையம் ஒன்றில் தரை இறங்கி விமானியை மீட்க திட்டம் தீட்டப்பட்டது. திட்டப்படி ஞாயிறு அமெரிக்காவின் […]
முதலில் அமெரிக்காவின் இரு விமானிகளை கொண்ட F-15 Eagle வகை யுத்த விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விழுந்த விமானிகளை காப்பாற்ற குறைந்தது இரண்டு அமெரிக்க Black Hawk ஹெலிகள் முயன்றன. விழுந்த ஒரு F-15 விமானியை அமெரிக்க ஹெலிகள் காப்பாற்றி உள்ளன. அப்போது இவ்விடத்தில் ஈரானின் படைகள் இருந்திருக்கவில்லை என்றாலும் இங்கிருந்த போலீசார் சுட்டதில் ஹெலிகள் சிறு பாதிப்புகளுடன் மீண்டன. பின்னர் இவ்விடத்துக்கு விரைந்த A-10 Thunderbolt யுத்த விமானம் ஒன்றும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டு […]
ஈரானில் இருந்து 600,000 பரல் எரிபொருளுடன் இந்திய குஜராத் மாநிலத்து Vadinar என்ற துறைமுகத்தை நோக்கி சென்ற Ping Shun என்ற மசகு எண்ணெய் காவும் கப்பல் தனது பயணத்தை திடீரென சீனாவின் Dongying நோக்கி திருப்பி உள்ளது. இந்த கப்பல் இந்திய துறைமுகத்தை நாளை ஏப்ரல் 4ம் திகதி அடைய இருந்த நிலையில், மேற்படி எண்ணெய்க்கு உரிய பணத்தை இந்தியா இதுவரை ஈரானுக்கு செலுத்தவில்லை என்பதே கப்பல் திசை திரும்பியதற்கு காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் விருப்பத்துக்கு […]
பலஸ்தீனர் மீது காழ்ப்பு கொண்ட இனவாதியான இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Ben-Gvir இந்த சட்டத்தின் திங்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்கினார். இந்த சட்டப்படி பெரும் குற்றம் செய்யும் West Bank பலஸ்தீனருக்கு automatic மரண தண்டனை வழங்கப்படும். இங்கே நகைப்புக்குரிய விசயம் என்னவென்றால் West Bank பலஸ்தீனர் குற்றங்கள் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் இராணுவ நீதிமன்றால் விசாரணை செய்யப்படும். ஆனால் ஆக்கிரமித்துள்ள இடங்களில் ஐ.நா. விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக குடியேறியுள்ள யூதர்களின் குற்றங்கள் civil நீதிமன்றில் விசாரிக்கப்படும். இந்த சட்டத்தை […]