சிங்கப்பூரில் அரச ஊழியரின் Internet நிறுத்தம்

சிங்கப்பூர் அந்நாட்டின் அரச ஊழியர்களின் Internet தொடர்புகளை முற்றாக துண்டிக்க முடிவு செய்துள்ளது. அரச அலுவலகங்களில் ஊழியர்கள் தமது கணனிகளின் மூலம் Internet தொடர்புகளை இதுவரை கொண்டிருந்தனர். ஆனால் வளந்துவரும் Internet தாக்குதல் காரணமாக சிங்கப்பூர் இந்த தொடர்புகளை துண்டிக்கிறது. . Internet தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும் அந்த கணனிகள் தொடர்ந்தும் தம்முள் இணைக்கப்பட்டு இருக்கும். அதனால் அரச கணனிகள் தம்முள் தொடர்ந்தும் தொடர்புகளை கொண்டிருக்கும். வெளி Internet தொடர்புகள் மட்டுமே துண்டிக்கப்படும். சுமார் 100,000 கணனிகள் இவ்வாறு […]

அமெரிக்க காங்கிரஸ்சில் இந்திய பிரதமர் மோடி

இன்று புதன் இந்தியாவின் பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸ்சில் சமூகம் கொண்டு உரையாற்றி உள்ளார். தனது உரையில் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதாரத்திலும், பாதுகாப்பில் இணைந்து செயற்படவேண்டும் என்று கூறியுள்ளார். . 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஆகுமுன் மோடிக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தடை செய்திருந்தது. இவர் குயாரத்தின் முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில், 2002 ஆம் ஆண்டில், அங்கு இடம்பெற்ற இஸ்லாமியர் மீதான வன்முறைகளுக்கு சுமார் 1000 பேர் பலியாகி இருந்தனர். மோடி அதை […]

75 இலட்சம் பெறுமதியான கஞ்சா கைப்பற்றல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 75 இலட்சம் இந்திய நாணயங்கள் பெறுமதியான கஞ்சா (marijuana) பொலிசாரால் இன்று இந்தியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னாருக்கு எதிரே உள்ள இராமநாதபுர மாவட்டத்து கரையோரத்திலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. . கடத்தல் தகவல் கிடைத்த பொலிசார் உடன் அங்கு சென்று 170 பொதிகளில் இருத்த 158 kg கஞ்சாவை கைப்பற்றி உள்ளனர். இவ்வாறு இலங்கை வரும் கடத்தல் கஞ்சா, பின் வேறு நாடுகளுக்கும் கடத்தப்படுகிறதாம். இந்த கஞ்சா பொதுவாக ஆந்திராவின் வட பகுதியிலும், கேரளாவிலும் […]

முகமட் அலி 74 வயதில் மரணம்

பிரபல குத்துச்சண்டை வீரர் முகமட் அலி இன்று அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலத்தில் உள்ள Phoenix நகரில் காலமானார். இவருக்கு அப்போது வயது 74. இவர் நுரையீரல் சம்பந்தமான நோயினாலும், Parkinson நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தவர். . இவர் தனது 12 வயது முதல் குத்துச்சண்டை பயிற்சி பெற்று, 22 ஆவது வயதில் தனது முதல் குத்துச்சண்டை வெற்றியையும் பெற்று இருந்தார். . குத்துச்சண்டையில் மட்டுமல்லாது அரசியல், மதம், சமூகம் என பல துறைகளிலும் இவர் பிரபலமாக […]

இந்தியாவில் கணவன் கொலை, கனடிய மனைவி விசாரணையில்

Jaskaran Singh என்ற 38 வயதுடைய கனடிய பிரசை ஒருவர் மார்ச் மாதம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள Sawara என்ற இடத்தில் சிலரால் கொலை செய்யப்பட்டு இருந்தார். இவர் கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் Pawandeep Kaur என்ற தனது மனைவியை பிரிந்து சென்று பஞ்சாப்பில் வாழ்ந்து வந்தவர். இவர்களுக்கு தற்போது தாயுடன் வாழும் இரண்டு பிள்ளைகளும் உண்டு. . பிரிந்து வாழ்ந்தாலும், கணவனின் மரணத்தின் பின் மனைவி இந்தியா சென்று மரணவீட்டில் பங்கு கொண்டிருந்தார். […]

நக்பூர் ஆயுதக்கிடங்கில் விபத்து, 17 இராணுவம் பலி

இந்தியாவின் நக்பூர் (Nagpur) நகருக்கு அண்மையில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கு ஒன்றில் செய்வாய் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 17 இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். மேலும் 20 இராணுவத்தினர் வரை காயமடைந்தும் உள்ளனர். . இந்த ஆயுத கிடங்கே இந்தியாவில் உள்ள மிக பெரிய ஆயுத கிடங்காகும். Pulgaon என்ற இந்த ஆயுத கிடங்கு நக்பூரில் இருந்து 110 km தென்மேற்கே உள்ளது. இந்த ஆயுத கிடங்கு சுமார் 7,000 ஏக்கர் அளவிலானது. […]

எகிப்து கொலைகளில் ஐரோப்பாவுக்கும் பங்குண்டு

எகிப்தின் சிசி (Sisi) ஆட்சியில் இடம்பெறும் அடக்குமுறைகளிலும், கொலைகளிலும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்குண்டு என்கிறது Amnesty International. . 2013 ஆம் ஆண்டு ஜூலையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்து, பின் ஜனாயக முறைப்படி ஆட்சியில் இருந்த கட்சியை தடைசெய்துவிட்டு, இராணுவ அதிகாரத்துடன் ஆட்சிக்கு வந்த சிசி தனக்கு எதிரானவர்களை சிறையில் அடைத்தும், கொலைகள் செய்தும் வருகிறார். Amnesty Internationalன் கருத்துப்படி 2013 ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி சிசிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் […]

ஈரான் துறைமுகத்தில் இந்தியா முதலீடு

திங்கள் அன்று இந்தியாவும் ஈரானும் துறைமுக கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளன. அதன்படி இந்தியா ஈரானில் உள்ள Chabahar துறைமுகத்தை $500 மில்லியன் (0.5 பில்லின்) செலவில் அபிவிருத்தி செய்யும். இதன் நோக்கம் ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இந்த துறைமுகத்துடன் இணைத்து மூன்று நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை வளர்ப்பதாகும். குறிப்பாக இந்தியாவை பாகிஸ்தானுக்கு அப்பால் வர்த்தக போக்குவரத்தில் இணைப்பதாகும். . இந்த துறைமுகத்தில் இருந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நகர்களுக்கு நவீன வீதிகளும் அமைக்கடவுள்ளது. . ஈரானின் […]

வியட்னாமில் ஒபாமா, ஆயுதத்தடை நீக்கம்

இன்று திங்கள் அமெரிக்க ஜனாதிபதி வியட்னாம் சென்றுள்ளார். சுமார் 40 வருடங்களின் முன் அமெரிக்க இராணுவம் வியட்னாமில் இருந்து விரட்டப்பட்டு இருந்தாலும் சமீப காலங்களில் அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் உறவு பலமாகி வந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தை விரட்டிய கம்யூனிஸ்ட் கட்சியே இன்றும் வியட்னாமை ஆண்டாலும் Bill Clinton, Obama ஆகியோர் பதவில் உள்ளபோதே வியட்னாம் சென்றுள்ளனர். . ஒபாமாவின் இன்றைய பயணத்தின்போது அமெரிக்கா வியட்னாம் மீதான தனது 40 வருட பழமையான ஆயுத தடையையும் நீக்கியுள்ளது. . […]

ஜப்பானிய பெண் கொலை, அமெரிக்கர் கைது

ஜப்பானின் ஒக்கிநாவா (Okinawa) பகுதியில் வாழ்ந்த 20 வயது பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் இராணுவத்தினர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Kenneth Franklin Shinzato என்ற இந்த முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் இன்று ஒக்கிநாவா பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஓக்கினாவாவில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றில் சாதாரண தொழில் புரிகிறார். Rina Shimabukuro என்ற இந்த 20 வயது பெண் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் […]