அமெரிக்க சனாதிபதி தனது 80ம் பிறந்த தின நாளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஈரானுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை கையொப்பமிட அறிவித்திருந்தார். ஆனால் ஈரான் அதற்கு அவசரப்படவில்லை. இன்று திங்கள் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தான் இலத்திரனியல் கையொப்பம் இட்டுள்ளதாக ரம்ப் கூறியுள்ளார். ஆனால் ஈரான் கையொப்பம் இடவில்லை. ஒரு தரப்பு மட்டும் கையொப்பம் இட்டால் அது ஒப்பந்தம் ஆகுமா? ஈரான் தாம் வெள்ளிக்கிழமையே ஜெனீவாவில் வைத்து கையொப்பம் இட உள்ளதாக கூறியுள்ளது. லெபனானும் இந்த […]
சுவிஸ் தனது மொத்த சனத்தொகையை 10 மில்லியனுக்கு மேலே செல்ல விடாது தடுக்கும் நோக்கத்தில் செய்த வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளை பெறாது தோல்வியில் முடிந்துள்ளது. மிகையான குடிவாளரால் மிரண்ட, குடிவரவாளர் மீது காழ்ப்பு கொண்ட Swiss People’s Party நடைமுறை செய்யவிருந்த திட்டமே தோல்வியில் முடிகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 55% வாக்குகள் மேற்படி திட்டத்தை நிராகரித்து உள்ளன. 2002ம் ஆண்டு சுவிஸ் சனத்தொகை 7.3 மில்லியன் ஆக இருந்தது. தற்போதைய சனத்தொகை 9.1 மில்லியன். சுவிஸ் சனத்தொகையின் 27% அந்த […]
Tesla என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனம், SpaceX என்ற விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை ஆரம்பித்த இலான் மஸ்க்கின் (Elon Musk) மொத்த வெகுமதி $1.11 டிரில்லியன் ($1,110 பில்லியன்) ஆகியுள்ளது. இதனால் இலான் மஸ்க் உலகின் முதலாவது டிரில்லியன் வெகுமதி கொண்டவர் ஆகிறார். இவரின் வெகுமதி வங்கியில் உள்ளது போன்று திடமான பணமல்ல. பங்கு சந்தையின் வெகுமதி திடீரென பெருமளவில் கூடலாம், குறையலாம். 2020ம் ஆண்டு $28 பில்லியன் வெகுமதியை மட்டும் கொண்டிருந்த மஸ்க் உலகின் 35 […]
இன்று வெள்ளிக்கிழமை முதல் இலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு அமெரிக்காவின் NASDAQ பங்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. IPO (Initial Public Offering) கொள்வனவாளருக்கு மட்டும் 556 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்று $135 ஆக விற்பனை செய்து $75 பில்லியனை SpaceX பெற்றுள்ளதும் (556 மில்லியன் பங்குகள் X $135/பங்கு = $75 பில்லியன்). பங்கு சந்தை வரலாற்றில் இதுவே மிக பெரிய தொகையாகும். இதற்கு முன் சவுதியின் Aramco நிறுவனம் 2019ம் ஆண்டு […]
அமெரிக்காவும், ஈரானும் யுத்த நிறுத்தத்தில் இருப்பதாக கூறிக்கொண்டு யுத்தம் செய்கின்றன. அமெரிக்கா இன்று ஈரானின் இரண்டு குடிநீர் சேமிப்பு தாங்கிகளை குண்டு வீசி அழித்துள்ளது. இதுவரை இரு தரப்பும் மறு தரப்பு மீது சிறு தாக்குதல்களையே செய்து வந்திருந்தன. ஆனால் செவ்வாய்க்கிழமை ஈரானை தாக்கிய அமெரிக்காவின் விலை உயர்ந்த ($25 மில்லியன் பெறுமதியான) Apache வகை ஹெலி ஒன்றை சுட்டு விழுத்தியிருந்தது. இதற்கு பதிலடியாகவே அமெரிக்கா ஈரானின் இரண்டு குடிநீர் தொட்டிகளை GBU-39 வகை குண்டுகளை வீசி அழித்துள்ளது. […]
அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்ட ஐரோப்பியர் தொகை வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 11% ஐரோப்பியர் மட்டுமே அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று புதன்கிழமை வெளிவந்த European Council on Foreign Relations என்ற அமைப்பின் ஆய்வு கூறியுள்ளது. 2024ம் ஆண்டில் இத்தொகை 22% ஆகவும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இத்தொகை 16% ஆகவும் இருந்தது. ஐரோப்பிய நாடுகள் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகள் உதவிக்கு வராது என்றே பெரும்பாலான ஐரோப்பியர் தற்போது கருதுகின்றனர். அமெரிக்க ஆயுதங்களை […]
ஏப்ரல் மாதத்தின் பின் முதல் தடவையாக ஈரான் இஸ்ரேல் மீது ஞாயிறு ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் அமெரிக்காவும் ஈரானும் யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்தபோது இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி இருந்தது. ஆனால் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை தொடர்ந்தது. ஞாயிறு இஸ்ரேல் லெபனான் மீது பாரிய தாக்குதல் ஒன்றை செய்தது. உடனே ஈரான் வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலின் Ramat David விமான தளம் மீது […]
அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக UAE, பஹ்ரைன், குவைத், கட்டார் ஆகிய நாடுகளின் உதவியுடன் பெப்ரவரி 28ம் ஆரம்பித்த தாக்குதல் இன்று 100ம் நாளை அடைந்து தொடர்கிறது. அமெரிக்க சனாதிபதி தாம் ஈரான் யுத்தத்தை வென்றுவிட்டோம் என்று உண்மைக்கு மாறாக கூறி வந்தாலும், ஈரானின் கைகளே தற்போது மேலோங்கி உள்ளது. ஈரான் யுத்த கள உண்மைக்கு மாறான ரம்பின் கூற்றுக்கள்: February 28: ஈரான் மீதான Operation Epic Fury என்ற அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பம். March 1: யுத்தம் “intended […]
சீன சனாதிபதி சீ திங்கள் வட கொரியா பயணிக்கிறார் என்று இன்று வெள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சீ வட கொரியாவில் திங்கள் 8ம் திகதியும், செவ்வாய் 9ம் திகதியும் தங்கியிருப்பார். இந்த ஆண்டு ரம்ப், பூட்டின் உட்பட 17 நாடுகளின் தலைவர்கள் சீனா சென்று சீயை சந்தித்திருந்தாலும் சீ இந்த ஆண்டு வெளிநாடு ஒன்று செல்வது இதுவே முதல் தடவை. இந்த ஆண்டு சீனாவும், வட கொரியாவும் 1961ம் ஆண்டு செய்து கொண்ட Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance […]
குவைத் விமான நிலையம் மீது ஈரான் செய்த ஏவுகணை தாக்குதலால் Terminal 1 பலத்த பாதிப்பை அடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியும், பலர் காயமடைந்தும் உள்ளனர். தாக்குதலின் பின் Terminal 1 சேவைகள் தடைப்பட்டதால் விமான சேவைகள் மெல்ல Terminal 4 க்கு நகர்த்தப்படுகின்றன. பெப்ரவரி மாத தாக்குதலில் சேதம் அடைந்திருந்த Terminal 1 கடந்த திங்கள் கிழமையே திருத்த வேலைகளின் பின் சேவைக்கு வந்திருந்தது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கா ஈரானின் Qeshm தீவு மீது தாக்குதல் […]