கலிபோர்னியாவில் கட்டுக்கடங்கா காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தற்போது காட்டுத்தீ காலம். இன்று சனிக்கிழமை இரவு வரை 2 தீயணைப்பு படையினரும், 3 பொதுமக்களும் (70 வயது, 5 வயது, 4 வயது) இந்த தீகளுக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 327 சதுர km பரப்பளவு (80,906 ஏக்கர்) காடுகளும், குடியிருப்பு பகுதிகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன. . Redding என்ற நகரில் மட்டும் 38,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். . அதீத வெப்பம் மட்டுமன்றி, பலத்த காற்றும் […]

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான்?

பாகிஸ்தான் தேர்தல் கடந்த புதன்கிழமை இடம்பெற்று இருந்தாலும் இன்றுவரை இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவரை சுமார் 23% வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற கணக்கெடுப்புகளின்படி இம்ரான் கான் தலைமையிலான PTI கட்சி 109 ஆசனங்களையும், நாவாஸ் ஷரீபின் PML-N கட்சி 67 ஆசனங்களையும், பெனாசிர் பூட்டோவின் மகன் தலைமயிலான PPP கட்சி 41 ஆசனங்களையும் பெறுகின்றன. . முறைப்படி கணக்கெடுப்புகள் வெளியிடப்படாவிடினும், இம்ரான் கான் தனது வெற்றியை ஏற்கனவே கொண்டாடி உள்ளார். ஏனைய காட்சிகள் வழக்குகளை […]

Facebook சந்தை பெறுமதி $100 பில்லியனால் வீழ்ச்சி

அமெரிக்காவின் Facebook நிறுவன பங்குச்சந்தை பங்கு ஒன்றின் பெறுமதி இன்று வியாழன் சுமார் $41.24 ஆல் வீழ்ந்துள்ளது. நேற்று புதன் Facebook பங்கு ஒன்று (FB, NASDAQ) $217.50 பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த பங்கு ஒன்று $176.26 பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. . இன்றைய வீழ்ச்சி காரணமாக Facebook நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி சுமார் $100 பில்லியனால் வீழ்ந்துள்ளது. உலக அளவில், பங்குகளை (stock) கொண்ட நிறுவனம் ஒன்றின் அதிகூடிய ஒருநாள் பங்குச்சந்தை […]

சீனாவில் LingWu Dragon எலும்புகள் அகழ்வு

சீனாவின் வடமேற்கு பகுதியான LingWu என்ற இடத்தில் புதிய வகை dinosaur எலும்புகள் அகழ்வு செய்யப்பட்டுள்ளன. LingWuLong Shenqi (LingWu Amazing Dragon) என்று பெயரிடப்பட்ட இந்த தாவரம் உண்ணும் விலங்குகள் சுமார் 175 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் சென்று கூறப்படுகிறது. . சீனாவில் அகழ்வு செய்யப்பட்ட இந்த விலங்குகளின் தலையில் இருந்து வால் நுனி வரையான நீளம் சுமார் 57 அடி என்று அறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பின், இதுவரை கணித்திருந்த காலத்துக்கும் 15 மில்லியன் […]

கிரேக்கத்து காட்டுத்தீக்கு 74 பேர் பலி

கிரேக்கத்தின் (Greece) தலைநகரான எதன்ஸ் (Athens) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு (wildfire) இதுவரை குறைந்தது 74 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 170 படுகாயம் அடைந்துள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. . திங்கள்கிழமை முதல் எதன்ஸ் நகருக்கு கிழக்கே ஒரு தீயும், மேற்கே ஒரு தீயுமாக இரண்டு காட்டுத்தீகள் வேகமாக பரவியுள்ளன. தீக்குள் அகப்பட்ட பலர் கடற்கரைகளுக்கு தப்பியோட, அங்கிருந்து வள்ளங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் நீந்த முனைந்து கடலுள் […]

காடையருக்கு மாலை போட்ட ஹாவர்ட் கல்விமான்

அண்மையில் அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்திய அரசியல்வாதி ஒருவர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை பா.ஜ கட்சியின் Civil Aviation அமைச்சர் Jayant Sinha தொடர்பானது. . Sinhaவின் தொகுதியில் இந்து காடையர்கள் சிலர் Alimuddin Ansari என்ற ஒரு இஸ்லாமிய வர்த்தகரை அவரின் வாகனத்தில் இருந்து இழுத்து வன்மையாக தாக்கி உள்ளனர். அந்த இஸ்லாமிய வர்த்தகர் மாட்டு இறைச்சி கடத்துகிறார் என்றே கூறி தாக்கப்பட்டார். . அந்த இஸ்லாமியரை மீட்ட […]

புதன்கிழமை பாகிஸ்தான் தேர்தல்

வரும் புதன்கிழமை, ஜூலை 25 ஆம் திகதி, பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெறவுள்ளது. வளமை போலவே இம்முறையும் அங்கு தேர்தல் வன்முறைகளின் மத்தியில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு கிழமையில் மட்டும் சுமார் 160 பேர் தேர்தல் வன்முறைகளுக்கு பலியாகி உள்ளனர். . முன்னாள் கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் (Imran Khan, வயது 65) இம்முறை பாகிஸ்தான் இராணுவத்தின் விருப்பத்துக்குரிய போட்டியாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரின் கட்சியான PTIயும், இராணுவதினரும் அவ்வாறு தமக்குள் எந்தவிதமான இரகசிய […]

சீனா இலங்கைக்கு மேலும் $295 மில்லியன் உதவி

சீன ஜனாதிபதி Xi JinPing இலங்கை ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மேலும் $295 மில்லியன் உதவி வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலநறுவையில் சீனாவின் உதிவியுடன் நிறுவப்படும் வைத்தியசாலை ஒன்றின் அடிக்கல் நடும் வைபவம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். . “சீனாவின் தூதுவர் இ சியன் லிஅங் (Yi XianLiang) இந்த அடிக்கல் நடும் தினத்தை குறிப்பிட என் வீட்டுக்கு வந்தபொழுதே சீனாவின் ஜனாதிபதி மேலும் ஒரு அன்பளிப்பை செய்யவுள்ளதை கூறினார்” என்றுள்ளார் சிறிசேன. . ஜனாதிபதி […]

சீனாவின் ஆளுமையில் 5G , CIA எச்சரிக்கை

தற்போது உலகின் எந்த பகுதியிலும் இருக்கக்கூடிய அதிவேக cell phone இணைப்பு 4G தொழில்நுட்பத்தை கொண்டது. ஆனால் அடுத்து வரவுள்ள 5G cell phone தொழில்நுட்பம் 4G வேகத்துடன் ஒப்பிடுகையில் பலமடங்கு வேகமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் HD தரம் கொண்ட திரைப்படத்தை சில நிமிடங்களில் download செய்ய வழிசெய்யும். அத்துடன் சாரதியில்லாத வாகனங்கள் போன்றவற்றை இயக்கவும் இது நன்கு பயன்படும். . இதுவரைகாலமும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளே தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தின. தற்போதுள்ள 4G […]

சிங்கப்பூரில் 1.5 மில்லியன் நோயாளர் தகவல்கள் திருட்டு

சிங்கப்பூரில் 1.5 மில்லியன் நோயாளர்களின் பெயர், தேசிய அடையாள இலக்கம், முகவரி, பிறந்த திகதி போன்ற தகவல்கள் திருடப்பட்டு உள்ளாதாக வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் 160,000 நோயாளர் உட்கொள்ளும் மருந்து விபரங்களும் கூடவே திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. . சிங்கப்பூர் பிரதமரின் விபரங்களும் இந்த திருட்டுள் அடங்கும். . SingHealth என்ற சிங்கப்பூரின் மிகப்பெரிய வைத்தியசேவை அமைப்பின் கணனிகளை ஊடுருவியே இந்த தகவல்கள் களவாடப்பட்டு உள்ளன. . சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த cyber attack […]