தற்போது அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் ஒருமுறை தனது உடல்நல குறைபாட்டை காரணம் காட்டி மாத்தறை நீதிமன்றுக்கு வருவதை தவிர்த்து உள்ளார். பசில் மற்றும் அவரின் மனைவியின் சகோதரி Ayoma Galappatti உட்பட 4 பேர் மீது 50 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 1.5 ஏக்கர் நிலம் ஒன்றை மாத்தறை Browns Hill பகுதியில் திருட்டாக பெற்றனர் என்று மாத்தறை நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த விசாணைக்கு செல்வதையே பசில் தவிர்த்து வருகிறார். Ayoma வும் நீதிமன்றம் […]
Democratic கட்சியை சார்ந்த 6 அரசியல்வாதிகள் நேற்று வியாழக்கிழமை இணைந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த 90 செக்கன்கள் நீள வீடியோவில் அமெரிக்க படையினரை சனாதிபதி ரம்ப் விடும் சட்டவிரோத (unlawful) கட்டளைகளை நடைமுறை செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளனர். இந்த வீடியோவால் மூர்க்கம் கொண்ட ரம்ப் மேற்படி 6 உறுப்பினர்களின் செயல் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்வது போன்றது என்றும், இவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியும் (punishable by DEATH) என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்க சட்டத்தில் படைகளின் […]
வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை வழங்குவதற்கு பெரிய இடராக இருப்பது இந்தியாவின் பூகோள இருப்பிடம். பாகிஸ்தான் மீது அல்லது சீனா மீது பறந்தால் மட்டுமே இந்திய விமானங்கள் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விரைவாக, குறைந்த செலவில் அடையலாம். ஆனால் பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுக்கு நட்பு நாடுகள் அல்ல. இதுவரை Air India போன்ற இந்திய விமான சேவைகள் பாகிஸ்தான் மேலாக பறந்தே வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை அடைந்தன. ஆனால் அண்மையில் […]
அமெரிக்க மற்றும் உலக புள்ளிகளுக்கு 18 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளை வழங்கிய Jeffrey Epstein என்பவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (Epstein files) பகிரங்கம் செய்ய அமெரிக்காவின் காங்கிரஸ் வாக்கெடுப்பு மூலம் உத்தரவிட்டுள்ளது. ரம்பின் Republican கட்சி உறுப்பினர், Democratic கட்சி உறுப்பினர் உள்ளடங்க மொத்தம் 427 காங்கிரஸ் உறுப்பினர் ஆவணங்களை வெளியிடுவதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். Clay Higgins என்ற Republican உறுப்பினர் ஒருவர் மட்டுமே எதிராக வாக்களித்து உள்ளார். அமெரிக்காவில் யூத குடும்பத்தில் பிறந்த எப்ஸ்-ரீன் (Epstein) […]
இன்று செவ்வாய் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட சவுதி இளவரசர் Mohammed bin Salman னை அமெரிக்க சனாதிபதி ரம்ப் புகழ்ந்து பாடியுள்ளார். இளவரசரிடம் பத்திரிகையாளர் ஜமால் கசோகி (Jamal Khashoggi) படுகொலை தொடர்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரையும் கடுமையாக சாடியுள்ளார் ரம்ப். ஒரு விருந்தினரை மேற்படி பத்திரிகையாளர் நோகடித்துள்ளார் என்று ரம்ப் பாய்ந்துள்ளார். 2018ம் ஆண்டு அக்காலத்தில் அமெரிக்கராக, Washington Post பத்திரிகையாளராக இருந்த ஜமால் கசோகி என்பவரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்து, அமிலங்கள் மூலம் உடல் கரைக்கப்பட்டு, […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் 20-point காசா திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று வாக்கெடுப்பு மூலம் ஆதரவு வழங்கியுள்ளது. மொத்தம் 15 உறுப்பினரை கொண்ட பாதுகாப்பு சபையில் 13 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க ரஷ்யாவும், சீனாவும் வாக்களியாது இருந்துள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தமது வீட்டோ வாக்கு மூலம் திட்டத்தை தடை செய்யவும் இல்லை. ஹமாஸ் இந்த திட்டத்தை ஏற்க மறுத்துள்ளது. குறிப்பாக மேற்படி ரம்ப் திட்டம் பலஸ்தீனர் நாட்டுக்கு தெளிவான வழியை கொண்டிருக்கவில்லை என்கிறது ஹமாஸ். மேற்படி திட்டம் […]
Facebook எங்கும் பொய் செய்திகள், தரவுகள் என்பது யாரும் அறிந்தது. அவ்வாறு பொய் செய்திகள், தரவுகள் Facebook மூலம் பரவுகின்றன என்று Facebook அறிந்தும் வருமானத்தை மட்டும் விரும்பும் Facebook அதை தடுக்கவில்லை. இலங்கையரான கீத் சூரியபுர (Geeth Sooriyapura) என்பவர் இலங்கையில் இருந்து கொண்டே பிரித்தானிய வெள்ளையர்களை வெறிகொள்ள செய்யும் செய்தியை AI மூலம் உருவாக்கி, பிரித்தானிய வெள்ளையர்களுக்கு பரப்பி $300,000 உழைத்துள்ளார் என்கிறது The Bureau of Investigative Journalism (TBIJ) மற்றும் Institute of […]
அமெரிக்க யூத குடும்பத்தில் பிறந்து, Yale மற்றும் Harvard பல்கலைக்கழகங்களில் பயின்று, Princeton பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பதவி வகித்து, ஐ.நா. வின் விசேட Rapporteur அதிகாரியாக பதவி வகித்த 95 வயது Richard Falk என்பவரை கனடிய எல்லை அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். இவர் Ottawa நகரில் வெள்ளி, சனி இடம்பெற இருந்த “Palestine Tribunal on Canadian Responsibility” என்ற பலஸ்தீன அமர்வு ஒன்றுக்கு செல்ல வியாழன் Toronto விமான நிலையம் வந்தபோதே 4 மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். […]
புதிய சட்டப்படி பிரித்தானியா செல்லும் அகதிகள் அவர்களின் அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிரந்தர குடியுரிமையை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று பிரித்தானிய Home Secretary Shabana Mahmood அறிவித்துள்ளார். அதனால் இந்த 20 ஆண்டு கால வதிவுரிமை ஒரு தற்காலிக சலுகையாக மாறியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் அகதிகளின் நாடுகளின் நிலைமை வழமைக்கு திரும்பினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர். ஆனாலும் இந்த 20 ஆண்டுகளில் நன்றாக படித்து அல்லது நல்ல வர்த்தக முயற்சிகள் […]
இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்ற தமிழ் பெற்றாருக்கு 1986ம் ஆண்டு பிறந்த கோகுலேஸ்வரன் என்ற மகனுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்க இந்தியாவை கேட்டுள்ளது Madras High Court. 1955ம் ஆண்டு Citizenship Act பிரிவு 3(1) இல் குறிப்பிட்டபடி 1955ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி வரை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் இந்திய குடியுரிமை கொண்டவர். அதன்படி 1986ம் ஆண்டு பிறந்த கோகுலேஸ்வரன் இந்திய கடவுச்சீட்டு பெறும் உரிமை கொண்டவர் என்கிறது Madras […]