Moderna கரோனா மருந்து 94.5% வெற்றிகரமானது

Moderna கரோனா மருந்து 94.5% வெற்றிகரமானது

Moderna என்ற மருத்துவ நிறுவனம் தாம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து அதன் 3 ஆம் கட்ட பரிசோதனையில் 94.5% அளவில் கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாக கூறுகிறது. சில தினங்களுக்கு முன்னர் Pfizer தனது கரோனா தடுப்பு மருந்து 90% அளவிலான கரோனா எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறி இருந்தது. Moderna தயாரிக்கும் மருந்து – 20 Celsius (minus 20 C) வெப்பநிலையில் வைத்திருக்கப்படக்கூடியது. அதனால் இது பல வறிய நாடுகளுக்கு இலகுவில் […]

எரித்திரியாவுள்ளும் நுழையும் எதியோப்பிய யுத்தம்

எரித்திரியாவுள்ளும் நுழையும் எதியோப்பிய யுத்தம்

அண்மை காலங்களாக இடம்பெற்றுவரும் எதியோப்பிய (Ethiopia) உள்நாட்டு யுத்தம் அண்டை நாடான எரித்திரியா (Eritrea) உள்ளும் நுழைந்துள்ளது. சனிக்கிழமை எதியோபியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சில எரித்திரிய தலைநகரில் உள்ள விமான நிலையத்தை தாக்கி உள்ளன. Tigray People’s Liberation Front (TPLF) என்ற எதியோப்பியாவின் வடமேற்கு பகுதியான Tigray பகுதி ஆயுத குழுக்களுவுக்கும் எதியோப்பிய அரச படைகளுக்கும் இடையே அண்மை காலமாக யுத்தம் இடம்பெற்று வருகிறது. எதியோப்பிய அரச படைகளின் உதவிக்கு எரித்திரியா வந்துள்ளதாக TPLF […]

இன்று முதல் உலகின் பெரிய வர்த்தக வலயம்

இன்று முதல் உலகின் பெரிய வர்த்தக வலயம்

இன்று ஞாயிரு (2020/11/15) முதல் 15 நாடுகள் அங்கம் கொண்ட  Regional Comprehensive Economic Partnership (RCEP) என்ற வர்த்தக வலயம் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும், ASEAN அமைப்பில் அங்கத்துவம் கொண்ட புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாஒஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகளுமே இந்த புதிய வர்த்தக வலயத்துள் நுழைந்து உள்ளன. இந்த உடன்படிக்கையில் வர்த்தகம், சேவைகள், முதலீடுகள், இணைய வர்த்தகம், […]

இலங்கை கடலில் சீன கப்பல்கள், இந்தியா சந்தேகம்

இலங்கை கடலில் சீன கப்பல்கள், இந்தியா சந்தேகம்

இலங்கை Exclusive Economic Zone அடங்கிய கடல் பகுதியில் சீனாவின் இரண்டு ஆய்வு கப்பல்கள் அதிக காலமாக செயற்படுவதால் இந்தியா சந்தேகம் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இலங்கையும் சீனாவும் சீனாவின் அட்மிரல் Zheng He என்ற 15 ஆம் நூற்றாண்டு சீன அரசியல் மற்றும் வர்த்தக பிரமுகரின் அமிழ்ந்த கப்பல்களையும் அவற்றில் இருந்த பொருட்களையும் கண்டெடுக்கும் பணிக்கு இணங்கி இருந்தன. களனி மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்கள் இதில் பங்கு கொண்டிருந்தாலும் பணிகள் முற்றாக சீனாவின் கையிலேயே இருக்கின்றன. இதுவரை மேற்படி கப்பல்கள் 12 […]

நியூசிலாந்துக்கு அமெரிக்க செல்வந்தர் படையெடுப்பு?

நியூசிலாந்துக்கு அமெரிக்க செல்வந்தர் படையெடுப்பு?

வழமைக்கு மாறாக அதிக அளவு செல்வந்த அமெரிக்கர் நியூசிலாந்துக்கு நகர முயல்வதாக தரவுகள் கூறுகின்றன. அமெரிக்கா கரோனாவை முறைப்படி கட்டுப்படுத்தாமை, அங்கு போலீசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவின் எதிர்கால பொருளாதார நிலைமை ஆகியனவே சில அமெரிக்கரின் இந்த நகர்வு முயற்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது. சுமார் $2 மில்லியன் முதலீடு செய்வோர்க்கு நியூசிலாந்து investor (golden) visa வழங்கி வருகிறது. வழமையாக செல்வந்த சீனர்கள் இந்த விசாவில் அதிகம் நாட்டம் கொண்டடிருந்தனர். கடந்த வருடம் 43% golden […]

அமெரிக்க கரோனா உதவி பணத்திலும் கொள்ளை

அமெரிக்க கரோனா உதவி பணத்திலும் கொள்ளை

கரோனா அமெரிக்காவை உலுக்கியபோது பெரும்தொகை சிறு வர்த்தகங்கள் வருமான குறைவால் தவித்தன. அவை தொடர்ந்தும் தமது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது இருந்தது. அந்நிலையில் அமெரிக்க அரசு சிறு வர்த்தகங்களுக்கான Payment Protection Program (PPP) என்ற பண உதவி திட்டத்தை ஆரம்பித்தது. PPP மூலம் அமெரிக்கா சுமார் $500 பில்லியன் பணத்தை இடரில் உள்ள சிறு வர்த்தகங்களுக்கு வழங்கியது. அரசு வேகமாக பெரும்தொகை பணத்தை வழங்க, திருட்டுகளும் வளர்ந்திருந்தன. குறைந்தது 11,000 சந்தேகத்துக்குரிய PPP விண்ணப்பங்கள் தற்போது […]

பைடென் குழு மீது மேலுமொரு சாதி குற்றச்சாட்டு

பைடென் குழு மீது மேலுமொரு சாதி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாகவுள்ள பைடென் குழு ஒன்றின் மீது மேலுமொரு இந்திய சாதி பாகுபாட்டு குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கரோனா தடுப்பு பணிகளை சனாதிபதி சார்பில் செய்யும் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட குழுவில் அங்கத்துவம் கொண்ட Celine Gounder மீதானதே இந்த புதிய குற்றச்சாட்டு. Celine னின் தந்தையார் தமிழ்நாட்டு பெரும்பாளையம் கிராமத்து தமிழர். 1960 களில் அமெரிக்கா சென்ற Raj Natarajan என்பவரே பின்னர் தனது பெயரை Raj Gounder என்று மாற்றி இருந்தார். Gounder […]

Pfizer மருந்து வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டா

Pfizer மருந்து வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டா

Pfizer (f-பைசர்) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 90% காரோன தடுப்பு வல்லமை கொண்ட மருந்து தற்போதைக்கு வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டாது என்று கூறப்படுகிறது. அதனால் வறிய நாடுகள் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தயாரிக்கும் கரோனா மருந்தைகளையே எதிர்பார்க்கவேண்டும். 2021 ஆம் ஆண்டு முடிவுக்குள் Pfizer சுமார் 1.3 பில்லியன் கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கவுள்ளது. ஆனால் அதில் 1.1 பில்லியன் ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய […]

பைடெனிடம் ஆட்சியை கையளிக்க மறுக்கிறார் ரம்ப்

பைடெனிடம் ஆட்சியை கையளிக்க மறுக்கிறார் ரம்ப்

நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் தோல்வியை அடைந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் அப்பதவியை பைடெனிடம் (Biden) கையளிக்கும் பணிகளை தடுத்து வருகிறார். மிக சிறுதொகை வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில் அதையே ரம்ப் காரணமாக்கியுள்ளார். ரம்ப் போதிய electoral வாக்குகளை பெற சந்தர்ப்பம் இல்லை என்றாலும், அனைத்து வாக்குகளையும் எண்ணிய பின்னரே மாநிலங்கள் சட்டப்படியான தொகைகளை கூறும். அதற்கு மேலும் சில காலம் தேவை. அமெரிக்காவில் தேர்தல் பணிகள் மாநிலங்களின் பணி. […]

Pfizer கரோனா மருந்து 90% தடுப்பை அளிக்கிறது

Pfizer கரோனா மருந்து 90% தடுப்பை அளிக்கிறது

Pfizer (f-பைசர்), BioNTech ஆகிய இரண்டு மருத்துவ தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்து 90% தடுப்பை அளிக்கிறது என்று அந்த நிறுவனங்கள் இன்று கூறி உள்ளன. அதனால் இந்த தடுப்பு மருந்து ஒரு திடமான கரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது. மேற்படி தடுப்பு மருந்து, 3 ஆம் கட்ட பரிசோதனையாக, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜென்டீனா, தென்னாபிரிக்கா, துருக்கி ஆகிய 6 நாடுகளில் வாழும் 43,500 மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இவர்களில் எவருக்கும் […]