கிரேக்கத்து காட்டுத்தீக்கு 74 பேர் பலி

கிரேக்கத்தின் (Greece) தலைநகரான எதன்ஸ் (Athens) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு (wildfire) இதுவரை குறைந்தது 74 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 170 படுகாயம் அடைந்துள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. . திங்கள்கிழமை முதல் எதன்ஸ் நகருக்கு கிழக்கே ஒரு தீயும், மேற்கே ஒரு தீயுமாக இரண்டு காட்டுத்தீகள் வேகமாக பரவியுள்ளன. தீக்குள் அகப்பட்ட பலர் கடற்கரைகளுக்கு தப்பியோட, அங்கிருந்து வள்ளங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் சிலர் நீந்த முனைந்து கடலுள் […]

காடையருக்கு மாலை போட்ட ஹாவர்ட் கல்விமான்

அண்மையில் அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்திய அரசியல்வாதி ஒருவர் தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை பா.ஜ கட்சியின் Civil Aviation அமைச்சர் Jayant Sinha தொடர்பானது. . Sinhaவின் தொகுதியில் இந்து காடையர்கள் சிலர் Alimuddin Ansari என்ற ஒரு இஸ்லாமிய வர்த்தகரை அவரின் வாகனத்தில் இருந்து இழுத்து வன்மையாக தாக்கி உள்ளனர். அந்த இஸ்லாமிய வர்த்தகர் மாட்டு இறைச்சி கடத்துகிறார் என்றே கூறி தாக்கப்பட்டார். . அந்த இஸ்லாமியரை மீட்ட […]

புதன்கிழமை பாகிஸ்தான் தேர்தல்

வரும் புதன்கிழமை, ஜூலை 25 ஆம் திகதி, பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெறவுள்ளது. வளமை போலவே இம்முறையும் அங்கு தேர்தல் வன்முறைகளின் மத்தியில் இடம்பெறவுள்ளது. கடந்த ஒரு கிழமையில் மட்டும் சுமார் 160 பேர் தேர்தல் வன்முறைகளுக்கு பலியாகி உள்ளனர். . முன்னாள் கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் (Imran Khan, வயது 65) இம்முறை பாகிஸ்தான் இராணுவத்தின் விருப்பத்துக்குரிய போட்டியாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரின் கட்சியான PTIயும், இராணுவதினரும் அவ்வாறு தமக்குள் எந்தவிதமான இரகசிய […]

சீனா இலங்கைக்கு மேலும் $295 மில்லியன் உதவி

சீன ஜனாதிபதி Xi JinPing இலங்கை ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மேலும் $295 மில்லியன் உதவி வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலநறுவையில் சீனாவின் உதிவியுடன் நிறுவப்படும் வைத்தியசாலை ஒன்றின் அடிக்கல் நடும் வைபவம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார். . “சீனாவின் தூதுவர் இ சியன் லிஅங் (Yi XianLiang) இந்த அடிக்கல் நடும் தினத்தை குறிப்பிட என் வீட்டுக்கு வந்தபொழுதே சீனாவின் ஜனாதிபதி மேலும் ஒரு அன்பளிப்பை செய்யவுள்ளதை கூறினார்” என்றுள்ளார் சிறிசேன. . ஜனாதிபதி […]

சீனாவின் ஆளுமையில் 5G , CIA எச்சரிக்கை

தற்போது உலகின் எந்த பகுதியிலும் இருக்கக்கூடிய அதிவேக cell phone இணைப்பு 4G தொழில்நுட்பத்தை கொண்டது. ஆனால் அடுத்து வரவுள்ள 5G cell phone தொழில்நுட்பம் 4G வேகத்துடன் ஒப்பிடுகையில் பலமடங்கு வேகமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் HD தரம் கொண்ட திரைப்படத்தை சில நிமிடங்களில் download செய்ய வழிசெய்யும். அத்துடன் சாரதியில்லாத வாகனங்கள் போன்றவற்றை இயக்கவும் இது நன்கு பயன்படும். . இதுவரைகாலமும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளே தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தின. தற்போதுள்ள 4G […]

சிங்கப்பூரில் 1.5 மில்லியன் நோயாளர் தகவல்கள் திருட்டு

சிங்கப்பூரில் 1.5 மில்லியன் நோயாளர்களின் பெயர், தேசிய அடையாள இலக்கம், முகவரி, பிறந்த திகதி போன்ற தகவல்கள் திருடப்பட்டு உள்ளாதாக வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன் 160,000 நோயாளர் உட்கொள்ளும் மருந்து விபரங்களும் கூடவே திருடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. . சிங்கப்பூர் பிரதமரின் விபரங்களும் இந்த திருட்டுள் அடங்கும். . SingHealth என்ற சிங்கப்பூரின் மிகப்பெரிய வைத்தியசேவை அமைப்பின் கணனிகளை ஊடுருவியே இந்த தகவல்கள் களவாடப்பட்டு உள்ளன. . சிங்கப்பூர் அதிகாரிகள் இந்த cyber attack […]

இஸ்ரேல் ஒரு “யூதர் நாடு”, கூறுகிறது புதிய சட்டம்

இஸ்ரேல் பாராளுமன்றம் (Knesset) நேற்று வியாழன் ‘தனி சிங்கள சட்டம்’ போன்ற ஒரு யூதர் சார்பு சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டப்படி இஸ்ரேல் ஒரு “யூதர் நாடு” (nation of the Jewish people). இஸ்ரேலில் யூதர் பெரும்பான்மையாக இருப்பினும் அந்நாட்டின் 21% சனத்தொகை அரபு மக்களை கொண்டது. இந்த சட்டத்தை பலரும் ஒரு இனவாத சட்டம் என்று வர்ணித்துள்ளனர். . மொத்தம் 120 உறுப்பினரை கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றின் 62 பேர் இந்த புதிய […]

கூகுளுக்கு $5 பில்லியன் தண்டம்

Google நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுமார் $5 பில்லியன் (4.3 பில்லியன் யூரோ) தண்டம் விதித்துள்ளது. கடந்த 3 வருடங்களாக செய்துவந்த விசாரணைகளின் பின்னரே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Google தனது பலத்தால் மற்றைய நிறுவனங்களை அழிக்கும் செயல்பாடுகளை வரும் 90 நாட்களுள் நிறுத்தவேண்டும் என்றும், மறுப்பின் மேலும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. . கூகிளின் அன்ட்ரொய்ட் (Android) operating system (OS) பெருமளவு smart phone சந்தையை கொண்டுள்ளது. Samsung, […]

தன் கூற்றை மூடிமறைக்கும் ரம்ப்

பின்லாந்தின் (Finland) தலைநகரான கெல்சிங்கியில் (Helsinki) ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டினை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ரம்ப், 2016 ஆண்டின் ஊடுருவல் தொடர்பான தனது நாட்டு புலனாய்வு அமைப்பான FBIயின் விசாரணை முடிவுகளை நம்பாது, புட்டினின் கூற்றை நம்புவதாக கூறியிருந்தார். அதனால் பலத்த எதிர்ப்புகளை அமெரிக்காவில் எதிர்கொண்ட ரம்ப், நேற்று தனது கூற்றில் ‘not’ தவறிவிட்டது என்றுள்ளார். . 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற காலத்தில், அந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் நோக்கில், ரஷ்ய […]

மிகப்பெரிய ஐரோப்பா-ஜப்பான் வர்த்தக உடன்படிக்கை

ஐரோப்பிய ஒன்றியமும் (EU), ஜப்பானும் நேற்று மிகப்பெரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கி உள்ளன. இதை விரும்பாத அமெரிக்காவின் ஜனாதிபதி ரம்ப், ஜப்பானை பொருளாதரம் மூலம் தண்டிக்க முனையலாம் என்றும் நம்பப்படுகிறது. . இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட மிக பெரிய வர்த்தக உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கைக்குள் சுமார் 600 மில்லியன் மக்கள் அடங்குவர். அத்துடன் இந்த உடன்படிக்கை சுமார் $150 பில்லியன் வர்த்தகத்தையும் உள்ளடக்கும். . இந்த உடன்படிக்கை […]